Monday, August 5, 2019

கவிதைத் தொகுப்பு : மனம் ஒரு குரங்கு

கவிதத் தொகுப்பு : மனம் ஒரு குரங்கு

ஒரு நிலையில் நில்லாது
ஒரு கையில் கிளை பிடித்து
மறு கையில் ஒன்றை வளைத்து
பின்னொரு கிளை அமர்ந்து
புதிதொன்றில் கால் பதிக்கும்.

இவையாவும் ஓர் நொடியில்
நிகழ்ந்தே போகும் ;
உணவே அதன் நோக்கம்
உறுமியாயினும் அதை சேர்க்கும்.

உணட உணவு செரிக்க
ஓயாமால் அலை பாயும்
புதுப்புது கிளை தாவும்;
கனியிங்கள் சுவைத்துவிட
பூ மரங்கள் உலுக்கிவிடும்
காய்கள் இங்கே நாசமாகும்.

உண்டும் உறங்கியும்
இனவிருத்தி செய்தும்
ஒன்று போல அனைத்தையும்
ஒரே அச்சாய் உருவாக்கும்.

நம் மனமும் அவ்வாறே
இதன் வேகம் ஒளியை மிஞ்சும்
ஒரே நிமிடம் ஓராயிரம்
சிறகுகள் விரிக்கும்.

குரங்கைப் போல ஒரே மரத்தில்
கிளைகள் பல தாவாமல்
மரத்திற்கு மரம் தாவும்
இடத்திற்கு இடம் தாவும்
கண்டம் விட்டு கண்டம்
பூமியும் வானம் தாண்டும்
அதற்கப்பாலும் விரைந்து செல்லும்.
திடீரென் பூமியில் விழுந்து
ஒன்றும் அறியா பிள்ளை போலே
தூசு தட்டி எழுந்து நடக்கும்.

ஒன்றைப் பார்க்கும்
பிரிதொன்றை சிந்திக்கும்
அதிலேயும் நிலைக்காமல்
இன்னொன்றில் போய் நிற்கும்.

உடலைக் களைக்க வைக்கும்
ஓய்வெடுத்து உறங்க வைக்கும்
கனவில் வலம் வந்து
திடுக்கிட்டே விழிக்க வைக்கும்.

ஆசைக்கு வித்திட்டு
அதற்கு நெய் ஊற்றி
கொழுந்துவிட்டு எரிய வைக்கும்
உடல் ஆற்றல் விரயாமாக்கும்
உள்ளம் சோர்ந்து ஆசை விட்டால்
அடுத்தொன்றை வளர்த்து விட்டு
மறு போர்க்குத் தயாராக்கும்.

ஆசையே மீண்டும் பிறப்பெடுக்கும்
ஆண்டவனைச் சேராமல் தடுத்து வைக்கும்
மனம் மட்டும் வழி விட்டால்
ஆசை களைந்து போகும்
அழிவில்லா ஆனந்தம் கைகூடும்.

சுறு சுறுப்பும் நுண்ணறிவும்
உடல் வலுவும் ஒற்றுமையும்
ஒருங்கே உள்ள குரங்கினம்
ஒரு நிமிடம் அமைதியானால் ;

வலது காலை மடக்கி வைத்து
இடது காலால் குத்திட்டு
தலயுடன் உடல் சாய்த்து
கை கூப்பி பாதம் நோக்கும்.
குரங்கினமே அனுமனாகும்.

அனைத்து குரங்கினமும்
ஆர்ப்பாட்ட கூச்சலிட
இவன் மட்டும் அமைதியானான்
அறிவுடன் சிந்தித்தான்.

அவையடக்கம் அறிந்து கொண்டான்
இவன் இனத்தின் சேஷ்டை நீக்கி
அருள் வடிவாய் அமர்ந்து விட்டான்
அய்யனின் அடிகளிளே.

அய்யனவன் திருவடியை
ஆழ்ந்துள்ளே நோக்கும் பாங்கு
தெய்வாம்சம் முகம் காட்டும்
இவன் பிறவி பயனடையும்.

இது போலே மனம் இங்கே
ஒரு நிலையில் அமைதி பெற
மனம் முழுதும் இறை நிலையை
முழுவதுமாய் நிறைத்து வைப்போம்.

ஐம்புலனை அடக்கிவைத்து
ஆசைகளை குறைத்துக் கொண்டு
மரம் தாவும் குரங்கினைக் கொஞ்சம்
மடக்கி இங்கே அமர வைப்போம்.

அமர்ந்து விட்டால்
துயரமில்லை
மீண்டும் ஒரு பிறவியில்லை
அஞ்ஞானத் திரை விலகும்
மெய்ஞ்ஞானம் கைகூடும்
ஆனந்த நிலையில்
மனமிங்கே கூத்தாடும்.

ஆஞ்சனேயர் நிலை போலே
மனமிங்கே அமைதியாகும்.

ஸாய்ராம்.



(( 23.4.2002 அன்று மனதில் உதித்த கவிதை)



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...