கிரகங்கள் ஆட்சி, உச்ச பலம் பெற்ற அமைவுகளைப் பெற்றிருக்கும் ஜாதகர்களின் வாழ்வுதான், சிறப்பாக அமைய வேண்டும் என்ற நியதிகள் ஏதும் இல்லை. அந்தந்த ஜாதகர்களின் 'பூர்வ கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, கிரகங்களின் அமைவுகளும் நிகழ்கின்றன.
40 வயதைக் கடந்து கொண்டிருக்கிற, உலக ரீதியான வெற்றியையும், புகழையும் அடைந்திருக்கிற ஒரு ஜாதகரின், ஜாதகத்தில், மிக எளிமையாக அமைந்திருக்கும் கிரகங்களின் அமைவே, இதற்கு சாட்சியாகிறது.
* 'கன்னி இராசியே' லக்னமாகவும்... இராசியாகவும் அமைகிறது.
* லக்னாதிபதியான 'புத பகவான்'.. 10 ஆம் பாவமான ஜீவன பாவத்தில் ஆட்சி பலம் பெற்று அமைந்தார். அவருடன் 'விரயதிபதியான'... 'சூரிய பகவான்' இணைந்தார்/.
* தன - பாக்கியாதிபதியாகிய 'சுக்கிர பகவான்' லாப ஸ்தானத்தில், 'ராகு பகவானுடன்' இணைந்தார்.
* தைர்ய - அட்டமாபதி 'செவ்வாய் பகவான்', 'பாக்கிய ஸ்தானத்தில்' அமர்ந்தார்.
* சுக - களத்திர ஸ்தானாதிபதியான 'குரு பகவான்', லக்னத்திலேயே 'பூர்வ புண்ணியஸ்தானாதிபதி'... 'சனி பகவானுடனும்', 'லாபாதிபதியான'... 'சந்திர பகவானுடனும் இணைந்தார்.
* 'கேது பகவான்'... 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிறார்.
... அது மட்டுமல்ல...
~ 4 வயது வரை... 'விரயாதிபதியான'... 'சூரிய பகவானின்' தசாவும்...
~ 14 வயது வரை... 'லாபாதிபதியான'... 'சந்திர பகவானின்' தசாவும்...
~ 21 வயது வரை... 'தைர்ய - அட்டமாதிபதியான'... 'செவ்வாய் பகவானின்' தசாவும்...
~ 39 வயது வரை... 'லாப ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிற 'ராகு பகவானின்' தசாவும்...
~ தற்போது, 55 வயது வரைக்கான, 'குரு பகவானின்' தசாவும் கடந்து கொண்டிருக்கிறது.
... 'லக்னாதிபதியான' புத பகவான் மட்டும்தான் 'ஆட்சி பலம்' பெற்றிருக்கிறார். மேலும், அவர் கடந்து வந்திருக்கிற தசாக்களும், யோகாதிபதிகளின் தசாக்கள் அல்ல. பின் எவ்வாறு அவர் உலகியலின் உயர் வாழ்வான 'செல்வ செழிப்பையும்'... 'புகழையும்' எட்டிப் பிடித்தார்... ?
# 'லக்னாதிபதியான' புத பகவான், 'லக்னத்திலேயே' அமர்ந்து... பலம் பெற்றிருக்கிற 'குரு பகவானின்' சாரத்தில் அமைந்தார்.
# தன - பாக்கியாதிபதியாகியு 'சுக்கிர பகவான்', 'லாப ஸ்தானத்தில்' அமர்ந்து, 'லக்னத்திலேயே' அமர்ந்திருக்கிற 'பூர்வ புண்ணியாதிபதியான' சனி பகவானின் சாரத்தில் அமைந்தார்.
# தைர்ய - அட்டாமாதிபதியான 'செவ்வாய் பகவான்', பாக்கிய ஸ்தானத்தில் 'சுய சாரத்தில்' அமைந்தாலும், லகன்த்திலேயே அமர்ந்திருக்கிற 'சுக - களத்திர ஸ்தானாதிபதியான' குரு பகவானின் பார்வையைப் பெற்றார்.
#'சுக - களத்திர ஸ்தானாதிபதியான' குரு பகவான், லகனத்திலேயே, 'பூர்வ புண்ணியாதிபதியான' சனி பகவானுடனும், 'லாபாதிபதியான' சந்திர பகவானுடன் இணைந்தார்.
# 'லாபாதிபதியான' சந்திர பகவான், லக்னத்தில், 'பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான' சனி பகவானுடனும், 'சுக - களத்திர ஸ்தானாதிபதியான' குரு பகவானுடன் இணைந்தார்.
# 'விரயாதிபதியான' சூரிய பகவான்' லக்னாதிபதியான 'புத பகவானுடன்' இணைந்து, 'குரு பகவானின்' சாரத்தால் வழி நடத்தப் படுகிறார்.
# 'லாப ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிற 'ராகு பகவான்', தன - பாக்கியாதிபதியான 'சுக்கிர பகவானுடன்' இணைந்தது மட்டுமல்ல... 'பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான' சனி பகவானின் சாரத்தில் அமர்ந்தார்.
# 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிற 'கேது பகவான்' லக்னத்திலேயே அமர்ந்திருக்கிற 'குரு பகவானால்' பார்க்கப் படுகிறார்.
இப்போது புரிந்திருக்கும் ! மிக எளிமையாக அமைந்திருக்கும் இந்தக் கிரகங்களின் அமைவுகள்... எவ்வாறு ஒரு ஜாதகரின் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளை'... அவற்றின் சூட்சுமமான, 'சார பலங்களின்' மூலம், அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை.
இதைத்தான் 'கோள்களின் கோலாட்டம்' என்று ஜோதிட வல்லுனர்கள் வருணிக்கிறார்கள் போலும் !
ஸாய்ராம்.