ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 15.
'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 6 புத பகவான்.
காலபுருஷ இராசியின் இராசியாதிபதியான... 'செவ்வாய் பகவானும்', பூர்வ புண்ணியாதிபதியுமான... 'சூரிய பகவானும்', பாக்கியாதிபதியாக... 'குரு பகவானும்'... காலத்தை 'ஒரு கட்டுக்குள்' வைத்திருக்கிறார்கள்.
காலத்தை இந்தக் கட்டுக்குள் இருந்து 'விடுவிக்கும் பணியைச்' செய்யும் 'சுக்கிர பகவானின்' அமைவினைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
காலபுருஷ இராசியில்... 'அறிவு, புத்தி' என்ற இரு நிலைகளை உணர்த்தும்... 'புத பகவனின்' நிலையை சற்று ஆய்வோம்.
'அறிவு' என்பதை தேடி அடைவதாக நாம் நினைத்துக் கொன்டிருக்கிறோம். ஆனால் அறிவு... என்பது 'பூர்வ புண்ணியாதிபதியாகிய' ... 'சூரிய பகவானின்' எல்லையில்லாத 'ஆற்றலின்' வெளிப்பாடாக... ஒவ்வொரு ஜீவனின் மனதிலும் உதிப்பதாகும். அது உள்ளிருந்துதான் உதிக்கிறது. அதற்கான வாய்ப்புகள்தான் வெளியில் கிடைக்கிறது.
அந்த 'அறிவு'... 'புத்தியாக' செயல்படும் போதுதான்... அதன் பயனை நம்மால் அனுபவிக்க முடியும். உதாரணமாக... வாழ்வின் அனுபவத்திற்காக ஒரு கலையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறது 'அறிவு'. அந்த கலை... வாழ்வியலுக்கான ஒரு அனுபவமாகவும்... ஆதாயமாகவும் இருப்பதாக அமைத்துக் கொள்வதுதான் 'புத்தி'.
இந்த இரண்டு நிலைகளையும் கால புருஷ இராசியில் காணமுடிகிறது. கால புருஷ இராசியில்... 3 என்ற தைர்ய... வீரிய... தொடர்பு ஸ்தானத்திற்கும், 6 ஆமிடமான 'ருண - ரோக - சத்ரு ஸ்தானங்களுக்கும்' அதிபதியாகிறார்... புத பகவான்.
நமக்கு உல்ளிருந்துதான் இந்த 'அறிவுக்கான' மூலம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் போது... அதன் வழியாக அந்த அறிவை நாம் அணுகும் போது... அது உள்ளார்ந்த அறிவாக மலர்கிறது. அது ஆனந்தத்தையும்... நிம்மதியையும்... ஜீவனுக்கான வாழ்வு இலக்கையும்... நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
அதனால்தான்... 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்று நாம் 'புத பகவானை' அணுகுகிறோம். நிறைந்த கல்வி என்பது... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத... உண்மையை அறிந்து கொள்வதான... இந்த ஜீவனின் வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வதான... கல்வி என்பதைத்தான்... மறைந்த புதன் நிறைந்ததான கல்வியை வழங்குகிறது... என்பதை... புதனின் அமைவு நமக்கு உணர்த்துகிறது.
இதில்... 'புத்தி' என்பதற்கான... 'புத பகவானின்' நிலை விளக்கம் தேவைப்படுகிறது. அதை 'சுக்கிர பகவானின்' நிலைகளையும், 'புத பகவானின்' நிலைகளுடன் ஒப்பிட்டும்... இணைத்தும்தான்... ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அதை அடுத்த பதிவில் ஆய்வோம்.
காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.
ஸாய்ராம்.
'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 6 புத பகவான்.
காலபுருஷ இராசியின் இராசியாதிபதியான... 'செவ்வாய் பகவானும்', பூர்வ புண்ணியாதிபதியுமான... 'சூரிய பகவானும்', பாக்கியாதிபதியாக... 'குரு பகவானும்'... காலத்தை 'ஒரு கட்டுக்குள்' வைத்திருக்கிறார்கள்.
காலத்தை இந்தக் கட்டுக்குள் இருந்து 'விடுவிக்கும் பணியைச்' செய்யும் 'சுக்கிர பகவானின்' அமைவினைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
காலபுருஷ இராசியில்... 'அறிவு, புத்தி' என்ற இரு நிலைகளை உணர்த்தும்... 'புத பகவனின்' நிலையை சற்று ஆய்வோம்.
'அறிவு' என்பதை தேடி அடைவதாக நாம் நினைத்துக் கொன்டிருக்கிறோம். ஆனால் அறிவு... என்பது 'பூர்வ புண்ணியாதிபதியாகிய' ... 'சூரிய பகவானின்' எல்லையில்லாத 'ஆற்றலின்' வெளிப்பாடாக... ஒவ்வொரு ஜீவனின் மனதிலும் உதிப்பதாகும். அது உள்ளிருந்துதான் உதிக்கிறது. அதற்கான வாய்ப்புகள்தான் வெளியில் கிடைக்கிறது.
அந்த 'அறிவு'... 'புத்தியாக' செயல்படும் போதுதான்... அதன் பயனை நம்மால் அனுபவிக்க முடியும். உதாரணமாக... வாழ்வின் அனுபவத்திற்காக ஒரு கலையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறது 'அறிவு'. அந்த கலை... வாழ்வியலுக்கான ஒரு அனுபவமாகவும்... ஆதாயமாகவும் இருப்பதாக அமைத்துக் கொள்வதுதான் 'புத்தி'.
இந்த இரண்டு நிலைகளையும் கால புருஷ இராசியில் காணமுடிகிறது. கால புருஷ இராசியில்... 3 என்ற தைர்ய... வீரிய... தொடர்பு ஸ்தானத்திற்கும், 6 ஆமிடமான 'ருண - ரோக - சத்ரு ஸ்தானங்களுக்கும்' அதிபதியாகிறார்... புத பகவான்.
நமக்கு உல்ளிருந்துதான் இந்த 'அறிவுக்கான' மூலம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் போது... அதன் வழியாக அந்த அறிவை நாம் அணுகும் போது... அது உள்ளார்ந்த அறிவாக மலர்கிறது. அது ஆனந்தத்தையும்... நிம்மதியையும்... ஜீவனுக்கான வாழ்வு இலக்கையும்... நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
அதனால்தான்... 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்று நாம் 'புத பகவானை' அணுகுகிறோம். நிறைந்த கல்வி என்பது... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத... உண்மையை அறிந்து கொள்வதான... இந்த ஜீவனின் வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வதான... கல்வி என்பதைத்தான்... மறைந்த புதன் நிறைந்ததான கல்வியை வழங்குகிறது... என்பதை... புதனின் அமைவு நமக்கு உணர்த்துகிறது.
இதில்... 'புத்தி' என்பதற்கான... 'புத பகவானின்' நிலை விளக்கம் தேவைப்படுகிறது. அதை 'சுக்கிர பகவானின்' நிலைகளையும், 'புத பகவானின்' நிலைகளுடன் ஒப்பிட்டும்... இணைத்தும்தான்... ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அதை அடுத்த பதிவில் ஆய்வோம்.
காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment