ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 16.
'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 7.
'சுக்கிர-புத பகவான்கள்'
காலபுருஷ இராசியில்... ஒரு கட்டுக்குள் இருக்கும் காலம்... அந்தக் கட்டிலிருந்து விடுபடுவதற்கு... 'சுக்கிர பகவான்' ஒரு காரணமாக அமைகிறார் என்பதையும்... அதை விளக்குவதற்கு... 'புத பகவானின்'... அறிவு மற்றும் புத்தி என்ற காரகத்துவங்கள் எவ்வாறு உதவுகின்றன... என்பதை ஆய்வோம்.
'சுக்கிர பகவான்'... 'குடும்பம்' மற்றும் 'தொடர்பு-களத்திரம்' என்ற ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்...'என்ற வகையில்... காலம் என்ற கட்டுக்குள் 'பாதுகாப்பாக' இருக்கும் ஜீவர்களை... அந்தக் கட்டுக்குள் இருந்து விடுவித்து 'பாதுகாப்பு உணர்வற்ற'... தொடரும் பிறவிகளுக்குள் சிக்க வைத்துவிடுகிறார்.
'புத பகவான்'... 'தைர்யம்' மற்றும் 'ருண-ரோக-சத்ரு ஸ்தானங்கள்' என்ற... மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். இதன் சூட்சுமம்... 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்ற 'உலக வாழ்வின் பற்றுகளிலும்... பந்தங்களிலும்' சிக்கிக் கொள்ளாத அறிவை அவர் நல்குகிறார் என்பதே.
இந்த 'சுக்கிர பகவானின்' நிலையும்... 'புத பகவானின்' நிலையும்... எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒன்றுபடுகிறது என்பதைஆய்வோம்.
காலபுருஷ இராசியில்... 6 ஆமிடம் என்ற 'மறைவு ஸ்தானத்தில்'... 'நிறைந்த கல்வியை' ஞானத்துடன் வழங்கும்... 'புத பகவான்'... 'உச்சம்' என்ற பலமான நிலையை அடைகிறார். அங்கு... உலக வாழ்வை நோக்கி இழுக்கும் 'சுக்கிர பகவான்'... 'நீசம்' என்ற பலமற்ற நிலையை அடைகிறார்.
காலபுருஷ இராசியில்... 12 ஆமிடம் என்ற 'சுக-சயன-விரய ஸ்தானம்'... நமக்கு ஒன்றை உணர்த்துகிறது. அது, காலம் என்ற 'பாதுகாப்புக்' கட்டுக்குள்ளிருந்து நம்மை விடுவித்து... 'இரு மாரகம்' என்ற நிலையில் நம்மை பற்றுகளிலும்... பந்தங்களிலும்... இழுத்து விடும்... 'சுக்கிர பகவான்' இந்த 12 ஆமிடத்தில் 'உச்சம்' என்ற பலமான நிலையை அடைவதுதான். அதுபோல... 'காலத்தின் கட்டுக்குள்' நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமையுள்ள புத்தியைக் கொடுக்கும்... 'நிறைவான கல்வியை' அளிக்கும் 'புத பகவான்' இந்த 12 ஆமிடத்தில் 'நீசம்' என்ற பலமற்ற நிலையை அடைவதுதான்.
காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.
ஸாய்ராம்.
'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 7.
'சுக்கிர-புத பகவான்கள்'
காலபுருஷ இராசியில்... ஒரு கட்டுக்குள் இருக்கும் காலம்... அந்தக் கட்டிலிருந்து விடுபடுவதற்கு... 'சுக்கிர பகவான்' ஒரு காரணமாக அமைகிறார் என்பதையும்... அதை விளக்குவதற்கு... 'புத பகவானின்'... அறிவு மற்றும் புத்தி என்ற காரகத்துவங்கள் எவ்வாறு உதவுகின்றன... என்பதை ஆய்வோம்.
'சுக்கிர பகவான்'... 'குடும்பம்' மற்றும் 'தொடர்பு-களத்திரம்' என்ற ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்...'என்ற வகையில்... காலம் என்ற கட்டுக்குள் 'பாதுகாப்பாக' இருக்கும் ஜீவர்களை... அந்தக் கட்டுக்குள் இருந்து விடுவித்து 'பாதுகாப்பு உணர்வற்ற'... தொடரும் பிறவிகளுக்குள் சிக்க வைத்துவிடுகிறார்.
'புத பகவான்'... 'தைர்யம்' மற்றும் 'ருண-ரோக-சத்ரு ஸ்தானங்கள்' என்ற... மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். இதன் சூட்சுமம்... 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்ற 'உலக வாழ்வின் பற்றுகளிலும்... பந்தங்களிலும்' சிக்கிக் கொள்ளாத அறிவை அவர் நல்குகிறார் என்பதே.
இந்த 'சுக்கிர பகவானின்' நிலையும்... 'புத பகவானின்' நிலையும்... எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒன்றுபடுகிறது என்பதைஆய்வோம்.
காலபுருஷ இராசியில்... 6 ஆமிடம் என்ற 'மறைவு ஸ்தானத்தில்'... 'நிறைந்த கல்வியை' ஞானத்துடன் வழங்கும்... 'புத பகவான்'... 'உச்சம்' என்ற பலமான நிலையை அடைகிறார். அங்கு... உலக வாழ்வை நோக்கி இழுக்கும் 'சுக்கிர பகவான்'... 'நீசம்' என்ற பலமற்ற நிலையை அடைகிறார்.
காலபுருஷ இராசியில்... 12 ஆமிடம் என்ற 'சுக-சயன-விரய ஸ்தானம்'... நமக்கு ஒன்றை உணர்த்துகிறது. அது, காலம் என்ற 'பாதுகாப்புக்' கட்டுக்குள்ளிருந்து நம்மை விடுவித்து... 'இரு மாரகம்' என்ற நிலையில் நம்மை பற்றுகளிலும்... பந்தங்களிலும்... இழுத்து விடும்... 'சுக்கிர பகவான்' இந்த 12 ஆமிடத்தில் 'உச்சம்' என்ற பலமான நிலையை அடைவதுதான். அதுபோல... 'காலத்தின் கட்டுக்குள்' நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமையுள்ள புத்தியைக் கொடுக்கும்... 'நிறைவான கல்வியை' அளிக்கும் 'புத பகவான்' இந்த 12 ஆமிடத்தில் 'நீசம்' என்ற பலமற்ற நிலையை அடைவதுதான்.
காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.
ஸாய்ராம்.
















