ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 22.
'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 5.
'ஜாதகப் பொருத்தம்'
'ஜாதக ரீதியான பொருத்த முறைதான்' சிறந்தாக இருக்க முடியும்... காரணம் :
- ஒவ்வொருவருக்கும் 'தனித்தனியான ஜாதகம்' இருப்பது.
ஆண், பெண் இருவருக்கான ஜாதகங்களை 'திருமணப் பொருத்தம்' இருக்கிறதா...? என்று ஆய்வதற்கு முன்... கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை :
- இரு ஜாதகங்களையும் முதலில் தனித்தனியாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆய்வுக்கு எடுக்கும் ஜாதகத்தின் வயது... தசா-புத்தி-அந்தரம், இவற்றைக் கணித்துக் கொள்ள வேண்டும்.
- இராசி, நவாம்ஸம் அடங்கிய ஜாதக ஆய்வில்... ஜாதகருக்கு திருமணத்திற்கு ஏற்ற தசாவோ , புத்தியோ அல்லது அந்தரமோ நடக்கிறதா...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- 7 ஆம் அதிபதியின் காலம், 7 ஆம் அதிபதியுடன் தொடர்புடைய திரிகோணாதிபதிகளின் காலம், இவற்றின்... தசாவோ, புத்தியோ அல்லது அந்தரமோ நடப்பில் இருப்பது உத்தமம்.
- ஆண் ஜாதகருக்கு, லக்னம், குடும்பம், பூர்வம், களத்திரம், ஆயுள் மற்றும் ஜீவனம்... ஆகிய ஸ்தானங்களின் நிலைகளை ஆய்ந்து... அதன் நிலைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பெண் ஜாதகருக்கு, லக்னம், குடும்பம், தைர்யம், சுகம், பூர்வம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம்... ஆகிய ஸ்தானங்களின் நிலைகளை ஆய்ந்து... அதன் நிலைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இந்த 'அடிப்படை' நிலைகளின் ஆய்வுகள்தான், ஜாதக பொருத்த முறையின் மூலமாகக் கொள்ளப்படும்.
இதனடிப்படையில்... இரு ஜாதகங்களுக்கும், 'பொருத்தம்' என்ற நிலையில் எவ்வாறு அணுகுவது...?
- இரு ஜாதகங்களின் வயதுகளை ஒப்பிட்டுக் கொள்வது. உதரணமாக ஆணுக்கான வயது... பெண்ணை விட சற்றுக் கூடுதலாக இருப்பின் உத்தமம்.
- இரு ஜாதகங்களின் தசாக்கள். ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரது நடப்பு தசாக்காலம், அதாவது திருமண பொருத்தம் பார்க்கும் வேளையில்... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, நல்ல ஆதிபத்தியத்தில் அமைந்த கிரகத்தின் தசாவாகவோ இருப்பது உத்தமம். அந்த தசாக் காலம், இருவருக்கும் 5 வருடமாவது, தொடர் திருமணவாழ்வில் சுபமாக இருப்பது... இனிமையான மண வாழ்வுக்கு ஏதுவாக இருக்கும்.
- இருவரது லக்னமும் ஒன்றுக்கொன்று... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, பண பரமாகவோ இருப்பது உத்தமம்.
- இருவரது இராசிகளும் ஒன்றுக்கொன்று... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, பண பரமாகவோ இருப்பது உத்தமம்.
இந்த 'அடிப்படை அம்ஸங்கள்' ஒத்திருந்தால்தான்...இரு ஜாதகங்களையும் ஆழ்ந்த அணுகுமுறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.
அந்த ஆழ்ந்த அணுகுமுறையை... இறைவனின் அருளால் அலசி ஆய்வோம்... வரும் பகுதிகளில்,
ஸாய்ராம்.
'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 5.
'ஜாதகப் பொருத்தம்'
'ஜாதக ரீதியான பொருத்த முறைதான்' சிறந்தாக இருக்க முடியும்... காரணம் :
- ஒவ்வொருவருக்கும் 'தனித்தனியான ஜாதகம்' இருப்பது.
ஆண், பெண் இருவருக்கான ஜாதகங்களை 'திருமணப் பொருத்தம்' இருக்கிறதா...? என்று ஆய்வதற்கு முன்... கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை :
- இரு ஜாதகங்களையும் முதலில் தனித்தனியாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆய்வுக்கு எடுக்கும் ஜாதகத்தின் வயது... தசா-புத்தி-அந்தரம், இவற்றைக் கணித்துக் கொள்ள வேண்டும்.
- இராசி, நவாம்ஸம் அடங்கிய ஜாதக ஆய்வில்... ஜாதகருக்கு திருமணத்திற்கு ஏற்ற தசாவோ , புத்தியோ அல்லது அந்தரமோ நடக்கிறதா...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- 7 ஆம் அதிபதியின் காலம், 7 ஆம் அதிபதியுடன் தொடர்புடைய திரிகோணாதிபதிகளின் காலம், இவற்றின்... தசாவோ, புத்தியோ அல்லது அந்தரமோ நடப்பில் இருப்பது உத்தமம்.
- ஆண் ஜாதகருக்கு, லக்னம், குடும்பம், பூர்வம், களத்திரம், ஆயுள் மற்றும் ஜீவனம்... ஆகிய ஸ்தானங்களின் நிலைகளை ஆய்ந்து... அதன் நிலைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பெண் ஜாதகருக்கு, லக்னம், குடும்பம், தைர்யம், சுகம், பூர்வம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம்... ஆகிய ஸ்தானங்களின் நிலைகளை ஆய்ந்து... அதன் நிலைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இந்த 'அடிப்படை' நிலைகளின் ஆய்வுகள்தான், ஜாதக பொருத்த முறையின் மூலமாகக் கொள்ளப்படும்.
இதனடிப்படையில்... இரு ஜாதகங்களுக்கும், 'பொருத்தம்' என்ற நிலையில் எவ்வாறு அணுகுவது...?
- இரு ஜாதகங்களின் வயதுகளை ஒப்பிட்டுக் கொள்வது. உதரணமாக ஆணுக்கான வயது... பெண்ணை விட சற்றுக் கூடுதலாக இருப்பின் உத்தமம்.
- இரு ஜாதகங்களின் தசாக்கள். ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரது நடப்பு தசாக்காலம், அதாவது திருமண பொருத்தம் பார்க்கும் வேளையில்... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, நல்ல ஆதிபத்தியத்தில் அமைந்த கிரகத்தின் தசாவாகவோ இருப்பது உத்தமம். அந்த தசாக் காலம், இருவருக்கும் 5 வருடமாவது, தொடர் திருமணவாழ்வில் சுபமாக இருப்பது... இனிமையான மண வாழ்வுக்கு ஏதுவாக இருக்கும்.
- இருவரது லக்னமும் ஒன்றுக்கொன்று... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, பண பரமாகவோ இருப்பது உத்தமம்.
- இருவரது இராசிகளும் ஒன்றுக்கொன்று... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, பண பரமாகவோ இருப்பது உத்தமம்.
இந்த 'அடிப்படை அம்ஸங்கள்' ஒத்திருந்தால்தான்...இரு ஜாதகங்களையும் ஆழ்ந்த அணுகுமுறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.
அந்த ஆழ்ந்த அணுகுமுறையை... இறைவனின் அருளால் அலசி ஆய்வோம்... வரும் பகுதிகளில்,
ஸாய்ராம்.

No comments:
Post a Comment