Saturday, November 23, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 43. 'ராகு பகவான் வெளிப்படுத்தும் கர்ம வினைப் பலன்கள்' - பகுதி 6.





'ராகு பகவானின்' அமைவு உணர்த்தும் கர்ம வினைப் பலன்கள் :

'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதகருக்கு கீழ்கண்டவாறு கிரகங்கள் அமைந்திருப்பதாகக் கொள்வோம்...

- லக்னத்தில் 'சந்திர பகவான்'... ரோகிணி நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'சுக்கிர பகவான்'... பூரம் நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'கேது பகவான்'... பூரம் நட்சத்திரத்தில்...

- 6 ஆமிடத்தில் 'சனி பகவான்'... சுவாதி நட்சத்திரத்தில்...

- 10 ஆமிடத்தில் 'ராகு பகவான்'... சதய நட்சத்திரத்தில்...

இந்த ஜாதகருக்கு... ஜனன காலத்தில் 'சந்திர பகவானின்' தசா...  ஏறத்தாள 9 வருடங்கள் எனக் கொண்டால்... இவர்... 'செவ்வாய் பகவானின்' 7 வருடங்களைக் கடந்து...  ஏறத்தாள தனது 16 ஆவது வயதிலிருந்து, 34 வயது வரை 'போகக்காரகன்' என்ற 'ராகு பகவானின்' 18 வருடங்களை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

'ராகு பகவான்' ஒருவரது 'பூர்வ புண்ணியமான - கர்ம வினைகளைச் சுமப்பவர்' என்பதன் படி... இந்த ஜாதகர், தனது முந்தைய பிறவிகளில்...

- தனது சுக வாழ்வுக்காக ஏங்கியவராக இருந்திருப்பார். கலைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்து... அதற்கான வாய்ப்புகள் அமையாது தவித்திருப்பார். இதை சுக ஸ்தானத்தில் இருக்கும் 'சுக்கிர-கேது பகவான்களின்' இணைவு சுட்டிக் காட்டுகிறது.

- கடினமான சூழலில் பிறந்து...  தனது வாழ்வைக் கடந்திருப்பார். மனதில் கனவுகளுடனும்... கற்பனைகளுடனும் இருந்திருந்த அவருக்கு... அவையெல்லாம் நிறைவேறாது போயிருப்பதை... 6 ஆமிடத்தில் அமர்ந்திருக்கும் 'சனி  பகவானும்', லக்னத்தில் அமர்ந்திருக்கும் 'சந்திர பகவானும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

- பிறவிகளப் பற்றிக் கூறும் போது... ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி உண்டு... என்று வேதம் கூறுகிறது. இவ்வாறு, இத்தனை கற்பனைகளுடனும், ஏக்கத்திலும் இருந்த இந்த ஜாதகரின் இந்தப் பிறவியில்...இந்த 'கர்ம வினைகளின் விளவுகளைத்தான்...' ராகு பகவான் 10 ஆமிடத்தில் இருந்து பிரதிபலிக்கிறார்.

இந்த 18 வருடங்களைக் கொண்ட 'ராகு பகவானின்' காலம் ஜாதகரின் தக்க வயதில் வருவதால்... 16 வயதிலிருந்து, 34 வயது வரையிலான... இந்தப் பிறவியில்... 'சென்ற பிறவிகளின் ஏக்கங்களையெல்லாம்... தீர்த்துக் கொள்ளும் காலமாக இவருக்கு அமையும்'.  அதற்கு ஏற்றபடி... 'ராகு பகவான்'...

- தனது 'நட்சத்திர சாரத்தில்'(சதயம்) அமர்கிறார்.

- லக்னத்திற்கு 'தர்ம-கர்மாதிபதிகள்' என்ற 'சனி பகவானின்' வீட்டில்...                  கேந்திரத்தில் அமர்கிறார்.

- தனது நட்சத்திரமான 'சுவாதி நட்சத்திரத்தைக்' கொண்டு, தனக்கு வீடு                கொடுத்திருக்கும் 'சனி பகவானை' இயக்குகிறார்.

- இந்த 'சனி பகவானோ' 6 அமிடத்தில் அமர்ந்தாலும்... 'உச்ச பலத்தைப்'                  பெருகிறார்.

- லக்னாதிபதியாகிய... 'சுக்கிர பகவானால்' பார்க்கப்படுகிறார். சுக்கிர                      பகவானோ, தனது சுய நட்சத்திரத்திலேயே (பூரம்) அமைந்திருக்கிறார்.

- மேலும், இந்த ஜாதகரின் வாழ்வில்... 'சனி பகவானின் தசா' (19 வருடங்கள்)... 50 வயதிற்கு மேல் வருகிறது. 'சனி பகவான்' தர்ம கர்மாதிபதியாகி... இவருக்கு அனைத்து பாக்கியங்களையும் வழங்க வேண்டிய ஆதிபத்திய நாயகானாகிறார். ஆதலால்... தனது வீட்டில் அமர்ந்திருக்கிற...  'ராகு பகவான்' அவரது தசாக் காலத்தில் (18 வருடங்கள்)... தான் அளிக்க வேண்டிய அனைத்து 'சுக-பாக்கியங்களையும்' இவருக்கு அனுபவமாக்குகிறார்.

இந்த 'போகக்காரகரான'... 'ராகு பகவான்' அளிக்கும் சுக-போகங்கள் அனைத்தும் அவரை மேலும், மேலும் உலகவாழ்வுக்குள்தான், இழுத்துச் செல்லும். போதும் என்ற மனமின்றி, தொடர்ந்து... செல்வத்தை தேடுபவராகவும்... பெரும் தனவந்தரான பின்...'கனவுத் தொழிற்சாலை' என்ற 'திரைத்துறையிலும்'... அரசியலில் 'ஒரு பின்புலமாக' இருப்பவராகவும் இருப்பார்.

'ராகு பகவானின்' அமைவு... ஜாதகரின் 'புண்ணிய பலன்கள்' என்ற ஏக்கங்களைத் தீர்க்க வேண்டியிருப்பதால்... இந்த அமைவின் முலம்... அதைத் தீர்த்து வைக்கின்றார்.

தொடர்ந்து... 'கேது பகவானின்' அமைவு... ஒரு ஜாதகரை எவ்வாறு... உலக வாழ்விலிருந்து மீட்டு... உள் வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது என்பதை... இறைவன் அருளோடு... பார்ப்போம்...

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...