Sunday, May 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 176. 'நீச பங்கம் செய்த அற்புதம்"


 2003 ஆம் ஆண்டின் மத்தியில், ஒரு நெருங்கிய நண்பரின் அறிமுகத்துடன், தனது மகனின் ஜாதகத்துடன் ஒரு பெரியவர் வந்திருந்தார். இரண்டு மகள்கள், ஒரு மகன் என்ற குடும்பத்தில், மகன், பட்ட மேல் படிப்பு பதித்து, சென்னையில், ஒரு கார்ப்பரேட் கம்பெனியில், நிர்வாகப் பணியில், சாதாரண ஊழியராகப் பணி புரிந்து வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலமே மகனின் பொருளாதார உயர்வில்தான் இருக்கிறது என்பதால், அவரின் எதிர்கால வாழ்வைப் பற்றிய கேள்விகளுடன் வந்திருந்தார்.

அந்த ஜாதகத்தின் அமைவு சற்று வித்தியாசமாக இருந்தது. 

~ 'விருச்சிக லக்னத்தில்' பிறந்திருந்த ஜாதகரின் லக்னாதிபதியான 'செவ்வாய் பகவான்', பாக்கிய ஸ்தானமான 'கடக இராசியில்' நீச பலம் பெற்று, தனது வலிமையை இழந்திருந்தார்.

~ பாக்கியாதிபதியான 'சந்திர பகவான்', லகனத்திலேயே தனது பலத்தை இழந்து 'நீசம் பெற்று' அமர்ந்திருந்தார்.

~ 7 ஆம் பாவாதிபதியான, 'சுக்கிர பகவான்' 11 ஆம் பாவமான லாப ஸ்தானத்தில், தனது பலத்தை இழந்து, நீச நிலையில்' சஞ்சரித்தார்.

~ இந்த 3 கிரகங்களின் நீச நிலையில் ( லக்னாதிபதியான 'செவ்வாய் பகவான்... பாக்கியாதிபதியான 'சந்திர பகவான்'... களத்திர ஸ்தானாதிபதியான 'சுக்கிர பகவான்')... 'சுக்கிர பகவான்' மட்டும், அவரமர்ந்த வீட்டதிபதியான 'புத பகவானுடன்' இணைந்து அமர்ந்திருந்தார். 'புத பகவானின்' உச்ச பலத்தால், 'சுக்கிர பகவான்' தனது 'நீச நிலையிலிருந்து' விடுபட்டு... நீச பங்கம் அடைந்திருந்தார்.

~ லாப ஸ்தானாதிபதியான 'புத பகவானின்' உச்ச பலத்தினால், நீச பங்கம் பெற்ற 'சுக்கிர பகவானின்' நீச பங்க பலம்... 'புத பகவானின்' நட்சத்திர சார பலம்' பெற்ற, 'சந்திர பகவானையும்' (சந்திர பகவான் நின்ற நட்சத்திரம்... 'கேட்டை 1 ஆம் பாதம்), 'செவ்வாய் பகவானையும்' ('செவ்வாய் பகவான்' நின்ற நட்சத்திரம்... 'ஆயிலயம் 2 ஆம் பாதம்) தாமாக வலிமையடைய வைத்தது.

~ 15 வயதுவரையிலான 'புத பகவானின்' தசாவையும்... 22 வயதுவரையிலான 'கேது பகவானின்' தசாவையும் கடந்து... 42 வயதுக்கான 'சுக்கிர பகவானின்' தசா நடப்பில் இருந்தது. அதில், 27 வயதுக்கான 'சுக்கிர பகவானின்' தசாவில்... பாக்கியாதிபதியான 'சந்திர பகவானின்' புத்தி நடந்து கொண்டிருந்தது.

இந்த அமைவுகளைக் கவனத்தில் கொண்டு, அவருக்கு நாம் அளித்த பலன்களாவன...

* கை விலங்கிட்டு கைதி போல இருக்கும், இந்த ஜாதகரின் கை விலங்கு தற்போது (சுக்கிர பகவானினின் தசாவில், சந்திர பகவானின் புத்தி) விலகப் போகிறது.

* ஒரு நண்பரின் உதவியால், இவரின் கை விலங்கு உடைந்து, கடல் கடந்த வெளி நாட்டில் பணிபுரியும் வாய்ப்பு, தொடரப் போகும், 'சுக்கிர பகவானின்' தசாவின், 'செவ்வாய் பகவானின்' புத்திக் காலத்தில் நடக்கும் வாய்ப்பு கூடிவரும்... என்பதுதான்.

இரண்டு வருடங்கள் கடந்த பின், அந்தப் பெரியவர் நம்மைச் சந்திர்த்த போது, 

'என் மகன் தங்கியிருந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்கியிருந்த கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவரின் உதவியால்... கடவுச் சீட்டும், அதைத் தொடர்ந்து இருவருக்கும், அமெரிக்க நாட்டின்,  சிக்காக்கோ நகரில், எனது மகனுக்கு ஒரு 'கார்ப்பரேட்' நிறுவனத்திலும்.. அந்த செவிலியருக்கு ஒரு முன்னனி மருத்துவமனையில் செவிலியர் பணியும்... கிடத்துவிட்டது !'

'ஒரு நண்பர் என்று கூறினேர்களே ! அது ஒரு பெண் நண்பர் என்று ஏன் கூறவில்லை ?' என்ற அவரின் கேள்விக்கு நாம் அளித்த பதில், 'இதை நீங்கள் அன்று கேட்க ல்லையே !' என்பதாகத்தான் இருந்தது.

இந்த 'நீசபங்க யோகம்' செய்த அற்புதம்... இன்றும் என் நினைவில், நீங்காது உசலாடிக் கொண்டிருக்கிறாது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...