பூவிற்கு இதழ்கள் போல...
விதை மீண்டும் வித்தாகும்
வாழ்க்கை சுழற்சியில்
மலர் மலரும் பருவம்
சுழல் வாழ்வின் ஓர் அங்கம்
மலர் என்றால் மனம் சொல்லும்
இதழ்களின் வரி வடிவம் என்று
இதழ்கள் மட்டும் மலர்களல்ல
அது பூவின் ஓர் அங்கம்
இதழ் வண்ணம் கண் கொள்ளும்
நெஞ்சள்ளும், மனதிற்கினியதாய்
பூத்துக் குலுங்கும், பூவின்
அடையாளமாய் முகவரி காட்டும்
பூக்கள்...
காயாகி, கனிந்து மீண்டும்
விதையாகி, விருட்சமாகும். இது
காலச் சக்கரத்தின் பருவ மாற்றம்
பூக்களின் வடிவமைப்பே
படைத்தவனின் பாதையில்
நம்மை உள் திருப்பும்
உலக வாழ்வின் நியமம் உணர்த்தும்
மலர் காம்பின் தலைப்பாகை
பூ என்ற வடிவமைப்பு...
வெளிவட்டம் பூவிதழ்கள்
அதைத்தாங்கும் புல்லி வட்டம்...
பூவிதழ்கள் உள்ளே
ஆண் மகரந்தக் கம்பிகள்.
அதன் நுனியில் மகரந்தத் தூள்கள்
சூழ் கம்பி உள்ளே கர்வமாய் தலை நிமிரும்
காற்றசைவில் இவை கூட...
மன்மத மஞ்சத்தில்
சூழ் உருவாகும் - இதுவே
தன் மகரந்தச் சேர்க்கை
இது கூடாது போனால்...
மற்றுமொரு மாயத்தை
சூட்சுமமாய் உள் விரித்தான்
படைப்பின் நாயகன்.
வெளியே இதழ் விரித்தான்
இதழ்களில் அழகு செய்தான்
வரும் விருந்து உண்டு மகிழ...
தேன் வைத்தான் பூவுக்குள்ளே
இதழ் அழகு கண்டு வரும்
பூச்சிகள் உள்ளே தேன் சுவைக்க
கொம்பு நீட்டும்... மலர் குலுங்கும்...
மகரந்த லீலை நடக்கும்
மயங்கி வண்டு பறக்கும் போது
கால் வழியே மகரந்தத் தூள் பரவும்
வேறு பூவும் காயாகும்
மாயம் இதுவேதான்
சூழ் காயானால் இதழ்களின்
பங்கு முடியும்
இதழ் உதிர்ந்து சருகாகும்
பருவக் காட்சி முடிவுக்கு வரும்
பூவிதழ் போல் மாந்தர்க்கு
இளமை ஒரு பருவ மாற்றம்...
வாழ்க்கை சுழற்சியின்
தவிர்க்க முடியா ஓர் அங்கம்
அறியாமைக்கும்... அமைதிக்கும்
இடையேயான... அவஸ்த்தைக் காலம்
இனவிருத்தி செய்துவிட
இருபாலர் இணைந்து விட
இறைவன்... மானுடம் தந்த
இதழ்விரி கால மாற்றம்
ஈர்த்து இங்கே இனவிருத்தி
செய்து விட்டால்
இளமை இதழ்கள்
உதிர்ந்து இங்கே கருகிப் போகும்
செடி வாழ்வின் அத்தியாயத்தில்
பூ வாழ்வு ஓர் அங்கம்
இத்துடன் முடிவதில்லை
செடியின் வாழ்வு...
குறுஞ்செடியாய்... மரமாய்...
பறவைகளின் கூடுகளாய்...
சரணாலாயமாய்...நிழலாய்...மழையாய்...
காற்றாய்... கடமையுண்டு அதன் வாழ்வில்
மனித வாழ்வு செடி போல...
ஜனனம் முதல் மரணம் வரை
மனித வாழ்வில் இளமை காலம்...
சுழல் வாழ்வின் ஓர் அங்கம்
நல் மகவாய்... மாணாக்கராய்...
மனிதமாய்...பெற்றோராய்... வாழ்க்கை துணையாய்...
குருவாய்... பின்
தெய்வம் சேர மகானாய்...
மனித வாழ்வு இறையின் ஓர் கொடை
பூவிற்கு இதழ்கள் போல... இளமை மானுடர்க்கு.
ஸாய்ராம்.
விதை மீண்டும் வித்தாகும்
வாழ்க்கை சுழற்சியில்
மலர் மலரும் பருவம்
சுழல் வாழ்வின் ஓர் அங்கம்
மலர் என்றால் மனம் சொல்லும்
இதழ்களின் வரி வடிவம் என்று
இதழ்கள் மட்டும் மலர்களல்ல
அது பூவின் ஓர் அங்கம்
இதழ் வண்ணம் கண் கொள்ளும்
நெஞ்சள்ளும், மனதிற்கினியதாய்
பூத்துக் குலுங்கும், பூவின்
அடையாளமாய் முகவரி காட்டும்
பூக்கள்...
காயாகி, கனிந்து மீண்டும்
விதையாகி, விருட்சமாகும். இது
காலச் சக்கரத்தின் பருவ மாற்றம்
பூக்களின் வடிவமைப்பே
படைத்தவனின் பாதையில்
நம்மை உள் திருப்பும்
உலக வாழ்வின் நியமம் உணர்த்தும்
மலர் காம்பின் தலைப்பாகை
பூ என்ற வடிவமைப்பு...
வெளிவட்டம் பூவிதழ்கள்
அதைத்தாங்கும் புல்லி வட்டம்...
பூவிதழ்கள் உள்ளே
ஆண் மகரந்தக் கம்பிகள்.
அதன் நுனியில் மகரந்தத் தூள்கள்
சூழ் கம்பி உள்ளே கர்வமாய் தலை நிமிரும்
காற்றசைவில் இவை கூட...
மன்மத மஞ்சத்தில்
சூழ் உருவாகும் - இதுவே
தன் மகரந்தச் சேர்க்கை
இது கூடாது போனால்...
மற்றுமொரு மாயத்தை
சூட்சுமமாய் உள் விரித்தான்
படைப்பின் நாயகன்.
வெளியே இதழ் விரித்தான்
இதழ்களில் அழகு செய்தான்
வரும் விருந்து உண்டு மகிழ...
தேன் வைத்தான் பூவுக்குள்ளே
இதழ் அழகு கண்டு வரும்
பூச்சிகள் உள்ளே தேன் சுவைக்க
கொம்பு நீட்டும்... மலர் குலுங்கும்...
மகரந்த லீலை நடக்கும்
மயங்கி வண்டு பறக்கும் போது
கால் வழியே மகரந்தத் தூள் பரவும்
வேறு பூவும் காயாகும்
மாயம் இதுவேதான்
சூழ் காயானால் இதழ்களின்
பங்கு முடியும்
இதழ் உதிர்ந்து சருகாகும்
பருவக் காட்சி முடிவுக்கு வரும்
பூவிதழ் போல் மாந்தர்க்கு
இளமை ஒரு பருவ மாற்றம்...
வாழ்க்கை சுழற்சியின்
தவிர்க்க முடியா ஓர் அங்கம்
அறியாமைக்கும்... அமைதிக்கும்
இடையேயான... அவஸ்த்தைக் காலம்
இனவிருத்தி செய்துவிட
இருபாலர் இணைந்து விட
இறைவன்... மானுடம் தந்த
இதழ்விரி கால மாற்றம்
ஈர்த்து இங்கே இனவிருத்தி
செய்து விட்டால்
இளமை இதழ்கள்
உதிர்ந்து இங்கே கருகிப் போகும்
செடி வாழ்வின் அத்தியாயத்தில்
பூ வாழ்வு ஓர் அங்கம்
இத்துடன் முடிவதில்லை
செடியின் வாழ்வு...
குறுஞ்செடியாய்... மரமாய்...
பறவைகளின் கூடுகளாய்...
சரணாலாயமாய்...நிழலாய்...மழையாய்...
காற்றாய்... கடமையுண்டு அதன் வாழ்வில்
மனித வாழ்வு செடி போல...
ஜனனம் முதல் மரணம் வரை
மனித வாழ்வில் இளமை காலம்...
சுழல் வாழ்வின் ஓர் அங்கம்
நல் மகவாய்... மாணாக்கராய்...
மனிதமாய்...பெற்றோராய்... வாழ்க்கை துணையாய்...
குருவாய்... பின்
தெய்வம் சேர மகானாய்...
மனித வாழ்வு இறையின் ஓர் கொடை
பூவிற்கு இதழ்கள் போல... இளமை மானுடர்க்கு.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment