Wednesday, August 7, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 9. கர்மவினை - விஞ்ஞான, மெய்ஞான ஆய்வு.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 9.

கர்ம வினை - விஞ்ஞான, மெய்ஞான ஆய்வு

'கர்ம வினைகள்' என்ற... ஒவ்வொரு மனித ஜீவனுக்குமிடையேயான எண்ணற்ற வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள்... என்ற 'மெய்ஞ்ஞானக்' கூற்றை... 'ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்குமிடையேயான குணம் மற்றும் பண்புகளின் வித்தியாசம்' என்பதன் அடிப்படியில்... 'விஞ்ஞானம்' பகுத்துப் பார்க்க விளைந்தது.

மெய்ஞானம் உணர்த்திய, மனித ஜீவர்களுக்கிடையேயான முரண்பட்ட பண்புகள் மற்றும் குண மாறுபாடுகளுக்கான காரணம்... அந்தந்த ஜீவர்களின் 'கர்ம வினைகள் என்பதுதான்.

கர்மவினைகள் என்பதை, பகுக்கும் போது, ஒரு ஜீவனுக்கு இரண்டு விதமான செயல் வடிவங்கள் இருப்பதை காண முடிகிறது. ஒன்று... 'தான் திட்டமிட்டு செயல்படுத்தும் செயல்கள்'. மற்றொன்று... தனக்கு 'வெளியிலிருந்து நேரும் சூழல்களுக்கு ஏற்ப எதிர்செயலை' மேற்கொள்வது.

இதன் இரண்டு வடிவ செயல்களுக்கும் 'விளைவுகள்' என்பது இருக்கவே செய்யும். இந்த விளைவுகள்தான் அந்த ஜீவனின் 'தற்கால வாழ்வையும்... 'தொடரும் பிறவிகளையும்'... நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு ஜீவனும் அதன் மனதில் உருவாக்கிக் கொள்ளும் 'எதிர்பார்ப்புகளுக்கு' ஏற்பவே. 'செயல்களிலும்... எதிர் செயல்களிலும்' ஈடுபடுகிறது. அதனால்தான்... அதன் 'விளைவுகளின் தொகுப்பான'... கர்ம வினைகள்... ஜீவனுக்கு ஜீவன் மாறுபடுகிறது.

இந்த அடிப்படையின் மூலமாக... ஒரே நேரத்தில், ஒரே காலத்தில் பிறந்த இரு வேறு ஜீவர்களின் வாழ்க்கைப் பயணத்தை... அதன் எண்ணற்ற மாறுபாடுகளை... குணங்களாக, பண்புகளாக, வாழ்வின் சூழலின் ஏற்றத் தாழ்வுகளாக, இன்ப-துன்ப நிகழ்வுகளாக மெலும் எண்ணற்ற வகைகளில் பகுத்து ஆராய... உருவாக்கப்பட்டதுதான் 'ஜோதிடக் கலை' என்ற இந்த 'வேதத்தின் அங்கம்'.

ஒவ்வொரு ஜீவனது வாழ்வையும்... நாள், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் என்ற ஐந்து அங்கங்களின் மூலமான 'ப்ஞ்சாங்கத்தின்' அடிப்படையில்...  ஜனனக் குறிப்பு, இராசி, நவாம்ஸம், கிரக பாத சாரங்கள், கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்பு.. என்ற அடிப்படை அமைப்புகளைக் கொண்ட... 'ஜோதிட சித்திரமாக்கி'... அதை 'ஒவ்வொரு ஜீவனின் கையிலும்' கொடுத்திருக்கிறது... மெய்ஞானம் வழங்கிய... ஜோதிடக் கலை.

இந்த ஜோதிடச் சித்திரத்தின் மூலமான 'பஞ்சாங்கம்' என்ற நாட்குறிப்பை... அன்றைய 'ரிஷிகள்' தமது 'அந்தர் ஞான திருஷ்டியின்' மூலமாக... 'வானியல் சாஸ்த்திரத்தின்' கூறுகளான 'கிரகங்களையும்... நட்சத்திரங்களையும்' அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள். அதன் மூலமாக உருவாக்கப்படும் 'ஜோதிட சித்திரத்தின்' வாயிலாக ஒவ்வொரு ஜீவனின் வாழ்வு நிலை மாறுபாடுகளை மிகத் துல்லியமாகக் கணித்து... அதை 'ஜோதிட விதிகளாக' உருவாக்கியிருக்கிறார்கள்.



விஞ்ஞானம் இதனை... ஜீவனுக்கு ஜீவன் என்ற முறையில் ஆய்வுக்கு உட்படுத்தும் போது... ஒவ்வொரு ஜீவனும் அதனதன் 'பண்புகளையும்... குணங்களையும்'... தனது 'பரம்பரையின் கூறுகளாக' எடுத்து வருகிறது... என்று வரையறுத்தது.

இந்தப் பண்புகளும்... குணங்களும் வெளிப்படுத்தும் மூலமாக... ஒவ்வொரு 'ஜீவனின் உடலிலும்' அமைந்த 'திசுக்கள்' என்ற 'செல்களை' மூலமாகக் கொண்டு... அந்த 'செல்களுக்குள்' இருக்கும் 'உட்கருவுக்குள்'... அமைந்திருக்கும்... இழைக்கற்றைகளான 'குரோமோசோம்களை' அதன் எண்ணிக்கை... அதனுள் அமைந்திருந்த 'ஜீன்கள்' என்ற மரபு அணுக்களின் வரிசை... என்பதை ஆதரமாகக் கொண்டு... ஒவ்வொரு ஜீவனின் 'பண்பு... குண வேறுபாடுகளை' ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இந்த ஆய்வு... 'வெவ்வேறு வகையான'... ஜீவன்களுக்கிடையாயான வேறுபாடுகளைத்தான் உறுதி செய்தது. உதாரணமாக 'மனிதர்களின் உடலில்' அமைந்த செல்களில் உள்ள 'குரோமோசோம்களின் எண்ணிக்கை 46' என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது 'இரண்டு 23 இழைவடிவங்களாக' அமைந்திருந்ததும் உறுதி செய்யப் பட்டது. அது போலவே 'சிம்பன்ஸி' போன்ற மனித இனத்தை ஒட்டிய பழக்க வழக்கங்களுடன் ஒப்பிடப்பட்ட 'ஒருவகை இனத்தின்'... 'குரோமோசோம்களின் எண்ணிக்கை'... 'இரண்டு 24 இழைக்கற்றைகளாக'... '48 குரோமோசோம்களைக்' கொண்டதாக அமைந்தது.

அப்படியென்றால்... 'ஒரே எண்ணிக்கை' கொண்ட 'ஏனைய ஜீவன்கள்' ஏறத்தாள 'ஒரே குண... பண்பு நலன்களைக்' கொண்டிருக்கும் போது... 'ஒரே எண்ணிக்கையைக் கொண்ட மனித இனத்தின் பண்புகளும்... குணங்களும் மட்டும் ஜீவனுக்கு ஜீவன் மாறுவது எவ்வாறு...? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தக் கேள்விக்கு விடையாக தொடர்ந்த ஆய்வில்... 'இருவேறு மனிதர்களின்' குரோமோசோம்களின்... ஜீன்களின் அடுக்கை... ஒவ்வொன்றாக ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். நிச்சியமாக இந்த ஆய்வு ஒரு உன்னத முடிவைக் கொண்டு வரும் என்று நம்பினார்கள். இந்த ஆய்வு மட்டும் வெற்றி பெற்றால்... தற்போது இருக்கும் 'ஆதார் அட்டை' போல ஒவ்வொருவர் கையிலும் ஒரு 'ஜீன்களின் அட்டவணை' இருந்திருக்கும். அது அந்த மனிதனின் அனைத்து குண... பண்புகளைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்த ஆய்வு... 'ஒரு எதிர்பாராத முடிவை' அளித்தது. அது... அந்த இருவேறு மனிதர்களின்... ஜீன்கள் ஒவ்வொன்றும்... 99% விகிதம் ஒத்துப் போனது. ஒரே 1% விகிதத்தில்தான் மாறுபட்டது. அந்த 'ஜீன்களின் அட்டவணை அமைப்புக்கான ஆய்வு'... இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த 1% விகித வித்தியாசத்தில்தான்... இந்த 'பிரப்ஞ்சப் படைப்பாளன்'... இவ்வளவு இரகசியமான... 'குண... பண்பு மாறுபாடடுகளை'...  புதைத்து வைத்திருக்கிறான்.



இதைத்தான் 'ஜோதிடம்' என்ற அரிய கலையின் மூலமாக... மெய்ஞானம் அன்றே வெளிப்படுத்தியது.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...