திருக்குறல் உணர்த்தும் ஞானம் - பகுதி 4.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
என்ற குறளுக்கு பொதுவானதோர் விளக்கமாக... 'ஒருவரை உயர்த்தி தேவர் கூட்டத்தில் வைத்துவிடும் அடக்கம், அதுவே, அது...மீறப்படும் போது... இருளை ஒத்த வாழ்வினில் கொண்டு போய் சேர்த்து விடும்...' என்பதான பொருளாக அமையும்.
இந்தக் குறள்... 'எண்ணற்ற சிந்தனைகளின் ஊற்றாக' அமைகிறது என்றால் அது மிகையில்லை. இந்தக் குறளின் ஒவ்வொரு சொல்லும்... அதன் கையாடலும், அந்தத் 'தெய்வப் புலவனின்'... எண்ணிலடங்கா 'அருள் ஞான வெளிப்பாடுதான்'.
'அடக்கம்'... 'அடங்காமை'... என்ற இந்த சொற்களை சற்று ஆய்ந்தால்... எந்த ஒன்று... ஒரு புள்ளிக்குள் சென்று... கண்ணுக்கும் தெரியாமல்... மறைந்து விடுகிறதோ... அதற்குத்தான் 'அடங்கும்' தன்மை என்று பெயர்.
அது போலவே... எந்த ஒன்று... கண்களின் பார்வைக்கு உட்படாததோ... கண்களால் முழுமையாக பார்க்க முடியாததோ... அதற்குத்தான் 'அடங்காமை' என்ற தன்மையின் பெயர்.
அப்படி ஒரு 'வஸ்து' இருக்கிறதா...? என்றால், ஆம், இருக்கிறது. அது 'பரமாத்ம சொரூபம்' தான். அதை வருணிக்கும் போது... 'சனாதன முனிவர்களின்' கூற்றாக... '...எல்லாமாய்... அல்லதுமாய்...' என்ற கருத்தாடல்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அந்த பரமாத்ம சொரூபம்... இந்த ஜீவனுக்காக ஒரு 'ஆத்ம' ரூபத்தை எடுத்துக் கொள்கிறது. அது... அந்த ஜீவனுக்கான... 'ஜீவாத்மாவாக' வடிவம் பெற்றுக் கொள்கிறது. இந்த ஜீவாத்மாவுக்கு மூலம'ஆத்மாவாகவும்'... அது புறவுலகில் வெளிப்படும் இடம் 'மனமாகவும்' மாற்றம் பெறுகிறது. இந்த 'மனதின் விரிதலையும்'... 'அதன் சுருக்கத்தையுமே'... 'அடங்காமை' மற்றும் 'அடக்கம்' என்பதாக வடிவமைக்கிறார்... இந்த வார்த்தை சித்தர்.
மனம் என்பதை மூலமாகக் கொண்டே... இந்த ஜீவன் அதன் 'எண்ணங்களின் வெளிப்பாடாக'... தனது பிறவிக்கான 'கர்ம வினைகளை' அனுபவிக்கிறது.
அந்தக் 'கர்ம வினைகளின்' ஊடே பயணம் செய்யும் ஜீவன்... இந்த உலக சுகத்தில் மூழ்கி... அந்த சிற்றின்பங்களின் வழியே பயணம் செய்து... அதன் வழியேயான இன்ப-துன்ப அனுபவங்களின் விளைவுகளை மீண்டும், மீண்டும் கர்ம வினைகளின் தொகுப்பில் கொண்டு சேர்த்து... இருளை ஒத்த... எண்ணற்ற பிறவிகளில் சிக்கித் தவிப்பதையே... 'அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்...' என்ற சொல்லாடல்களால் வருணிக்கிறார்.
அது போலவே... மனதில் எழும் எண்ணங்களாகிய 'கர்ம வினைகளை' அதன் தோற்றத்திலேயே கண்டறிந்து... அதை ஆத்மா என்ற பரமாத்ம சொரூபத்தின் வலிமை கொண்டு... அதை மனதின் மூலத்திலேயே... அழித்துவிடும் அற்புத நிகழ்வைத்தான்... 'அடக்கம் அமரருள் உய்க்கும்...' என்று... பிறவிகளற்ற... பெரும் வாழ்வை... என்றும் பிறவா நிலையை அடைந்த அமரர்களின் வாழ்வுக்கு ஒப்பானதாக வருணிக்கிறார் இந்த ஞானச் செம்மல்.
ஸாய்ராம்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
என்ற குறளுக்கு பொதுவானதோர் விளக்கமாக... 'ஒருவரை உயர்த்தி தேவர் கூட்டத்தில் வைத்துவிடும் அடக்கம், அதுவே, அது...மீறப்படும் போது... இருளை ஒத்த வாழ்வினில் கொண்டு போய் சேர்த்து விடும்...' என்பதான பொருளாக அமையும்.
இந்தக் குறள்... 'எண்ணற்ற சிந்தனைகளின் ஊற்றாக' அமைகிறது என்றால் அது மிகையில்லை. இந்தக் குறளின் ஒவ்வொரு சொல்லும்... அதன் கையாடலும், அந்தத் 'தெய்வப் புலவனின்'... எண்ணிலடங்கா 'அருள் ஞான வெளிப்பாடுதான்'.
'அடக்கம்'... 'அடங்காமை'... என்ற இந்த சொற்களை சற்று ஆய்ந்தால்... எந்த ஒன்று... ஒரு புள்ளிக்குள் சென்று... கண்ணுக்கும் தெரியாமல்... மறைந்து விடுகிறதோ... அதற்குத்தான் 'அடங்கும்' தன்மை என்று பெயர்.
அது போலவே... எந்த ஒன்று... கண்களின் பார்வைக்கு உட்படாததோ... கண்களால் முழுமையாக பார்க்க முடியாததோ... அதற்குத்தான் 'அடங்காமை' என்ற தன்மையின் பெயர்.
அப்படி ஒரு 'வஸ்து' இருக்கிறதா...? என்றால், ஆம், இருக்கிறது. அது 'பரமாத்ம சொரூபம்' தான். அதை வருணிக்கும் போது... 'சனாதன முனிவர்களின்' கூற்றாக... '...எல்லாமாய்... அல்லதுமாய்...' என்ற கருத்தாடல்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அந்த பரமாத்ம சொரூபம்... இந்த ஜீவனுக்காக ஒரு 'ஆத்ம' ரூபத்தை எடுத்துக் கொள்கிறது. அது... அந்த ஜீவனுக்கான... 'ஜீவாத்மாவாக' வடிவம் பெற்றுக் கொள்கிறது. இந்த ஜீவாத்மாவுக்கு மூலம'ஆத்மாவாகவும்'... அது புறவுலகில் வெளிப்படும் இடம் 'மனமாகவும்' மாற்றம் பெறுகிறது. இந்த 'மனதின் விரிதலையும்'... 'அதன் சுருக்கத்தையுமே'... 'அடங்காமை' மற்றும் 'அடக்கம்' என்பதாக வடிவமைக்கிறார்... இந்த வார்த்தை சித்தர்.
மனம் என்பதை மூலமாகக் கொண்டே... இந்த ஜீவன் அதன் 'எண்ணங்களின் வெளிப்பாடாக'... தனது பிறவிக்கான 'கர்ம வினைகளை' அனுபவிக்கிறது.
அந்தக் 'கர்ம வினைகளின்' ஊடே பயணம் செய்யும் ஜீவன்... இந்த உலக சுகத்தில் மூழ்கி... அந்த சிற்றின்பங்களின் வழியே பயணம் செய்து... அதன் வழியேயான இன்ப-துன்ப அனுபவங்களின் விளைவுகளை மீண்டும், மீண்டும் கர்ம வினைகளின் தொகுப்பில் கொண்டு சேர்த்து... இருளை ஒத்த... எண்ணற்ற பிறவிகளில் சிக்கித் தவிப்பதையே... 'அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்...' என்ற சொல்லாடல்களால் வருணிக்கிறார்.
அது போலவே... மனதில் எழும் எண்ணங்களாகிய 'கர்ம வினைகளை' அதன் தோற்றத்திலேயே கண்டறிந்து... அதை ஆத்மா என்ற பரமாத்ம சொரூபத்தின் வலிமை கொண்டு... அதை மனதின் மூலத்திலேயே... அழித்துவிடும் அற்புத நிகழ்வைத்தான்... 'அடக்கம் அமரருள் உய்க்கும்...' என்று... பிறவிகளற்ற... பெரும் வாழ்வை... என்றும் பிறவா நிலையை அடைந்த அமரர்களின் வாழ்வுக்கு ஒப்பானதாக வருணிக்கிறார் இந்த ஞானச் செம்மல்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment