ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 1 :
சத்துவ குணத்தின் சாட்சியாக இருக்கும் 'சிவ பெருமானின்' அம்சமாக 64 மூர்த்தங்களை வகைப்படுத்துகிறது சைவம். அந்த மூர்த்தங்களில் ஒன்றுதான்... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவானின்' ரூபம்.
எல்லா சிவாலயங்களிலும், பிரகாரத்தில் தெற்குமுகமாக அமைந்திருக்கும் ரூபம்தான்... தக்ஷ்ணாமுர்த்தி ரூபம். ஒரு ஆலமரத்தின் அடியில், தனது இடது காலைத் தூக்கி, வலது கால் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார். நான்கு திருக்கரங்களில், இரண்டு கரங்களில் உடுக்கு, ஜோதியோடும்... அடுத்த இரண்டு கரங்களில், ஒன்றில் வேதச் சுவடிகளும் மற்றொன்றில் 'சின் முத்திரையோடும்' காட்சி தருகிறார். அவரின் காலடியில் 'சனாதன முனிவர்கள்' நான்கு பேர்... ஆனந்த ஊணர்வோடு கூடிய நிலையில்... நான்கு விதமான நிலைகளில் இருப்பதையும் காணலாம்.
நவக்கிரகங்களின் அமைவிலும்... தெற்கு முகமாக அமைந்திருக்கும் ரூபம்தான் ... 'குரு பகவானின்' ரூபமாக வழிபடப்படுகிறது. ஆனால் நவக்கிரக 'குரு பகவானும்'... தெற்கு முகமாக, ஆலய பிரகாரத்தில் அமைந்திருக்கிற 'குரு தக்ஷ்ணாமுர்த்தியின்' அமைவும்... ஒன்றல்ல.
நவக்கிரக அமைவில் அமைந்திருக்கும் 'குரு பகவான்' நவக்கிரகங்களில் ஒருவர். பிரகாரத்தில் அமைந்திருக்கும் 'குரு தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' சர்வேஸ்வரரின் 64 ரூபங்களில் ஒன்றாகிறார்.
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு 'பிரம்ம குமாரர்கள்' வேதங்கள், வேதத்தின் சிகரமான வேதாந்தங்கள் என்ற அனைத்து பிரம்ம ஆய்வுகளின் வழியாக பயணித்த பின்னரும்... 'ஆத்ம அனுபவம்' கைவராத நிலையில் கலங்கி நின்றனர். அவர்களது கலக்கத்தை நீக்கி... இந்தப் பாதையில்... அவர்களை அனுபவம் கைகூடியவர்களாக மாற்ற... அவரை 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவானிடம்' அனுப்புகிறார்... பிரம்ம தேவர்.
நிறைய கேள்விகளுடனும்... அதிக சந்தேகங்களுடனும்... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியின்' திருவடிக்கு வந்த போது... அவர், கண்களை மூடி, மௌனமாக, தவத்தில் ஆழ்ந்திருந்தார். வந்தவர்கள் நால்வரும்... அமைதியாக அவரின் திருவடியில் அமர்ந்துவிட்டனர். கண்களை மூடி... மௌனமாக அமர்ந்திருந்த அவர்களை, அவர்களுக்குள் இருந்து... உள் நோக்கிய வழியில்... 'ஆத்ம ஞானத்தை' நோக்கி வழி நடத்தி... அவர்கள் நால்வருக்கும் 'ஆதமானுபூதியை' அனுபவிக்க வைத்தார்... 'குரு தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'.
மிக நீண்ட நேரத்திற்குப் பின்... இந்த பிரபஞ்ச உணர்வுக்கு வந்த அந்த நால்வர் மனதிலும்... எந்த சந்தேகங்களும் இல்லை. எந்த கேள்விகளும் இல்லை. 'கைவல்ய நிலை' என்ற ஆத்மானுபவம் கிட்டிய நிலையில்... அந்த நால்வரும் பரமானந்த நிலைகளில்... அவரின் பாதங்களில் வீற்றிருக்கும் கோலங்களைத்தன்... நாம் அந்த ரூபத்தின் காலடியில் பார்க்கின்றோம்.
அவர்கள் நால்வருக்கும்... குருவாக இருந்து... 'தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' அவர்களுக்கு, காட்சி அளித்தைத்தான்... இன்றும் நாம்... சிவாலயங்களின், தென்முக பிரகாரத்தில் தரிசனம் செய்கிறோம்.
அவரின் ரூபத்தில் அமைந்திருக்கிற... ஏனைய சூட்சுமங்களை தொடர்ந்து பார்ப்போம்... அடுத்த பதிவில்...
ஸாய்ராம்.
சத்துவ குணத்தின் சாட்சியாக இருக்கும் 'சிவ பெருமானின்' அம்சமாக 64 மூர்த்தங்களை வகைப்படுத்துகிறது சைவம். அந்த மூர்த்தங்களில் ஒன்றுதான்... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவானின்' ரூபம்.
எல்லா சிவாலயங்களிலும், பிரகாரத்தில் தெற்குமுகமாக அமைந்திருக்கும் ரூபம்தான்... தக்ஷ்ணாமுர்த்தி ரூபம். ஒரு ஆலமரத்தின் அடியில், தனது இடது காலைத் தூக்கி, வலது கால் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார். நான்கு திருக்கரங்களில், இரண்டு கரங்களில் உடுக்கு, ஜோதியோடும்... அடுத்த இரண்டு கரங்களில், ஒன்றில் வேதச் சுவடிகளும் மற்றொன்றில் 'சின் முத்திரையோடும்' காட்சி தருகிறார். அவரின் காலடியில் 'சனாதன முனிவர்கள்' நான்கு பேர்... ஆனந்த ஊணர்வோடு கூடிய நிலையில்... நான்கு விதமான நிலைகளில் இருப்பதையும் காணலாம்.
நவக்கிரகங்களின் அமைவிலும்... தெற்கு முகமாக அமைந்திருக்கும் ரூபம்தான் ... 'குரு பகவானின்' ரூபமாக வழிபடப்படுகிறது. ஆனால் நவக்கிரக 'குரு பகவானும்'... தெற்கு முகமாக, ஆலய பிரகாரத்தில் அமைந்திருக்கிற 'குரு தக்ஷ்ணாமுர்த்தியின்' அமைவும்... ஒன்றல்ல.
நவக்கிரக அமைவில் அமைந்திருக்கும் 'குரு பகவான்' நவக்கிரகங்களில் ஒருவர். பிரகாரத்தில் அமைந்திருக்கும் 'குரு தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' சர்வேஸ்வரரின் 64 ரூபங்களில் ஒன்றாகிறார்.
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு 'பிரம்ம குமாரர்கள்' வேதங்கள், வேதத்தின் சிகரமான வேதாந்தங்கள் என்ற அனைத்து பிரம்ம ஆய்வுகளின் வழியாக பயணித்த பின்னரும்... 'ஆத்ம அனுபவம்' கைவராத நிலையில் கலங்கி நின்றனர். அவர்களது கலக்கத்தை நீக்கி... இந்தப் பாதையில்... அவர்களை அனுபவம் கைகூடியவர்களாக மாற்ற... அவரை 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவானிடம்' அனுப்புகிறார்... பிரம்ம தேவர்.
நிறைய கேள்விகளுடனும்... அதிக சந்தேகங்களுடனும்... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியின்' திருவடிக்கு வந்த போது... அவர், கண்களை மூடி, மௌனமாக, தவத்தில் ஆழ்ந்திருந்தார். வந்தவர்கள் நால்வரும்... அமைதியாக அவரின் திருவடியில் அமர்ந்துவிட்டனர். கண்களை மூடி... மௌனமாக அமர்ந்திருந்த அவர்களை, அவர்களுக்குள் இருந்து... உள் நோக்கிய வழியில்... 'ஆத்ம ஞானத்தை' நோக்கி வழி நடத்தி... அவர்கள் நால்வருக்கும் 'ஆதமானுபூதியை' அனுபவிக்க வைத்தார்... 'குரு தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'.
மிக நீண்ட நேரத்திற்குப் பின்... இந்த பிரபஞ்ச உணர்வுக்கு வந்த அந்த நால்வர் மனதிலும்... எந்த சந்தேகங்களும் இல்லை. எந்த கேள்விகளும் இல்லை. 'கைவல்ய நிலை' என்ற ஆத்மானுபவம் கிட்டிய நிலையில்... அந்த நால்வரும் பரமானந்த நிலைகளில்... அவரின் பாதங்களில் வீற்றிருக்கும் கோலங்களைத்தன்... நாம் அந்த ரூபத்தின் காலடியில் பார்க்கின்றோம்.
அவர்கள் நால்வருக்கும்... குருவாக இருந்து... 'தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' அவர்களுக்கு, காட்சி அளித்தைத்தான்... இன்றும் நாம்... சிவாலயங்களின், தென்முக பிரகாரத்தில் தரிசனம் செய்கிறோம்.
அவரின் ரூபத்தில் அமைந்திருக்கிற... ஏனைய சூட்சுமங்களை தொடர்ந்து பார்ப்போம்... அடுத்த பதிவில்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment