ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - 5 :
அட்டமஸ்தானம்
லக்னத்திலிருந்து எட்டாமிட அமைவுக்குத்தான்... 'அட்டமஸ்தானம்' என்று பெயர். பொதுவாக இந்த எட்டாமிடம் 'ஆயுள் ஸ்தானம்' என்று அழைக்கப் படுகிறது.
இந்த இடத்தை மூலமாகக் கொண்டு ஒரு ஜீவனின் இகலோக வாழ்வு காலம் கணிக்கப்படுகிறது. ஜீவன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்வு காலத்தை எவ்வாறு கடந்து போகிறது என்பதையும்... அதில் ஏற்படும் தடைகள்... தடங்கல்கள்... என்பவை பற்றியும் இந்த 8 ஆமிடம் அறிவிக்கிறது.
ஆணுக்கும்... பெண்ணுக்கும் ஆயுள் ஸ்தானமாக அமையும் இந்த 8 ஆமிடம்... பெண்ணின் ஜாதகத்தில்... கணவனின் ஆயுளைக் குறிக்கும் 'மாங்கல்ய ஸ்தானமாக'... கணவனின் ஆயுளைக் குறிக்கும் இடமாகவும் அமைகிறது.
அதிர்ஷ்டம் என்ற அறிவுக்கும்... முயற்சிக்கும்... அப்பால் இருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் இடமாக இந்த ஸ்தானம் அமையும். அதிர்ஷ்டம் என்ற சொல்லே... கண்ணுக்குப் புலப்படாதது... என்ற அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. அதனால்தான்... இந்த இடத்தை 'புதை பொருள் ஸ்தானம்' என்ற வகையிலும் அழைப்பதுண்டு.
எவ்வளவுதான் புகழ்ச்சியாக இந்த இடத்தை வருணித்தாலும்... இந்த அஷ்டமாதிபதியின் தசாக் காலம்... ஒரு ஜாதகருக்கு கடும் துன்பத்தை அளிப்பதை மறுக்க முடியாது. அதற்கான காரணத்தை சற்று ஆய்வோம்.
1. இந்த 8 ஆமிடம்... 12 என்ற சென்ற பிறவியைக் குறிக்கும் ஸ்தானத்திற்கு 9 ஆமிடமான 'தர்ம ஸ்தானமாகிறது'. சென்ற பிறவியில் இந்த ஜீவன்... தான் புரிந்த கடமைகளின் தர்மத்தையும்... அதர்மத்தையும் எடைபோடும் இடமாக அமைகிறது.
2. இந்த 8 ஆமிடம்... பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு (5 ஆமிடம்)... சுக... துக்க ஸ்தானமாக ( 4 ஆமிடம்) அமைகிறது. இந்த ஜீவன் தான் கொண்டு வந்திருக்கும் 'பாப-புண்ய வினைகளுக்கு' ஏற்பவே... இந்த அட்டாமதிபதி... தனது காலத்தில்.. ஜீவனை வழி நடத்துகிறார்.
3. இந்த 8 ஆமிடம்... பாக்கியம் என்ற 9 ஆமிடத்திற்கு விரய ஸ்தானமாக அமைகிறது. இது உணர்த்துவது எதையென்றால்... அந்த அடாமாதிபதியின் காலம்... வினைகளின் விளைவுகளை கரைந்து போக வைக்கிறது என்ற உண்மயைத்தான்.
4. இந்த 8 ஆமிடம்... கர்மம்... தொழில்... ஜீவனம் என்ற 10 ஆமிடத்திற்கு... லாபம் என்ற 11 ஆமிடமாகிறது. இது உணர்த்துவது எதையென்றால்... தற்போதைய பிறவியில் இந்த ஜீவன் எதிர்கொள்ளும் வினைகளை... எவ்வாறு எதிர் கொள்கிறதோ... அதற்கேற்றாவாறே... அதன் வினைகளின் தொகுப்பு அமையப் போகிறது.
இவ்வளவு சூட்சுமங்களையும் கொண்ட இந்த 8 ஆமிடம் இரகசியங்களின் சுரங்கம்தான்.
ஸாய்ராம்.
அட்டமஸ்தானம்
லக்னத்திலிருந்து எட்டாமிட அமைவுக்குத்தான்... 'அட்டமஸ்தானம்' என்று பெயர். பொதுவாக இந்த எட்டாமிடம் 'ஆயுள் ஸ்தானம்' என்று அழைக்கப் படுகிறது.
இந்த இடத்தை மூலமாகக் கொண்டு ஒரு ஜீவனின் இகலோக வாழ்வு காலம் கணிக்கப்படுகிறது. ஜீவன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்வு காலத்தை எவ்வாறு கடந்து போகிறது என்பதையும்... அதில் ஏற்படும் தடைகள்... தடங்கல்கள்... என்பவை பற்றியும் இந்த 8 ஆமிடம் அறிவிக்கிறது.
ஆணுக்கும்... பெண்ணுக்கும் ஆயுள் ஸ்தானமாக அமையும் இந்த 8 ஆமிடம்... பெண்ணின் ஜாதகத்தில்... கணவனின் ஆயுளைக் குறிக்கும் 'மாங்கல்ய ஸ்தானமாக'... கணவனின் ஆயுளைக் குறிக்கும் இடமாகவும் அமைகிறது.
அதிர்ஷ்டம் என்ற அறிவுக்கும்... முயற்சிக்கும்... அப்பால் இருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் இடமாக இந்த ஸ்தானம் அமையும். அதிர்ஷ்டம் என்ற சொல்லே... கண்ணுக்குப் புலப்படாதது... என்ற அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. அதனால்தான்... இந்த இடத்தை 'புதை பொருள் ஸ்தானம்' என்ற வகையிலும் அழைப்பதுண்டு.
எவ்வளவுதான் புகழ்ச்சியாக இந்த இடத்தை வருணித்தாலும்... இந்த அஷ்டமாதிபதியின் தசாக் காலம்... ஒரு ஜாதகருக்கு கடும் துன்பத்தை அளிப்பதை மறுக்க முடியாது. அதற்கான காரணத்தை சற்று ஆய்வோம்.
1. இந்த 8 ஆமிடம்... 12 என்ற சென்ற பிறவியைக் குறிக்கும் ஸ்தானத்திற்கு 9 ஆமிடமான 'தர்ம ஸ்தானமாகிறது'. சென்ற பிறவியில் இந்த ஜீவன்... தான் புரிந்த கடமைகளின் தர்மத்தையும்... அதர்மத்தையும் எடைபோடும் இடமாக அமைகிறது.
2. இந்த 8 ஆமிடம்... பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு (5 ஆமிடம்)... சுக... துக்க ஸ்தானமாக ( 4 ஆமிடம்) அமைகிறது. இந்த ஜீவன் தான் கொண்டு வந்திருக்கும் 'பாப-புண்ய வினைகளுக்கு' ஏற்பவே... இந்த அட்டாமதிபதி... தனது காலத்தில்.. ஜீவனை வழி நடத்துகிறார்.
3. இந்த 8 ஆமிடம்... பாக்கியம் என்ற 9 ஆமிடத்திற்கு விரய ஸ்தானமாக அமைகிறது. இது உணர்த்துவது எதையென்றால்... அந்த அடாமாதிபதியின் காலம்... வினைகளின் விளைவுகளை கரைந்து போக வைக்கிறது என்ற உண்மயைத்தான்.
4. இந்த 8 ஆமிடம்... கர்மம்... தொழில்... ஜீவனம் என்ற 10 ஆமிடத்திற்கு... லாபம் என்ற 11 ஆமிடமாகிறது. இது உணர்த்துவது எதையென்றால்... தற்போதைய பிறவியில் இந்த ஜீவன் எதிர்கொள்ளும் வினைகளை... எவ்வாறு எதிர் கொள்கிறதோ... அதற்கேற்றாவாறே... அதன் வினைகளின் தொகுப்பு அமையப் போகிறது.
இவ்வளவு சூட்சுமங்களையும் கொண்ட இந்த 8 ஆமிடம் இரகசியங்களின் சுரங்கம்தான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment