Thursday, July 4, 2019

சுந்தர காண்டமும் அதன் சூட்சுமமும்.

சுந்தர காண்டமும் அதன் சூட்சுமமும் :

ஸ்ரீமத் இராமாயணம் ஒரு இதிகாசம். மஹாவிஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ இராம பிரான்... மனித உருவெடுத்து... தர்மத்தின் வழியே... நடந்து காட்டிய பாதையே... ஸ்ரீ இராம... அயனம்.

ஸ்ரீ இராமபிரானது பிறப்பு... குருகுலம்... விஷ்வாமித்திரருடனான திக்விஜயம்... துஷ்ட நிக்ரஹம்... சீதாதேவியுடன் திருமணம்... கைகேயின் வரம்... சீதாதேவி, லக்ஷ்மணனுடன் வனவாசம்... வனவாச இறுதி நேரத்தில் இராவணனது பிரவேசம்... சீதாதேவியை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தல்... சுக்ரீவ சாம்ராஜ்யத்தோடான நட்பு... அநுமனின் தேடல்... இலங்கையின் மீது படையெடுப்பு... இராவண வதம்... சீதா தேவியாரின் மீட்பு... பட்டாபிஷேகம் என...

பால காண்டம்... அயோத்தியா காண்டம்... ஆரண்ய காண்டம்... கிஷ்கிந்தா-சுந்தர-யுத்த காண்டங்கள்... உத்திர காண்டம்... என ஸ்ரீ இராமபிரானது பயணம் நடந்து முடிகிறது.

இதில் 'சுந்தர காண்டம்' என்பது மிக முக்கியமான காண்டமாக அமைகிறது. தங்களது பதினான்கு வருட வனவாசத்தை பூர்த்தி செய்யும் நேரத்தில்... பதின்மூன்றாம் வருட ஆரம்பத்தில் நிகழ்ந்த ஒரு திருப்பம்... ஸ்ரீ இராமபிரானையும்... சிதாதேவி தாயாரையும் பிரித்து வைத்தது.

தசரச சக்கரவர்த்தியின் அன்பு மகனான இராமன்... ஜனக மஹராஜரின் அன்பு செல்வியான சீதாதேவியை... சுயம்வரத்தில் மணந்து... மிக இன்பமான வாழ்வை மேற்கொள்ளும் நேரத்தில்... முதல் திருப்பமாக... கைகேயியின் வரம் குறுக்கிட்டது. அது இந்த தம்பதிகளை கானகத்திற்கு அழைத்துச் சென்றது. அடுத்த திருப்பம்... இராவணனது வருகையும்... சீதாதேவியை கவர்தலுமாக... ஸ்ரீ இராமபிரானையும்... சிதா தேவியையும்... பிரித்து வைத்தது.

இந்த பிரிவினால் தாங்கவொண்ணா துயரத்தில் சிக்கித் தவிக்கிற இந்த தம்பதிகளின் துயரத்தை... ஆஞ்சிநேய மகாபிரபு... தனது தூதுவன் என்ற பொறுப்பை ஏற்று... இருவரது துயரத்தையும் துடைக்கும்... அற்புத நிகழ்வையே... 'சுந்தர காண்டம்' வருணிக்கிறது.

இந்த 'சுந்தர காண்டத்தின்' சூட்சுமம்தான் என்ன...? என்பதை சற்று ஆய்ந்தால்... 'பரப்பிரம்மத்திடமிருந்து'... பிரிந்து வந்த 'ஜீவன்'... தனது தொடர் பிறவிகளால்... தனது மூலமான பிரம்மத்தையே மறந்து... இந்த உலக சூழல்களிலேயே உழன்று கொண்டிருக்கிறது. ஒரு நிலையில்... இந்த துன்ப நிலையிலிருந்து மீழ முடியாது... தவித்து... தளர்ந்து... கதியே இல்லையா...!... என்று கலங்கி நிற்கும் போது... பரப்பிரம்மம்... ஒரு 'சத்குருவின்' உருவை ஏற்று வந்து... அல்லல்படும் ஜீவனை... பரப்பிரம்மத்துடன் இணைக்கிறது.

இதைத்தான்... பரப்பிரம்மான ஸ்ரீ இராமபிரானுடன்... ஜீவனாக அல்லல் படும் சீதா தேவியை... சத்குருவான... ஸ்ரீ ஹநுமந்தப் பிரபு... இந்த சுந்தர காண்டத்தில் இணைத்து வைக்கிறார்.

ஸாய்ராம்.






No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...