பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 2.
திருச்சி, உறையூர், ஐவண்ணேஸ்வரரின் கருணை மழை.
எனது நெருங்கிய உறவினர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் திருச்சி, உறையூர், 'ஐவண்ணேஸ்வரர் ஆலய' எல்லைக்குள் அமைந்த, ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டப்பட்ட, இரண்டு வீடுகளில், பின் அமைந்த வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தனது சகோதரியின் குடும்பத்திற்கு கொடுத்திருந்தார்.
அந்த இரண்டு வீடுகளும்... இரண்டு சகோதரிகளுக்குச் சொந்தமானது. மூத்த சகோதரியின் வீட்டை இவர் வாங்கியிருந்தார். சிறிது காலத்திற்குப் பின்... முன் இருந்த வீட்டை, இளைய சகோதரி விற்பதற்கு முடிவு எடுத்தார். அதை இவர் வாங்கினால் மிகவும் வசதியாக இருக்கும் என்று கருதி, அதையும் ஒரு விலை பேசி... மொத்தத் தொகையில் ஒரு 20% விகிதத்தை முன்பணமாகக் கொடுத்து, மூன்று மாத இடைவெளியில் கிரயம் செய்வதாக, ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.
ஒப்பந்தத் தேதி முடிவதற்குள், அவரது கணவரின் தொழிலில் அவசர முதலீடு தேவை என்று கூறி, மேலும் ஒரு 20% விகிதம் கொடுக்கப்பட்டு, அதுவும் முன்பணத்தொகையுடன் சேர்க்கப்பட்டது. ஒப்பந்த்த் தேதி நெருங்குகையில்... அவர்கள் இடம் பெயர்ந்து செல்லும் வீடு, தயாராகவில்லை என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, அதையும் அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் பதிவு செய்தார்கள்.
நீட்டிக்கப்பட்ட இரண்டாவது காலத்திற்குள்ளாக, வியாபார விருத்திக்கு முதலீடு தேவை என்று கூறி, மேலும் 20% விகிதத்தைக் கொடுத்து, அதையும் ஒப்பந்தத்தில் பதிவு செய்தார்கள். ஒப்பந்தத் தேதி நெருங்குகையில், மூன்றாவது முறையாக, ஒரு மூன்று மாத நீட்டிப்பையும், மேலும் ஒரு அவசரத் தேவையைச் சொல்லி ஒரு தொகையையும் கேட்கும் போதுதான், அவர்கள் எனது ஆலோசனைக்காக வந்திருந்தார்கள்.
இதுவரை நடந்தது அனைத்தையும் கேட்டு, இது முறையானதாக இல்லை என்பதையும், பாக்கித் தொகையைக் கொடுத்து, உடனே வீட்டை கிரயம் செய்து கொள்வதுதான் தீர்வு என்று வலியுருத்தினேன். உறவினரோ, அவர்களின் குடும்பம் பூர்வீகமானது என்றும், அவர்களின் தொழில் நிலையே தாமதத்திற்குக் காரணம் என்றும், நிச்சியமாக அவர்கள் இந்த முறை, குறிப்பிட்டுள்ள காலக் கெடுவுக்குள், கிரயம் செய்து தருவார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.
நாமும், அவரின் நம்பிக்கைக்குள் பிரவேசிப்பது உசிதமாகாது என்பதை உணர்ந்து, ஒரு ஆலோசனையை வழங்கினேன். அது, அந்த வீட்டின் மூலப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வது, இந்த மூன்றாவது நீட்டிப்பே இறுதியானது. தற்போது கொடுக்கும் 20% விகிதத்துடன் சேர்த்து மொத்தத் தொகையான 80% விகிதத்தையும் பத்திரத்தில் குறிப்பிடுவது. இவையனைத்தையும் ஒரு சாட்சிக்கு முன் நடத்திக் கொள்வது, இறுதியாக அந்த மூலப் பத்திரம் மற்றும் ஒப்பந்தப் பத்திரத்தை, ஐவண்ணேஸ்வரரின் திருவடிகளில் சமர்ப்பிப்பது, என்று ஆலோசனை வழங்கி, அதன் படி அனைத்தும் நடந்தேறியது.
மூன்றாவது நீட்டிப்பின் காலக் கெடு முடிவுறும் 10 நாட்களுக்கு முன்னதாக, எனது உறவினரின் சகோதரி கண்ணீருடன் வந்து, அவர்கள் அந்த வீட்டை கிரயம் செய்ய மறுப்பதாகவும், 80% விகித முன் பணத்தையும் தற்போது தரும் சூழலில் அவர்கள் இல்லை என்பதாகவும் கூற, இதில், இதுவரை நாம் நேராகத் தலையிடாததாலும், இவையனைத்தும் அவர்களது விருப்பங்களுக்கு ஒப்ப நடந்ததாலும், நாம் வெளி நாட்டில் இருக்கும் உறவினரை என்னோடு தொடர்புக் கொள்ளச் சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.
உறவினர் வெளி நாட்டில் இருந்து தொடர்பில் வரும் போது, அவரை உடனடியாக நேரில் வந்தால்தான் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று கூறினேன். அவரும் இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டார். அவரையும், அவரது சகோதரியாரையும், இறுதியாக சாட்சியாக இருந்த அவரின் மாமா ஒருவரையும் அழைத்துக் கொண்டு, முதன் முறையாக அந்த வீட்டினரைச் சந்திக்கச் சென்றேன்.
கணவரும், மனைவியுமாக அவர்கள், தங்களால், இப்போது அந்த வீட்டைக் கிரயம் செய்து கொடுக்க முடியாது என்றும், முன் பணத்தையும் தற்போது கொடுக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தனர். நாம் அவர்களிடம், உறவினர் எவ்வாறெல்லாம் அவர்களது ஒவ்வொரு கோரிக்கையயும் நிறைவேற்றியிருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு முறையும் அவர்கள் எவ்வாறெல்லாம் தமது நிலைப்பாட்டில் மாறியிருக்கிறார்கள், என்பதையும் சுட்டிக் காட்டினோம்.
வேறு வழியில்லாத சூழலில், நடந்தது யாவற்றையும் ஒரு பதிவாக இட்டு, அதை 'ஐவன்ணேஸ்வரரின் திருவடியில்' சமர்ப்பித்து, இதற்கு ஒரு நல்லத் தீர்வை ஏற்படுத்தித் தருமாறும், அவ்வாறு அது கிரயமாக இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டைத் தனது சகோதரரின் பெயரில் பதிவு செய்துவிடலாம், என்றும் சங்கல்ப்பம் ஏற்றுக் கொள்ளச் செய்தோம்.
பின்னர், பத்திரப் பதிவுக்கான நாளைத் தேர்ந்தெடுத்தோம், பாக்கித் தொகைக்கு வங்கியில் ஒரு வரைவோலை பெற்றோம், இவற்றுடன் ஒரு வழக்கறிஞரை சந்தித்து, அவரின் மூலமாக அவர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்பினோம். அதில், அது வரை நடந்தவற்றை விவரித்து, அவர்களது தவற்றைச் சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட நாளில் வந்து கிரயம் செய்து தருமாறும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்து, இழப்புகள், மன உளைச்சல்கள் அனைத்துக்குமான தொகையைப் பெற நேரிடும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
அதற்குப் பின்னர் நடந்ததெல்லாம்... 'ஐவண்ணேஸ்வரரின் அருள் கருணைதான்'. அவர்கள் மெலும் சில தவறான பாதைகளில் பயணம் செய்தார்கள். இறுதியாக, தவிர்க்க முடியாத சூழலில், பத்திரப் பதிவுக்கான நாளின் காலை வேளையில், உறவினரின் வீட்டுக்கு வருவதாக தொலைபேசியில் கூற, நாமும் நேரில் சென்றிருந்தோம்.
வேகமாக வந்து அமர்ந்த அவரின் முகத்தில் கோபத்தின் கனல் வீசிக்கொண்டிருந்தது. அவர் ஆசுவாசமடைந்ததும்... அவரிடம், தற்போதும் ஒன்றும் பாதகமில்லை... கிரயத்தைத் தவிர வேறு வழியில்லாத நிலையில்... வேண்டுமானால், கிரயத்திற்கான விலையை சற்று உயர்த்திக் கொள்ளுங்கள்... என்று நாம் கூற, அவர் மேலும் ஒரு 20% விகித தொகையைக் கேட்டார். கோபமடைந்த உறவினர் குடும்பத்தைச் சமாதானம் செய்து, அந்தத் தொகையை ஒரு 10% விகிதமாகக் குறைத்து நிணயம் செய்தோம்.
அதன்பின் பத்திரப் பதிவு சுமூகமாக நடந்தேறியது.உறவினரை குடும்பத்துடன் சென்று, ஐவண்ணேஸ்வரரின் திருவடியில் நன்றிகளைக் காணிக்கையாக்கக் கூறினோம். நாமும் நமது வழக்கமான தரிசன நாளான வியாழன் அன்று, 'ஐவண்ணேஸ்வரரின் அருள் திருவடியில்', நமது மனமுவந்த நன்றிகளை காணிக்கையாக்கினோம்.
ஸாய்ராம்.
திருச்சி, உறையூர், ஐவண்ணேஸ்வரரின் கருணை மழை.
எனது நெருங்கிய உறவினர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் திருச்சி, உறையூர், 'ஐவண்ணேஸ்வரர் ஆலய' எல்லைக்குள் அமைந்த, ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டப்பட்ட, இரண்டு வீடுகளில், பின் அமைந்த வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தனது சகோதரியின் குடும்பத்திற்கு கொடுத்திருந்தார்.
அந்த இரண்டு வீடுகளும்... இரண்டு சகோதரிகளுக்குச் சொந்தமானது. மூத்த சகோதரியின் வீட்டை இவர் வாங்கியிருந்தார். சிறிது காலத்திற்குப் பின்... முன் இருந்த வீட்டை, இளைய சகோதரி விற்பதற்கு முடிவு எடுத்தார். அதை இவர் வாங்கினால் மிகவும் வசதியாக இருக்கும் என்று கருதி, அதையும் ஒரு விலை பேசி... மொத்தத் தொகையில் ஒரு 20% விகிதத்தை முன்பணமாகக் கொடுத்து, மூன்று மாத இடைவெளியில் கிரயம் செய்வதாக, ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.
ஒப்பந்தத் தேதி முடிவதற்குள், அவரது கணவரின் தொழிலில் அவசர முதலீடு தேவை என்று கூறி, மேலும் ஒரு 20% விகிதம் கொடுக்கப்பட்டு, அதுவும் முன்பணத்தொகையுடன் சேர்க்கப்பட்டது. ஒப்பந்த்த் தேதி நெருங்குகையில்... அவர்கள் இடம் பெயர்ந்து செல்லும் வீடு, தயாராகவில்லை என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, அதையும் அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் பதிவு செய்தார்கள்.
நீட்டிக்கப்பட்ட இரண்டாவது காலத்திற்குள்ளாக, வியாபார விருத்திக்கு முதலீடு தேவை என்று கூறி, மேலும் 20% விகிதத்தைக் கொடுத்து, அதையும் ஒப்பந்தத்தில் பதிவு செய்தார்கள். ஒப்பந்தத் தேதி நெருங்குகையில், மூன்றாவது முறையாக, ஒரு மூன்று மாத நீட்டிப்பையும், மேலும் ஒரு அவசரத் தேவையைச் சொல்லி ஒரு தொகையையும் கேட்கும் போதுதான், அவர்கள் எனது ஆலோசனைக்காக வந்திருந்தார்கள்.
இதுவரை நடந்தது அனைத்தையும் கேட்டு, இது முறையானதாக இல்லை என்பதையும், பாக்கித் தொகையைக் கொடுத்து, உடனே வீட்டை கிரயம் செய்து கொள்வதுதான் தீர்வு என்று வலியுருத்தினேன். உறவினரோ, அவர்களின் குடும்பம் பூர்வீகமானது என்றும், அவர்களின் தொழில் நிலையே தாமதத்திற்குக் காரணம் என்றும், நிச்சியமாக அவர்கள் இந்த முறை, குறிப்பிட்டுள்ள காலக் கெடுவுக்குள், கிரயம் செய்து தருவார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.
நாமும், அவரின் நம்பிக்கைக்குள் பிரவேசிப்பது உசிதமாகாது என்பதை உணர்ந்து, ஒரு ஆலோசனையை வழங்கினேன். அது, அந்த வீட்டின் மூலப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வது, இந்த மூன்றாவது நீட்டிப்பே இறுதியானது. தற்போது கொடுக்கும் 20% விகிதத்துடன் சேர்த்து மொத்தத் தொகையான 80% விகிதத்தையும் பத்திரத்தில் குறிப்பிடுவது. இவையனைத்தையும் ஒரு சாட்சிக்கு முன் நடத்திக் கொள்வது, இறுதியாக அந்த மூலப் பத்திரம் மற்றும் ஒப்பந்தப் பத்திரத்தை, ஐவண்ணேஸ்வரரின் திருவடிகளில் சமர்ப்பிப்பது, என்று ஆலோசனை வழங்கி, அதன் படி அனைத்தும் நடந்தேறியது.
மூன்றாவது நீட்டிப்பின் காலக் கெடு முடிவுறும் 10 நாட்களுக்கு முன்னதாக, எனது உறவினரின் சகோதரி கண்ணீருடன் வந்து, அவர்கள் அந்த வீட்டை கிரயம் செய்ய மறுப்பதாகவும், 80% விகித முன் பணத்தையும் தற்போது தரும் சூழலில் அவர்கள் இல்லை என்பதாகவும் கூற, இதில், இதுவரை நாம் நேராகத் தலையிடாததாலும், இவையனைத்தும் அவர்களது விருப்பங்களுக்கு ஒப்ப நடந்ததாலும், நாம் வெளி நாட்டில் இருக்கும் உறவினரை என்னோடு தொடர்புக் கொள்ளச் சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.
உறவினர் வெளி நாட்டில் இருந்து தொடர்பில் வரும் போது, அவரை உடனடியாக நேரில் வந்தால்தான் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று கூறினேன். அவரும் இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டார். அவரையும், அவரது சகோதரியாரையும், இறுதியாக சாட்சியாக இருந்த அவரின் மாமா ஒருவரையும் அழைத்துக் கொண்டு, முதன் முறையாக அந்த வீட்டினரைச் சந்திக்கச் சென்றேன்.
கணவரும், மனைவியுமாக அவர்கள், தங்களால், இப்போது அந்த வீட்டைக் கிரயம் செய்து கொடுக்க முடியாது என்றும், முன் பணத்தையும் தற்போது கொடுக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தனர். நாம் அவர்களிடம், உறவினர் எவ்வாறெல்லாம் அவர்களது ஒவ்வொரு கோரிக்கையயும் நிறைவேற்றியிருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு முறையும் அவர்கள் எவ்வாறெல்லாம் தமது நிலைப்பாட்டில் மாறியிருக்கிறார்கள், என்பதையும் சுட்டிக் காட்டினோம்.
வேறு வழியில்லாத சூழலில், நடந்தது யாவற்றையும் ஒரு பதிவாக இட்டு, அதை 'ஐவன்ணேஸ்வரரின் திருவடியில்' சமர்ப்பித்து, இதற்கு ஒரு நல்லத் தீர்வை ஏற்படுத்தித் தருமாறும், அவ்வாறு அது கிரயமாக இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டைத் தனது சகோதரரின் பெயரில் பதிவு செய்துவிடலாம், என்றும் சங்கல்ப்பம் ஏற்றுக் கொள்ளச் செய்தோம்.
பின்னர், பத்திரப் பதிவுக்கான நாளைத் தேர்ந்தெடுத்தோம், பாக்கித் தொகைக்கு வங்கியில் ஒரு வரைவோலை பெற்றோம், இவற்றுடன் ஒரு வழக்கறிஞரை சந்தித்து, அவரின் மூலமாக அவர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்பினோம். அதில், அது வரை நடந்தவற்றை விவரித்து, அவர்களது தவற்றைச் சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட நாளில் வந்து கிரயம் செய்து தருமாறும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்து, இழப்புகள், மன உளைச்சல்கள் அனைத்துக்குமான தொகையைப் பெற நேரிடும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
அதற்குப் பின்னர் நடந்ததெல்லாம்... 'ஐவண்ணேஸ்வரரின் அருள் கருணைதான்'. அவர்கள் மெலும் சில தவறான பாதைகளில் பயணம் செய்தார்கள். இறுதியாக, தவிர்க்க முடியாத சூழலில், பத்திரப் பதிவுக்கான நாளின் காலை வேளையில், உறவினரின் வீட்டுக்கு வருவதாக தொலைபேசியில் கூற, நாமும் நேரில் சென்றிருந்தோம்.
வேகமாக வந்து அமர்ந்த அவரின் முகத்தில் கோபத்தின் கனல் வீசிக்கொண்டிருந்தது. அவர் ஆசுவாசமடைந்ததும்... அவரிடம், தற்போதும் ஒன்றும் பாதகமில்லை... கிரயத்தைத் தவிர வேறு வழியில்லாத நிலையில்... வேண்டுமானால், கிரயத்திற்கான விலையை சற்று உயர்த்திக் கொள்ளுங்கள்... என்று நாம் கூற, அவர் மேலும் ஒரு 20% விகித தொகையைக் கேட்டார். கோபமடைந்த உறவினர் குடும்பத்தைச் சமாதானம் செய்து, அந்தத் தொகையை ஒரு 10% விகிதமாகக் குறைத்து நிணயம் செய்தோம்.
அதன்பின் பத்திரப் பதிவு சுமூகமாக நடந்தேறியது.உறவினரை குடும்பத்துடன் சென்று, ஐவண்ணேஸ்வரரின் திருவடியில் நன்றிகளைக் காணிக்கையாக்கக் கூறினோம். நாமும் நமது வழக்கமான தரிசன நாளான வியாழன் அன்று, 'ஐவண்ணேஸ்வரரின் அருள் திருவடியில்', நமது மனமுவந்த நன்றிகளை காணிக்கையாக்கினோம்.
ஸாய்ராம்.














