கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை - பகுதி 3.
ஒரு தந்தை, இரண்டு சகோதரர்கள் என மிகக் கண்ணியமான குடும்பம். அந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரருக்குத் திருமணம் நடந்தேறுகிறது. திருமணத்தை ஏற்பாடு செய்தவரின் ஒரு சதித் திட்டத்தால்... 'நிறத்தால் வெறுக்கப்படும் ஒரு பெண்' அந்த வீட்டுக்கு மணமகளாக வர நேரிடுகிறது.
மிகவும் குணவதியான பெண்... அவள் வந்த சூழலின் காரணமாக, அந்தக் குடும்பத்தின் வெறுப்பிக்கிடையில் திண்டாடுகிறாள். தனது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்த தவிக்கும் நிலையில்... 'கண்ண பிரானை' நோக்கி பாடுவதாக ஒரு காட்சி... 'அந்தப் பெண்ணின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்த...' கவிஞரின் கற்பனை வரிகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது...
'கண்ணா... கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை...' என்று அந்தப் பெண்ணின் எண்ணங்கள் வெளிப்படும்.
என்னை அவாறு படைத்ததில் தவறில்லை... அது என் விதியாக இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால் என்னை கொண்டு சேர்க்கும் இடத்தையாவது, எனக்கேற்றவாறு அமைத்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா...? என்ற கேள்வியை...
'மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து தனியாக அமர்ந்தாய் கண்ணா...'
இந்தக் கேள்வி... அந்தப் பெண்ணுக்கானது மட்டுமல்ல... அந்த நிலையில் இருந்து தவிக்கும் எண்ணற்ற மாந்தர்களுடையதும்தான். ஒவ்வொரு மனிதனும் தனக்கேற்ற சூழலில் இருப்பதைத்தான் விரும்புகிறான். ஆனால் காலம் வெவ்வேறு மாறுபட்ட சூழல்களுக்குள் கொண்டு சேர்த்துவிடுகிறது. அது தமது விதியாக இருந்தாலும்... அந்தத் துன்ப சூழலில் தவிக்கும் மனம்... படைப்பவனை நோக்கி கேள்வியை எழுப்பாமல் இருப்பதில்லை.
தொடரும் அந்தப் பெண்... பிறவியிலேயெ... தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் 'மனப்பங்கையும்'... அதில் எழும் 'தூயதான எண்ணங்களுக்கும்'... நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறாள்.
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா...
ஆனால்... அத்துனை நல்ல குணங்களையும் கொடுத்துவிட்டு... அதை தன்னைச் சுற்றி இருப்பவர்கள்... காண முடியாதபடி... மறைத்துவிட்டாயே...
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
என்ன கடன் தீர்க்க எனை இங்கு படைத்தாய் கண்ணா...?
என்று கேட்பது மட்டுமல்ல... என் விதிப்படிதான் என் வாழ்வும் அமையுமா...? என்ற மனம் குமுறும் போது... கல்லான மனமும் கரைந்து போவதில் என்ன வியப்பு இருக்க முடியும்...!
அந்தச் சூழலுக்குத்தான் பாடல்... அதை மறுப்பதற்கில்லை... ஆனால் அதுபோன்ற அனைத்துச் சூழல்களிலும் தவிக்கும் மனங்களுக்குமாக... கவிஞர் எழுதும் போதுதான்... அந்தப் பாடல்கள்... காலத்தையும் வென்று விடுகிறது.
ஸாய்ராம்.
ஒரு தந்தை, இரண்டு சகோதரர்கள் என மிகக் கண்ணியமான குடும்பம். அந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரருக்குத் திருமணம் நடந்தேறுகிறது. திருமணத்தை ஏற்பாடு செய்தவரின் ஒரு சதித் திட்டத்தால்... 'நிறத்தால் வெறுக்கப்படும் ஒரு பெண்' அந்த வீட்டுக்கு மணமகளாக வர நேரிடுகிறது.
மிகவும் குணவதியான பெண்... அவள் வந்த சூழலின் காரணமாக, அந்தக் குடும்பத்தின் வெறுப்பிக்கிடையில் திண்டாடுகிறாள். தனது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்த தவிக்கும் நிலையில்... 'கண்ண பிரானை' நோக்கி பாடுவதாக ஒரு காட்சி... 'அந்தப் பெண்ணின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்த...' கவிஞரின் கற்பனை வரிகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது...
'கண்ணா... கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை...' என்று அந்தப் பெண்ணின் எண்ணங்கள் வெளிப்படும்.
என்னை அவாறு படைத்ததில் தவறில்லை... அது என் விதியாக இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால் என்னை கொண்டு சேர்க்கும் இடத்தையாவது, எனக்கேற்றவாறு அமைத்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா...? என்ற கேள்வியை...
'மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து தனியாக அமர்ந்தாய் கண்ணா...'
இந்தக் கேள்வி... அந்தப் பெண்ணுக்கானது மட்டுமல்ல... அந்த நிலையில் இருந்து தவிக்கும் எண்ணற்ற மாந்தர்களுடையதும்தான். ஒவ்வொரு மனிதனும் தனக்கேற்ற சூழலில் இருப்பதைத்தான் விரும்புகிறான். ஆனால் காலம் வெவ்வேறு மாறுபட்ட சூழல்களுக்குள் கொண்டு சேர்த்துவிடுகிறது. அது தமது விதியாக இருந்தாலும்... அந்தத் துன்ப சூழலில் தவிக்கும் மனம்... படைப்பவனை நோக்கி கேள்வியை எழுப்பாமல் இருப்பதில்லை.
தொடரும் அந்தப் பெண்... பிறவியிலேயெ... தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் 'மனப்பங்கையும்'... அதில் எழும் 'தூயதான எண்ணங்களுக்கும்'... நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறாள்.
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா...
ஆனால்... அத்துனை நல்ல குணங்களையும் கொடுத்துவிட்டு... அதை தன்னைச் சுற்றி இருப்பவர்கள்... காண முடியாதபடி... மறைத்துவிட்டாயே...
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
என்ன கடன் தீர்க்க எனை இங்கு படைத்தாய் கண்ணா...?
என்று கேட்பது மட்டுமல்ல... என் விதிப்படிதான் என் வாழ்வும் அமையுமா...? என்ற மனம் குமுறும் போது... கல்லான மனமும் கரைந்து போவதில் என்ன வியப்பு இருக்க முடியும்...!
அந்தச் சூழலுக்குத்தான் பாடல்... அதை மறுப்பதற்கில்லை... ஆனால் அதுபோன்ற அனைத்துச் சூழல்களிலும் தவிக்கும் மனங்களுக்குமாக... கவிஞர் எழுதும் போதுதான்... அந்தப் பாடல்கள்... காலத்தையும் வென்று விடுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment