Saturday, August 24, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமம் : பகுதி 12. 'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 3. சூரிய பகவான்

ஜோதிடமும் அதன் சூட்சுமங்களும் : பகுதி 12.

'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 3. சூரிய பகவான்.


கால புருஷ இராசிக்கு 'பூர்வ புண்ணியாதிபதியாகிறார்'... 'சூரிய பகவான்'... இந்த பூமியில் பிறந்திருக்கும் ஜீவன்கள் அனைத்தும், அதனதன் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பை அடைகின்றன.

அது போலவே காலம் என்ற நிலையின் மாறுதல்களுக்கு... அதன் மூலமான... 'பூர்வ புண்ணியத்தை' வழங்குபவராக... 'சூரிய பகவான்' இருக்கிறார். அவரின் ஆற்றலும்...சக்தியும்தான்... இந்த 'சூரியக் குடும்பத்தையே' உருவாக்கியும்... அதனை வழிநடத்துவதுமாக இருக்கிறது.

அவரின் பார்வை... 'லாப ஸ்தானமும்... பாதக ஸ்தானமுமான'... 11 ஆமிடத்திற்கு விரவுகிறது. இந்த பார்வை, இரண்டு விதமான விளைவுகளைக் குறிப்பிடுகிறது. அந்த ஆற்றல் 'மிதமானதாக' இருக்கும் போது... காலத்தின் 'விருத்தியும்'...  அந்த ஆற்றல் 'கடுமையாக' மாறும் போது... காலத்தின் 'அழிவும் ... சிதைவும்'... ஏற்படுகிறது.

'சூரிய பகவானின்' ஆற்றல்... கால புருஷ இராசியில், 'உச்ச பலத்தைப்' பெற்று இராசியாதிபதியான 'செவ்வாய் பகவானின்' பலத்துடன் இணைந்து 'கட்டுப்பாடுடன்'... இந்த ஆற்றலை... காலம் முழுவதுமாக விரவவிடுகிறது.

அதுவே... கால புருஷ இராசிக்கு 'தொடர்பு மற்றும்... இணைவு ஸ்தானமான'... 7 ஆமிடத்தில்... தனது 'ஆற்றலைக் குறைத்துக்' கொண்டு... தனக்கும்... தன்னோடு பயணிக்கும்... ஜீவன்களுக்குமிடையே... ஒரு ஒத்திசைவை ஏற்படுத்துகிறது.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...