மனம் என்பது என்ன ... பகுதி - 5.
இந்த மனதைக் கட்டுப்படுத்த முடியுமா... ?
முடியாது என்பதுதான் அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம். ஆனால் அதற்கான முயற்சிகள் காலம் காலமாய் தொடர்ந்து, நடந்து கொண்டே இருக்கிறது.
மனம் மட்டும் ஒரு உறுப்பாக இருந்திருந்தால்... இவ்வளவு குழப்பங்களுக்கு இடமே இருந்திருக்காது. அது ஒரு உறுப்பாக இல்லாமல்... எந்த வடிவங்களுக்கும் கட்டுப்படாமல்... அதன் இருப்பு, இந்த உடலின் எந்த பாகத்தில் என்பது தெரியாமல் இருந்து, நமது அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது... என்னும் போதுதான், மனதின் வல்லமையே... நமக்குப் புரியவருகிறது.
இவ்வளவு வல்லமையை மனம் எங்கிருந்து பெறுகிறது...?
மனம் இந்த வல்லமையை ஜீவனிடமிருந்து பெறுகிறது. ஜீவன் இந்த வல்லமையை ஆத்மாவிலிருந்து பெறுகிறது. ஆத்மா இந்த வல்லமையை பரமாத்மாவிடமிருந்து பெறுகிறது.
எல்லையற்ற பரமாத்ம சொரூபம்... ஒரு ஜீவனின் பிறப்புக்காக ஆத்ம வடிவத்தை ஏற்கிறது. அந்த ஆத்ம வடிவம் 'சத்து-சித்து-பரமானந்தம்' என்ற குண நிலையை வடிவமாகக் கொள்கிறது. இந்த ஆத்ம மூலத்தின் 'சித்து' என்ற சித்தத்தின்(இருப்பு) வழியாகத்தான் ஜீவன் தனது வாழ்வின் 'கர்ம வினைகள்' என்ற 'வினைகளின் விளைவை' அனுபவிக்க ஒரு பிறப்பை அடைகிறது. அந்த ஜீவனின் உற்பத்திதான் மனம்.
அந்த மனதின் வழியாகத்தான்... அந்த ஜீவன், தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை' எண்ணங்களாக வெளிப்படுத்துகிறது. இந்த கர்ம வினைகள் விளைவிக்கும் எண்ணங்கள் யாவும்... நம்மால் உருவாக்கப்பட்டதுதான். அந்த எண்ணங்கள் வெளிப்படுத்துவது யாவும் நமது கர்ம வினைகளின் மூலத்தைத்தான்.
எப்போது நமது கர்ம வினைகள் தீருகிறதோ... அப்போதுதான் இந்த எண்ணங்களின் உற்பத்தியும் மனதிலிருந்து தீரும்.
இப்போது புரிந்திருக்கும்... மனம் என்பது 'எண்ணங்கள் வெளிப்படும் இடம்' என்பது.
ஸாய்ராம்.
இந்த மனதைக் கட்டுப்படுத்த முடியுமா... ?
முடியாது என்பதுதான் அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம். ஆனால் அதற்கான முயற்சிகள் காலம் காலமாய் தொடர்ந்து, நடந்து கொண்டே இருக்கிறது.
மனம் மட்டும் ஒரு உறுப்பாக இருந்திருந்தால்... இவ்வளவு குழப்பங்களுக்கு இடமே இருந்திருக்காது. அது ஒரு உறுப்பாக இல்லாமல்... எந்த வடிவங்களுக்கும் கட்டுப்படாமல்... அதன் இருப்பு, இந்த உடலின் எந்த பாகத்தில் என்பது தெரியாமல் இருந்து, நமது அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது... என்னும் போதுதான், மனதின் வல்லமையே... நமக்குப் புரியவருகிறது.
இவ்வளவு வல்லமையை மனம் எங்கிருந்து பெறுகிறது...?
மனம் இந்த வல்லமையை ஜீவனிடமிருந்து பெறுகிறது. ஜீவன் இந்த வல்லமையை ஆத்மாவிலிருந்து பெறுகிறது. ஆத்மா இந்த வல்லமையை பரமாத்மாவிடமிருந்து பெறுகிறது.
எல்லையற்ற பரமாத்ம சொரூபம்... ஒரு ஜீவனின் பிறப்புக்காக ஆத்ம வடிவத்தை ஏற்கிறது. அந்த ஆத்ம வடிவம் 'சத்து-சித்து-பரமானந்தம்' என்ற குண நிலையை வடிவமாகக் கொள்கிறது. இந்த ஆத்ம மூலத்தின் 'சித்து' என்ற சித்தத்தின்(இருப்பு) வழியாகத்தான் ஜீவன் தனது வாழ்வின் 'கர்ம வினைகள்' என்ற 'வினைகளின் விளைவை' அனுபவிக்க ஒரு பிறப்பை அடைகிறது. அந்த ஜீவனின் உற்பத்திதான் மனம்.
அந்த மனதின் வழியாகத்தான்... அந்த ஜீவன், தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை' எண்ணங்களாக வெளிப்படுத்துகிறது. இந்த கர்ம வினைகள் விளைவிக்கும் எண்ணங்கள் யாவும்... நம்மால் உருவாக்கப்பட்டதுதான். அந்த எண்ணங்கள் வெளிப்படுத்துவது யாவும் நமது கர்ம வினைகளின் மூலத்தைத்தான்.
எப்போது நமது கர்ம வினைகள் தீருகிறதோ... அப்போதுதான் இந்த எண்ணங்களின் உற்பத்தியும் மனதிலிருந்து தீரும்.
இப்போது புரிந்திருக்கும்... மனம் என்பது 'எண்ணங்கள் வெளிப்படும் இடம்' என்பது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment