கவிதைத் தொகுப்பு
சித்தர் பாரதி
சுய நல வாழ்வை எதிர்த்தவன்
ஏடுகளைவிட இயற்கையைப் படித்தவன்
அறிவார்ந்தவற்றை சுவர்களுக்குள்
அறிய விருப்பமின்றி
சுவர்களை தகர்த்து
ஞானம் கற்றவன்
சராசரி வாழ்வில் போராடி
கர்ம யோகியாய், அஞ்ஞானம் களைந்தவன்
பிறந்த பூமியின் பெருமை உணர்ந்தவன்
சுதந்திரத்தை சுவாசமாக்கியவன்
சுவாசம் மூலம் சக்தியை அறிந்தவன்
நெருப்பை அணைத்தவன்
நீரில் கரைந்தவன்
வெளியில் பிறந்தவன்
உடலை முழுவதும் மூச்சால் நிறைத்தவன்
மண்ணில் படுத்து வாசம் நுகர்ந்தவன்
பாறையில், அருவியில், மரத்தில்,
பூவில், குயிலில், காகத்தில், குருவியில்,
விலங்கில், பூவுலக வாசிகள்
அனைத்திலும் சக்தியைக் கண்டவன்
புரிந்தவன், அறிந்தவன், தெளிந்தவன்,
ஒன்றாய் கலந்தவன்
சம்பிரதாய வாழ்வினுள்ளே
சடங்குகள் முறிந்து
நெஞ்சு நிமிர்த்தியவன்
ஞான முகத்தில் கோபத்தீயை
கண்களில் மூட்டியவன்
காட்சிக்கு கண்களையும்
காட்சிக்குள் பார்வையையும் திருப்பி
புருவமத்தியில் ஞானப் பொட்டிட்டவன்
வீரத்தை மீசையாய் முறுக்கி விட்டவன்
எண்ணங்களை கவிதையாய் கொட்டி விட்டவன்
மரண வாழ்வை எட்டி உதைத்தவன்
ஞான மண்ணில்... சித்தர்கள் உலகில்...
ஒன்றெனக் கலந்தவன்.
ஸாய்ராம்.
( 15.2.2002 அன்று... மனதில் உதித்தது )
சித்தர் பாரதி
சுய நல வாழ்வை எதிர்த்தவன்
ஏடுகளைவிட இயற்கையைப் படித்தவன்
அறிவார்ந்தவற்றை சுவர்களுக்குள்
அறிய விருப்பமின்றி
சுவர்களை தகர்த்து
ஞானம் கற்றவன்
சராசரி வாழ்வில் போராடி
கர்ம யோகியாய், அஞ்ஞானம் களைந்தவன்
பிறந்த பூமியின் பெருமை உணர்ந்தவன்
சுதந்திரத்தை சுவாசமாக்கியவன்
சுவாசம் மூலம் சக்தியை அறிந்தவன்
நெருப்பை அணைத்தவன்
நீரில் கரைந்தவன்
வெளியில் பிறந்தவன்
உடலை முழுவதும் மூச்சால் நிறைத்தவன்
மண்ணில் படுத்து வாசம் நுகர்ந்தவன்
பாறையில், அருவியில், மரத்தில்,
பூவில், குயிலில், காகத்தில், குருவியில்,
விலங்கில், பூவுலக வாசிகள்
அனைத்திலும் சக்தியைக் கண்டவன்
புரிந்தவன், அறிந்தவன், தெளிந்தவன்,
ஒன்றாய் கலந்தவன்
சம்பிரதாய வாழ்வினுள்ளே
சடங்குகள் முறிந்து
நெஞ்சு நிமிர்த்தியவன்
ஞான முகத்தில் கோபத்தீயை
கண்களில் மூட்டியவன்
காட்சிக்கு கண்களையும்
காட்சிக்குள் பார்வையையும் திருப்பி
புருவமத்தியில் ஞானப் பொட்டிட்டவன்
வீரத்தை மீசையாய் முறுக்கி விட்டவன்
எண்ணங்களை கவிதையாய் கொட்டி விட்டவன்
மரண வாழ்வை எட்டி உதைத்தவன்
ஞான மண்ணில்... சித்தர்கள் உலகில்...
ஒன்றெனக் கலந்தவன்.
ஸாய்ராம்.
( 15.2.2002 அன்று... மனதில் உதித்தது )

No comments:
Post a Comment