Saturday, August 17, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமம் : பகுதி 11. 'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 2. செவ்வாய் பகவான்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் :

பகுதி 11. 'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 2. செவ்வாய் பகவான்.

கால புருஷ இராசிக்கு... இராசியாதிபதியாகிறார்... ஆற்றலின் நாயகரான 'செவ்வாய் பகவான்'. இவர் 'பூமிக்கு' காரகத்துவமாகிறார்.

ஒன்றாக இருக்கும் ஒரு வஸ்து... ஒரு வடிவத்தைப் பெறும் போது இரண்டாகிறது. எவ்வாறு...'1'... என்ற எண்ணை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வரும் போது, அது 'அடி'.... 'முடி' என்ற இரு நிலைகளை அடைகிறதோ... அது போலவே... இந்த பிரபஞ்சத்தில், 'பூமி' என்றொரு 'கிரக அமைவு' ஏற்படும் போது... அது 'பூமி என்ற அடியையும்'... 'பிரபஞ்சம் என்ற வானையும்' உள்ளடக்கியதாகிறது.

பூமியின் காரகத்துவமகிற 'செவ்வாய் பகவான்'... கால புருஷ இராசிக்கு 'இராசியதியாவதற்குக்' காரணம்... 'சூரிய பகவானுக்கு' அடுத்தபடியாக... 'அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் கிரகமாக' இந்த 'செவ்வாய் பகவான்' இருப்பதால்தான். கிரகங்களின் வரிசையில்... 'சூரிய பகவானுக்கு' வழங்கப்படும் அதே 'சிவப்பு வண்ணமே'... இந்த 'செவ்வாய் பகவானுக்கும்'... வழங்கப்படுகிறது.

மேலும்... இந்த 'சூரிய பகவான்'... கால புருஷ இராசிக்கு... 'பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுமாகிறார்'. இவரின் அளவில்லா ஆற்றலை... தனது பூர்வமாகக் கொண்டுதான்... 'செவ்வாய் பகவான்'... தனது இராசியாதிபத்தியத்தை வழி நடத்துகிறார்... என்றால் மிகையில்லை.

'சூரிய பகவானின்' ஆற்றலை உள்வாங்கி... அதைத் தன் இராசியாதிபத்தியத்தின் மூலமாக... காலத்தை வழி நடத்தும் 'ஆற்றல் நாயகனாக'... இந்த 'செவ்வாய் பகவான்' திகழ்கிறார்.

இவரின் 'ஆற்றல் அளவுடன் இருக்கும் போது'... தனது 4 ஆம் பார்வையால்... 'சுக ஸ்தானத்தை' (4 ஆமிடமான 'கடக இராசி'...) பார்வை செய்து... காலத்தை 'சுகப்பட வைப்பதும்'... தனது 7 ஆம் பார்வையால்... 'தொடர்பு ஸ்தானத்தை' (7 ஆமிடமான 'துலா இராசி'...) பார்வை செய்து... காலத்தை 'இணைவுடனும், இசைவுடனும்' நடத்துவதும்... 8 ஆம் பார்வையால்... 'ஆயுள் ஸ்தானத்தை' (8 ஆமிடமான 'விருச்சிக இராசி'...) ஒரு 'நீண்ட நெடிய' சுகானுபவத்தையும் அளிப்பவராக இருக்கிறார்.

அதுவே... 'இவரின் ஆற்றல் அளவீடுகளை மீறும் போது'... சுகத்திற்கு எதிரான... துன்பத்தையும், இணைவுக்கு எதிரான எதிர்ப்புகளையும், நீண்ட நெடிய பயணத்திற்கு எதிரான குறுகிய காலத்தையும் அளிப்பதிலும் வல்லவராக இருக்கிறார்.

'காலத்திற்கான நோக்கத்தை' நிறைவேற்றுவதுதான்... இந்த காலபுருஷ இராசிநாதனின் கடமை. அதனை 'கடமை உணர்வுடன்' முழுமையாக முடிப்பதைக் குறிக்கும் வகையில்தான்... கர்ம ஸ்தானம் என்னும் 'ஜீவன ஸ்தானத்தில்'... 'உச்ச பலத்தைப்' பெறுகிறார்...  இந்த பயணத்தில்... காலம் அதன் 'சுகங்களை' இழக்க நேரிடும் என்பதைத்தான்... 'சுக ஸ்தானத்தில்' ... தனது 'நீச நிலையை' சுட்டிக் காட்டுகிறார்... இந்த 'செவ்வாய் பகவான்'.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...