ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 4 :
வேதத்தின் அங்கமாகவும்... புரதான ரிஷிகளின் வழிமுறைகளாலும்... வளப்படுத்தப்பட்ட ஜோதிடக் கலை... ஒரு ஜீவனின் வாழ்வின் பாதையை... அதன் கர்ம இரகசியயத்தை... இறைவனின் பேரருளின் கருணையினால்... தேவைப்படும் போது... அந்த ஜீவனுக்கு வெளிப்படுத்துகிறது.
ஜோதிடத்தின் மூலமாக ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை... கர்ம இரகசியத்தை... அறிய முற்படும் ஜோதிடருக்கு... இராசி மணடலத்தில் அமைந்த கிரக ஆதிபத்தியத்தில்... 'திரி கோணம்' என்ற நிலை... அந்த சூட்சுமத்தை விளக்கும் பிரதானமான அணுகுமுறையாக அமைகிறது.
'லக்னம்' முதலாவது திரிகோணமாகவும்... 'பூர்வம்' என்ற ஐந்தாம் இடம் இரண்டாவது திரிகோணமாகவும்... 'பாக்கியம்' என்ற தர்ம ஸ்தானம் மூன்றாவது திரிகோணமாகவும் அமைகிறது.
லக்னம்... அந்த ஜீவனின் அனைத்து நிலைகளையும் படம்பிடித்து காட்டிவிடும். ஜீவனின் மூலம்... அது மேற்கொண்டுள்ள இந்த பிறவிக்கான நோக்கம்... அது பயணம் மேற்கொள்ளும் பாதை... என அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்கும் இடமாக அமையும்.
பூர்வம்... அந்த ஜீவன் தனது மொத்த வினைகளின் தொகுப்பிலிருந்து... இந்த பிறவிக்கு மாத்திரமான... சம அளவிலான பாவ,புண்ணியங்களின் தொகுப்பை சுமந்து கொண்டு பிறவியை அடைகிறது. அந்த வினைகளின் விளைவுகளை பகுத்தறியும் இடமாக... இந்த பூர்வம் அமைகிறது.
பாக்கியம்... அந்த ஜீவன் தான் சுமந்து கொண்டிருக்கும் வினைகளின் தொகுப்பை... இந்த புவி வாழ்வில் எவ்வாறு... அனுபவித்துக் கடந்து போகிறது...? என்ற நிலையை வெளிப்படுத்தும் இடமாக அமைகிறது.
இந்த முன்று நிலைகளின் மூலமாக... ஒரு ஜீவனின் பிறப்பும்... நோக்கமும்... வாழ்வும்... வளமும் வெளிப்படுகிறது. அதனால்தான்... ஜோதிட அணுகுமுறையில்... இந்த 'திரிகோணம்' என்ற அணுகுமுறை மிக முக்கிய அங்கத்தை வகிக்கிறது.
ஸாய்ராம்.
வேதத்தின் அங்கமாகவும்... புரதான ரிஷிகளின் வழிமுறைகளாலும்... வளப்படுத்தப்பட்ட ஜோதிடக் கலை... ஒரு ஜீவனின் வாழ்வின் பாதையை... அதன் கர்ம இரகசியயத்தை... இறைவனின் பேரருளின் கருணையினால்... தேவைப்படும் போது... அந்த ஜீவனுக்கு வெளிப்படுத்துகிறது.
ஜோதிடத்தின் மூலமாக ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை... கர்ம இரகசியத்தை... அறிய முற்படும் ஜோதிடருக்கு... இராசி மணடலத்தில் அமைந்த கிரக ஆதிபத்தியத்தில்... 'திரி கோணம்' என்ற நிலை... அந்த சூட்சுமத்தை விளக்கும் பிரதானமான அணுகுமுறையாக அமைகிறது.
'லக்னம்' முதலாவது திரிகோணமாகவும்... 'பூர்வம்' என்ற ஐந்தாம் இடம் இரண்டாவது திரிகோணமாகவும்... 'பாக்கியம்' என்ற தர்ம ஸ்தானம் மூன்றாவது திரிகோணமாகவும் அமைகிறது.
லக்னம்... அந்த ஜீவனின் அனைத்து நிலைகளையும் படம்பிடித்து காட்டிவிடும். ஜீவனின் மூலம்... அது மேற்கொண்டுள்ள இந்த பிறவிக்கான நோக்கம்... அது பயணம் மேற்கொள்ளும் பாதை... என அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்கும் இடமாக அமையும்.
பூர்வம்... அந்த ஜீவன் தனது மொத்த வினைகளின் தொகுப்பிலிருந்து... இந்த பிறவிக்கு மாத்திரமான... சம அளவிலான பாவ,புண்ணியங்களின் தொகுப்பை சுமந்து கொண்டு பிறவியை அடைகிறது. அந்த வினைகளின் விளைவுகளை பகுத்தறியும் இடமாக... இந்த பூர்வம் அமைகிறது.
பாக்கியம்... அந்த ஜீவன் தான் சுமந்து கொண்டிருக்கும் வினைகளின் தொகுப்பை... இந்த புவி வாழ்வில் எவ்வாறு... அனுபவித்துக் கடந்து போகிறது...? என்ற நிலையை வெளிப்படுத்தும் இடமாக அமைகிறது.
இந்த முன்று நிலைகளின் மூலமாக... ஒரு ஜீவனின் பிறப்பும்... நோக்கமும்... வாழ்வும்... வளமும் வெளிப்படுகிறது. அதனால்தான்... ஜோதிட அணுகுமுறையில்... இந்த 'திரிகோணம்' என்ற அணுகுமுறை மிக முக்கிய அங்கத்தை வகிக்கிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment