Monday, September 30, 2019

சிவ சக்தி அம்மையாருக்கான பாமாலை சமர்ப்பணம்

'சிவ சக்தி அம்மையாருக்கான'... பாமாலை சமர்ப்பணம் :





( ஏறத்தாள 16 வருட ஆத்ம ஞான பாதையின் வழி நடத்துதல்களுக்குப் பின்... தாயாரின் அனுக்கிரகத்தினால்... 28.8.2019 அன்று மனதில் உருவான ஒரு பாமாலை. )

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே
அருணையில் அசலமாய் அமர்பவள் நீயே...
அடிமுடி அறிந்திடா அடியவர் மனதினில்
அருந்தவ தபசியாய் உறைபவள் நீயே...               ( ... ஆதியும் )

வினைகளின் சுமையை சுமந்திடும் அடியவர்
தொடர்ந்திடும் பிறவியின் தொடர் அறுப்பாயே...
இருளினில் தனிமையில் தவிப்பவர் மனதினில்
உள்ளொளியாக ஒளிர்பவள் நீயே...                        ( ... ஆதியும் )

புலன் வழியாக புறம் செல்லும் மனதினை
அகத்திலிருந்து இழுப்பவள் நீயே...
மனத்தினில் தோன்றும் வினைகளின் விளைவை
முளைவிடும் முன்னே முறிப்பவள் நீயே...       ( ... ஆதியும் )

கடமைகள் யாவும் கடந்திங்கு போக
கருவியாய் என்னை மாற்றிடு தாயே...
தாமரை போலே நிரினில் வாழும்
நிலையதை எனக்கு அருளிடு நீயே...                    ( ... ஆதியும் )

உள்ளொளி காட்டி உணர்வினை ஊட்டி
இருமையை அழிக்கும் அரும் பெரும் சுடரே
நான் என்பதழிந்து தான் என்பதாகி
தன்னுள் நிலைக்கும் நிலையருள்வாயே...        ( ... ஆதியும் )

அருணையின் ஜோதி நீ... ஆத்ம ஸ்வருபிணீ...
பர்வத வர்த்தினீ... மேருவின் சக்தி நீ...
நினைத்ததும் முக்தியை அளித்திடும் மலைதனில்
நிலைத்திடும் சிவனின் சக்தியும் நீ...

                                                                      ஸாய்ராம்.





No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...