'சிவ சக்தி அம்மையாருக்கான'... பாமாலை சமர்ப்பணம் :
( ஏறத்தாள 16 வருட ஆத்ம ஞான பாதையின் வழி நடத்துதல்களுக்குப் பின்... தாயாரின் அனுக்கிரகத்தினால்... 28.8.2019 அன்று மனதில் உருவான ஒரு பாமாலை. )
ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே
அருணையில் அசலமாய் அமர்பவள் நீயே...
அடிமுடி அறிந்திடா அடியவர் மனதினில்
அருந்தவ தபசியாய் உறைபவள் நீயே... ( ... ஆதியும் )
வினைகளின் சுமையை சுமந்திடும் அடியவர்
தொடர்ந்திடும் பிறவியின் தொடர் அறுப்பாயே...
இருளினில் தனிமையில் தவிப்பவர் மனதினில்
உள்ளொளியாக ஒளிர்பவள் நீயே... ( ... ஆதியும் )
புலன் வழியாக புறம் செல்லும் மனதினை
அகத்திலிருந்து இழுப்பவள் நீயே...
மனத்தினில் தோன்றும் வினைகளின் விளைவை
முளைவிடும் முன்னே முறிப்பவள் நீயே... ( ... ஆதியும் )
கடமைகள் யாவும் கடந்திங்கு போக
கருவியாய் என்னை மாற்றிடு தாயே...
தாமரை போலே நிரினில் வாழும்
நிலையதை எனக்கு அருளிடு நீயே... ( ... ஆதியும் )
உள்ளொளி காட்டி உணர்வினை ஊட்டி
இருமையை அழிக்கும் அரும் பெரும் சுடரே
நான் என்பதழிந்து தான் என்பதாகி
தன்னுள் நிலைக்கும் நிலையருள்வாயே... ( ... ஆதியும் )
அருணையின் ஜோதி நீ... ஆத்ம ஸ்வருபிணீ...
பர்வத வர்த்தினீ... மேருவின் சக்தி நீ...
நினைத்ததும் முக்தியை அளித்திடும் மலைதனில்
நிலைத்திடும் சிவனின் சக்தியும் நீ...
ஸாய்ராம்.

( ஏறத்தாள 16 வருட ஆத்ம ஞான பாதையின் வழி நடத்துதல்களுக்குப் பின்... தாயாரின் அனுக்கிரகத்தினால்... 28.8.2019 அன்று மனதில் உருவான ஒரு பாமாலை. )
ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே
அருணையில் அசலமாய் அமர்பவள் நீயே...
அடிமுடி அறிந்திடா அடியவர் மனதினில்
அருந்தவ தபசியாய் உறைபவள் நீயே... ( ... ஆதியும் )
வினைகளின் சுமையை சுமந்திடும் அடியவர்
தொடர்ந்திடும் பிறவியின் தொடர் அறுப்பாயே...
இருளினில் தனிமையில் தவிப்பவர் மனதினில்
உள்ளொளியாக ஒளிர்பவள் நீயே... ( ... ஆதியும் )
புலன் வழியாக புறம் செல்லும் மனதினை
அகத்திலிருந்து இழுப்பவள் நீயே...
மனத்தினில் தோன்றும் வினைகளின் விளைவை
முளைவிடும் முன்னே முறிப்பவள் நீயே... ( ... ஆதியும் )
கடமைகள் யாவும் கடந்திங்கு போக
கருவியாய் என்னை மாற்றிடு தாயே...
தாமரை போலே நிரினில் வாழும்
நிலையதை எனக்கு அருளிடு நீயே... ( ... ஆதியும் )
உள்ளொளி காட்டி உணர்வினை ஊட்டி
இருமையை அழிக்கும் அரும் பெரும் சுடரே
நான் என்பதழிந்து தான் என்பதாகி
தன்னுள் நிலைக்கும் நிலையருள்வாயே... ( ... ஆதியும் )
அருணையின் ஜோதி நீ... ஆத்ம ஸ்வருபிணீ...
பர்வத வர்த்தினீ... மேருவின் சக்தி நீ...
நினைத்ததும் முக்தியை அளித்திடும் மலைதனில்
நிலைத்திடும் சிவனின் சக்தியும் நீ...
ஸாய்ராம்.










