Tuesday, March 2, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 162. தசா, புத்தி, அந்தரங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள்... உதாரணங்களுடன். பகுதி - 3.


 'மேஷ லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, 2 (தனம் - வாக்கு - குடும்பம்) மற்றும் 7 (களத்திரம் என்ற வாழ்க்கைத் துணை மற்றும் நட்பு) ஆம் பாவங்களுக்கு, அதிபதியாகிற 'சுக்கிர பகவான்', 7 ஆம் பாவத்திலேயே அமைகிறார் என்று வைத்துக் கொள்வோம்./

இந்த அமைவு உணர்த்தும் நிலைகளாக...

~ களத்திர பாவாதிபதி, களத்திர பாவத்திலேயே அமைவதால், 'களத்திர தோஷம்' என்பதாகவும்...

~ 'சர லக்னத்திற்கு', 2 மற்றும் 7 ஆம் பாவாங்கள் 'மாரக ஸ்தானங்களாக' அமைவதால்... 'சுக்கிர பகவான்' மாராகாதிபதியாகிறார் என்பதாகவும்...

... விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலைகளினால்,.. ஜாதகர் தனது குடும்ப வாழ்விலும்... தனக்கு அமையும் இல்வாழ்விலும்... எண்ணர்ற துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும்... என்பதாகத்தான், பலன்கள்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இவைகள், உண்மைதான் என்றாலும். இந்த 'சுக்கிர பகவானின்' 20 வருட காலங்களை...

# ஜாதகர் தனது வாழ் நாட்களில் எதிர் கொள்ளாத போதும்...

# ஜாதகரின் பாலப் பருவத்திலேயே, கடந்து போய் விட்டாலும்...

# ஜாதகர் தனது வாழ்வின், இறுதிக் காலங்களில் அனுபவிக்க நேர்ந்தாலும்...

... 'சுக்கிர பகவானின்' ஆட்சி பலத்தினால்... தனது வாழ்நாளில், மாரகம்... காரகம்... என்ற பாதிப்புகளிலிருந்து விடுபட்டு... குடும்பத்திலும், இல்வாழ்விலும்... நிம்மதியான வாழ்க்கை அனுபவத்தை அடைவார் என்பதும் கவனிக்கத் தக்கதே.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...