ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 17.
'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 8.
சனி பகவான்.
காலபுருஷ இராசியின் மூலமாகக் காலத்தை ஆயும் போது... அதன் இறுதி அமைவாக 'சனி பகவானை' ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் பகுதியின் எண்ணிக்கைகளும் 8 ஆக வருவதே... அவரின் ஆளுமையையும்... அவரின் முக்கியத்துவத்தையும் நமக்கு விளக்கிவிடுகிறது.
இந்த உலகில் அவதரித்திருக்கிற ஜீவர்கள் அனைத்தும் 'காலத்தின்' கட்டுக்குள் இருந்துதான்... தமது வாழ்வு நாட்களைக் கடக்கின்றன. இதற்கு எதுவும் விதி விலக்கல்ல. ஆனால்... ஒவ்வொரு ஜீவனுக்குமான வாழ்வுக் காலம்தான்... ஜீவனுக்கு ஜீவன் மாறிகொண்டே இருக்கின்றது.
அதன் வாழ்வு காலங்களைக் கடந்து போக... அதற்கான கடமைகள் இருக்கின்றன. அந்தக் கடமைகளை எவ்வாறு எதிர்கொண்டு ஜீவன்கள் கடக்கிறது என்பதைத்தான்... கால புருஷ இராசியின் 10 ஆமிடமான 'ஜீவன ஸ்தானம்' சுட்டிக் காட்டுகிறது.
அந்த கடமையை செய்யும் ஜீவன்... அந்தக் கடமையிலிருந்து விளையும் எவ்வாறான விளைவுகளை அனுபவிக்கப் போகின்றது என்பதை... 'லாபம்' என்ற 11 ஆமிடம் சுட்டிக் காட்டுகிறது.
அந்த 11 ஆமிடம் சுட்டிக் காட்டும் 'வினைகளின் விளைவுகளைத்தான்'... அதற்கு 7 ஆமிடமான... கால புருஷ இராசிக்கு... 'பூர்வ புண்ணிய ஸ்தானமான' 5 ஆமிடம் சேமித்து வைத்துக் கொள்கிறது.
கடமைகளை எதிர் கொள்ளும் 10 ஆமிடமான 'ஜீவன ஸ்தானத்தில்' அந்த ஜீவனுக்கான ஆற்றலை வழங்கும் 'செவ்வாய் பகவான்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். கடமைகளில் தனது கவனத்தை வைத்து அதீத ஆற்றலுடன் செயல்படும் போது... 'ஞானம் அற்றுப் போக வாய்ப்பிருப்பதைச்' சுட்டிக் காட்டுவதற்காகவே... அந்த ஸ்தானத்தில் 'குரு பகவான்' தனது ஆற்றலை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். இந்தக் கடமைக்கான போராட்டத்தில் ஈடுபடும் ஜீவன்... தான் அனுபவிக்கும் 'சுக-துக்கங்களை' வெளிப்படுத்தும் இடமாக... ஜீவன ஸ்தானத்திற்கு எதிரான... சுக ஸ்தானமான 4 ஆமிடம் அமைகிறது.
அந்த 4 ஆமிடத்தில்...சுக துக்கங்களுக்கு ஏற்ப தனது ஆற்றலை இழந்து தவிக்கும் நிலையை... 'செவ்வாய் பகவான்' தனது 'நீச நிலையை அடைந்தும்... அதனால் விளையும் 'ஞானத்தை'... 'குரு பகவான்' தனது 'உச்ச நிலையில்' பலத்துடனிருந்தும் அந்த ஜீவனுக்கு அருள்கிறார்கள்.
காலபுருஷ இராசியில் இராசியாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... தனது வீட்டில் பலத்துடன் அமர்ந்து... பூரவ பூண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவானின்' உச்ச பலத்துடன் சேரும் போது... 'கர்ம வினைகள்' என்ற வினைகளின் விளைவுகளை அந்தப் பிறவியிலேயே... அந்த ஜீவன் அனுபவித்து... பிறவிகளின் தொடர்களிலிருந்து விடுபடுவதை... 'நீச நிலையில்'... பலமற்று இருக்கும் 'சனி பகவான்' உணர்த்துகிறார்.
அதே நேரத்தில்... காலம் என்ற கட்டுக்குள் இருந்து வெளியேறி... உலக சுகம் என்ற மோகத்திலும்... போகத்திலும் சிக்கிக் கொள்ளும் ஜீவன்... தொடர்ந்து பிறவிகளை அனுபவிக்கப் போகிறது என்பதைச் சுட்டிக் காட்டவே... இராசிக்கு 7 ஆமிடமான ... தொடர்பு ஸ்தானத்தில்... 'சனி பகவான்' தனது உச்ச பலத்தைப் பெறுகிறார்.
இதுவரை... கால புருஷ இராசியின் வழியாக... காலம் ஒரு ஜீவனுக்கு உணர்த்தும் பாடங்களை... கிரகங்களின் ஸ்தான... ஆட்சி... உச்ச... நீச...நிலைகளைக் கொண்டு கடந்து வந்தோம்.
அவற்றின் சாரம் இதுதான்... 'ஒவ்வொரு ஜீவனும் அதனதன் கடமைகளைப் பற்றற்று முடித்து... அறம், பொருள், இன்பம், வீடு என்ற 'புருஷர்த்தங்களுக்கு' ஒப்ப... தர்மத்துடன் வாழ்ந்து... பிறவியில்லாப் பெருவாழ்வை அடைந்திட வேண்டும்'... என்பதுதான்.
ஸாய்ராம்.
'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 8.
சனி பகவான்.
காலபுருஷ இராசியின் மூலமாகக் காலத்தை ஆயும் போது... அதன் இறுதி அமைவாக 'சனி பகவானை' ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் பகுதியின் எண்ணிக்கைகளும் 8 ஆக வருவதே... அவரின் ஆளுமையையும்... அவரின் முக்கியத்துவத்தையும் நமக்கு விளக்கிவிடுகிறது.
இந்த உலகில் அவதரித்திருக்கிற ஜீவர்கள் அனைத்தும் 'காலத்தின்' கட்டுக்குள் இருந்துதான்... தமது வாழ்வு நாட்களைக் கடக்கின்றன. இதற்கு எதுவும் விதி விலக்கல்ல. ஆனால்... ஒவ்வொரு ஜீவனுக்குமான வாழ்வுக் காலம்தான்... ஜீவனுக்கு ஜீவன் மாறிகொண்டே இருக்கின்றது.
அதன் வாழ்வு காலங்களைக் கடந்து போக... அதற்கான கடமைகள் இருக்கின்றன. அந்தக் கடமைகளை எவ்வாறு எதிர்கொண்டு ஜீவன்கள் கடக்கிறது என்பதைத்தான்... கால புருஷ இராசியின் 10 ஆமிடமான 'ஜீவன ஸ்தானம்' சுட்டிக் காட்டுகிறது.
அந்த கடமையை செய்யும் ஜீவன்... அந்தக் கடமையிலிருந்து விளையும் எவ்வாறான விளைவுகளை அனுபவிக்கப் போகின்றது என்பதை... 'லாபம்' என்ற 11 ஆமிடம் சுட்டிக் காட்டுகிறது.
அந்த 11 ஆமிடம் சுட்டிக் காட்டும் 'வினைகளின் விளைவுகளைத்தான்'... அதற்கு 7 ஆமிடமான... கால புருஷ இராசிக்கு... 'பூர்வ புண்ணிய ஸ்தானமான' 5 ஆமிடம் சேமித்து வைத்துக் கொள்கிறது.
கடமைகளை எதிர் கொள்ளும் 10 ஆமிடமான 'ஜீவன ஸ்தானத்தில்' அந்த ஜீவனுக்கான ஆற்றலை வழங்கும் 'செவ்வாய் பகவான்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். கடமைகளில் தனது கவனத்தை வைத்து அதீத ஆற்றலுடன் செயல்படும் போது... 'ஞானம் அற்றுப் போக வாய்ப்பிருப்பதைச்' சுட்டிக் காட்டுவதற்காகவே... அந்த ஸ்தானத்தில் 'குரு பகவான்' தனது ஆற்றலை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். இந்தக் கடமைக்கான போராட்டத்தில் ஈடுபடும் ஜீவன்... தான் அனுபவிக்கும் 'சுக-துக்கங்களை' வெளிப்படுத்தும் இடமாக... ஜீவன ஸ்தானத்திற்கு எதிரான... சுக ஸ்தானமான 4 ஆமிடம் அமைகிறது.
அந்த 4 ஆமிடத்தில்...சுக துக்கங்களுக்கு ஏற்ப தனது ஆற்றலை இழந்து தவிக்கும் நிலையை... 'செவ்வாய் பகவான்' தனது 'நீச நிலையை அடைந்தும்... அதனால் விளையும் 'ஞானத்தை'... 'குரு பகவான்' தனது 'உச்ச நிலையில்' பலத்துடனிருந்தும் அந்த ஜீவனுக்கு அருள்கிறார்கள்.
காலபுருஷ இராசியில் இராசியாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... தனது வீட்டில் பலத்துடன் அமர்ந்து... பூரவ பூண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவானின்' உச்ச பலத்துடன் சேரும் போது... 'கர்ம வினைகள்' என்ற வினைகளின் விளைவுகளை அந்தப் பிறவியிலேயே... அந்த ஜீவன் அனுபவித்து... பிறவிகளின் தொடர்களிலிருந்து விடுபடுவதை... 'நீச நிலையில்'... பலமற்று இருக்கும் 'சனி பகவான்' உணர்த்துகிறார்.
அதே நேரத்தில்... காலம் என்ற கட்டுக்குள் இருந்து வெளியேறி... உலக சுகம் என்ற மோகத்திலும்... போகத்திலும் சிக்கிக் கொள்ளும் ஜீவன்... தொடர்ந்து பிறவிகளை அனுபவிக்கப் போகிறது என்பதைச் சுட்டிக் காட்டவே... இராசிக்கு 7 ஆமிடமான ... தொடர்பு ஸ்தானத்தில்... 'சனி பகவான்' தனது உச்ச பலத்தைப் பெறுகிறார்.
இதுவரை... கால புருஷ இராசியின் வழியாக... காலம் ஒரு ஜீவனுக்கு உணர்த்தும் பாடங்களை... கிரகங்களின் ஸ்தான... ஆட்சி... உச்ச... நீச...நிலைகளைக் கொண்டு கடந்து வந்தோம்.
அவற்றின் சாரம் இதுதான்... 'ஒவ்வொரு ஜீவனும் அதனதன் கடமைகளைப் பற்றற்று முடித்து... அறம், பொருள், இன்பம், வீடு என்ற 'புருஷர்த்தங்களுக்கு' ஒப்ப... தர்மத்துடன் வாழ்ந்து... பிறவியில்லாப் பெருவாழ்வை அடைந்திட வேண்டும்'... என்பதுதான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment