ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 21.
'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 4.
'ஜாதகப் பொருத்தம்'
நாம் ஏற்கனவே விவரித்த படி... 'இல்வாழ்வு' ஜீவர்கள் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் கடமை' என்ற நிலை மாறி... அது ஒரு 'சுகத்தையும்... இடைவிடா மகிழ்வையும்...' தேடும் ஒரு வாய்ப்பு, என்பதான எதிர்பார்ப்பாக மாறியிருப்பதனால்...
1. இன்றைய சூழலில்... புரதான முறையிலான 'பெயர் பொருத்த முறையில்' இதற்குத் தீர்வு காண முடியாது.
ஏனெனில்... தற்போது சூட்டப் பட்டுக் கொண்டிருக்கும் பெயர்களைக் கொண்டு 'குல - குடி - குடும்பம் - குலதெய்வம்' என்பதை நிர்த்தாரணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
2. மற்றொரு முறையான 'நட்சத்திரப் பொருத்த முறையிலும்' இதற்கான தீர்வை அளிக்க முடியாது.
ஏனெனில்... உலக மாந்தர் எண்ணிக்கை 700 கோடியைத் தாண்டி விட்டது. அதில் நமது மாநிலத்தின் மக்கள் தொகை 7 கோடியைத் தாண்டி விட்டது. நமது மாநிலத்தில் மட்டும், ஏறத்தாள 25 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள்... ஒரே நட்சத்திரத்தில் உலவ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
25 லட்சத்தில் இருக்கும் ஒரு நபர்... மிகுதி இருக்கும் 6. 3/4 கோடியில்... ஒரு வரனைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் தனக்குப் பொருந்துவதாகக் கொண்டாலும்... அதுவும் 25 லட்சத்திற்குள்தான் இருக்கும். இது... 'ஒரு வைக்கோலுக்குள் ஊசியைத் தேடும் நிலைதான்'.
இந்த 'நட்சத்திரப் பொருத்த முறையிலும்'... 'இதுதான் உங்களுக்கான வரன்...' என்பதை உறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஒரு வரனுக்கு வரும் 10 ஜாதகங்களை 'நட்சத்திர ரீதியான பொருத்த முறையில்' இணைக்க முற்படும் போது... 3 அல்லது 4 ஜாதகங்களாவது பொருந்தி வரும் வாய்ப்பு கூடி வரும். மீண்டும் அதில் எதைத் தேடுவது என்ற குழப்பங்கள்தான் மிஞ்சி நிற்கும்.
அப்போது... நட்சத்திர ரீதியான பொருத்த முறைகளை பின் தள்ளி... வரனின் 'பொருளாதாரம்... செல்வ செழிப்பு... வசதியான வாழ்வு...' என்பவைதான் முன் வந்து நிற்கிறது.
இந்த ரீதியான பொருத்த முறைகளால்... தவறான 'எதிர்பார்ப்புகள்' கொண்ட மாந்தர்களைத் தட்டி எழுப்பி... சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடிவதில்லை.
இந்த சூழலில்... நமக்குத் தேவை ஒரு சரியான 'பொருத்த முறை'. அது ஒரு வரனுக்கு வரும் அத்தனை ஜாதகங்களிலிருந்தும்... 'ஒரே ஒரு' ஜாதகத்தை மட்டும்தான் பொருந்துகிறது... என்று,எடுத்து வைக்க வேண்டும். அதற்கான வலுவான காரணங்களையும் கூற வேண்டும்.
அந்த முறை... 'ஜாதக ரீதியான பொருத்த முறை' தான்.
இனி வரும் பகுதிகளில்... 'ஜாதக ரீதியான பொருத்த முறையை' எவ்வாறு கையாளலாம்... என்பதை அலசி ஆய்வோம்... இறைவனின் அருளால்.
ஸாய்ராம்.
'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 4.
'ஜாதகப் பொருத்தம்'
நாம் ஏற்கனவே விவரித்த படி... 'இல்வாழ்வு' ஜீவர்கள் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் கடமை' என்ற நிலை மாறி... அது ஒரு 'சுகத்தையும்... இடைவிடா மகிழ்வையும்...' தேடும் ஒரு வாய்ப்பு, என்பதான எதிர்பார்ப்பாக மாறியிருப்பதனால்...
1. இன்றைய சூழலில்... புரதான முறையிலான 'பெயர் பொருத்த முறையில்' இதற்குத் தீர்வு காண முடியாது.
ஏனெனில்... தற்போது சூட்டப் பட்டுக் கொண்டிருக்கும் பெயர்களைக் கொண்டு 'குல - குடி - குடும்பம் - குலதெய்வம்' என்பதை நிர்த்தாரணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
2. மற்றொரு முறையான 'நட்சத்திரப் பொருத்த முறையிலும்' இதற்கான தீர்வை அளிக்க முடியாது.
ஏனெனில்... உலக மாந்தர் எண்ணிக்கை 700 கோடியைத் தாண்டி விட்டது. அதில் நமது மாநிலத்தின் மக்கள் தொகை 7 கோடியைத் தாண்டி விட்டது. நமது மாநிலத்தில் மட்டும், ஏறத்தாள 25 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள்... ஒரே நட்சத்திரத்தில் உலவ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
25 லட்சத்தில் இருக்கும் ஒரு நபர்... மிகுதி இருக்கும் 6. 3/4 கோடியில்... ஒரு வரனைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் தனக்குப் பொருந்துவதாகக் கொண்டாலும்... அதுவும் 25 லட்சத்திற்குள்தான் இருக்கும். இது... 'ஒரு வைக்கோலுக்குள் ஊசியைத் தேடும் நிலைதான்'.
இந்த 'நட்சத்திரப் பொருத்த முறையிலும்'... 'இதுதான் உங்களுக்கான வரன்...' என்பதை உறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஒரு வரனுக்கு வரும் 10 ஜாதகங்களை 'நட்சத்திர ரீதியான பொருத்த முறையில்' இணைக்க முற்படும் போது... 3 அல்லது 4 ஜாதகங்களாவது பொருந்தி வரும் வாய்ப்பு கூடி வரும். மீண்டும் அதில் எதைத் தேடுவது என்ற குழப்பங்கள்தான் மிஞ்சி நிற்கும்.
அப்போது... நட்சத்திர ரீதியான பொருத்த முறைகளை பின் தள்ளி... வரனின் 'பொருளாதாரம்... செல்வ செழிப்பு... வசதியான வாழ்வு...' என்பவைதான் முன் வந்து நிற்கிறது.
இந்த ரீதியான பொருத்த முறைகளால்... தவறான 'எதிர்பார்ப்புகள்' கொண்ட மாந்தர்களைத் தட்டி எழுப்பி... சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடிவதில்லை.
இந்த சூழலில்... நமக்குத் தேவை ஒரு சரியான 'பொருத்த முறை'. அது ஒரு வரனுக்கு வரும் அத்தனை ஜாதகங்களிலிருந்தும்... 'ஒரே ஒரு' ஜாதகத்தை மட்டும்தான் பொருந்துகிறது... என்று,எடுத்து வைக்க வேண்டும். அதற்கான வலுவான காரணங்களையும் கூற வேண்டும்.
அந்த முறை... 'ஜாதக ரீதியான பொருத்த முறை' தான்.
இனி வரும் பகுதிகளில்... 'ஜாதக ரீதியான பொருத்த முறையை' எவ்வாறு கையாளலாம்... என்பதை அலசி ஆய்வோம்... இறைவனின் அருளால்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment