Thursday, June 30, 2022

Conversations With Sathya Sai Baba - Part 7. (தமிழாக்கம்... அடியேன்)


பக்தர் : எனது கால்களின் வீக்கத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

பகவான் : நமது உடலை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நதியைப் போன்றது. அதில் மிதக்கும் படகைப் போன்றதுதான் நமது உடல். அதன் ஒரு கரை உலக வாழ்க்கையாகவும்... மறு கரை இறைவனின் உறைவிடமாகவும்... இருக்கிறது. மறு கரையில் இருக்கும் இறைவனை அடையும் வரை, படகை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

படகை எவ்வளவு காலமானாலும் நதியில் வைத்திருக்கலாம், அதனால் படகுக்கு ஏதும் ஆபத்தில்லைதான், ஆனால், படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால், அது ஆபத்தாகிவிடும். அது போல இந்த உலக வாழ்க்கையை நாம் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால், இந்த உலக வாழ்க்கை நமது உள் வாழ்க்கையை முழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதற்குத் தாமரைதான் மிகச் சிறந்த உதாரணம், அது சேற்றில் ஊன்றி, நீரில் வளர்கிறது. சேறோ... நீரோ... இன்றி அதன் வாழ்வு இல்லைதான். ஆனால், அது அந்த இரண்டுடனும் கலந்து விடுவதில்லை. அது நீரில் மூகினாலும்... அதன் மீது ஒரு சொட்டு நீரும் தங்கி விடுவதில்லை. அதனால்தான், இறைவனைப் பற்றிய வருணனைகளில், தாமரை போன்ற கண்கள்... தாமரையை ஒத்தப் பாதங்கள்... என தாமரை ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஸாய்ராம்.



Wednesday, June 29, 2022

Bhagavan Sathya Sai Baba. Dhyana Vahini, Dh.10. (தமிழாக்கம் அடியேன்...)


 

கேள்வி : நமக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் ஆசை என்ற நோயை அழிக்க எது சிறந்த மருந்து...?

பகவான் :நீங்கள், 'மன நிறைவு' உடையவர்களாக வாழ வேண்டும்... பெறுவதானாலும், இழப்பதானாலும், இந்தத் மன நிறைவு என்ற நிலையில் இருந்து மாறாதிருப்பது முக்கியம். இந்த மன நிறைவு மகிழ்ச்சியை அளிப்பதோடு அதை, அதிகப் படுத்தியும் விடுகிறது. மன நிறைவைப் பெற்ற மனதுக்கு, வாழ்வு முழுவதும், கொண்ட்டாட்டங்கள் நிறைந்த விழாவாக அமைந்து விடுகிறது. ஆனால், ஆசைகளால் கவலையுற்று இருக்கும் மனமோ, ஓய்வில்லாமல், சதா காலமும், வீணே சுற்றித் திரிகிறது. 

ஆசைகள் உங்களைத் துன்புறுத்தும் போது, எதிலுமே கவனம் செலுத்த முடியாத நிலை, உருவாகிறது. ஆசைகள், உங்களுக்குள் இருக்கும் நெருப்பைப் போல, அது உங்களை சாம்பலாக்கி விடும். மன நிறைவுதான், இந்த நெருப்பை அணைக்கக் கூடிய தக்க மருந்து. 

ஒரு கடும் வெயில் நிறைந்த நாளில், அழைந்து, திரிந்து, களைத்த்துப் போன ஒருவருக்கு, ஒரு குளிர்ந்த நீரோடையின் குளியல் எவ்வாறு புத்துணர்ச்சியைத் தந்து விடுகிறதோ, அது போல, பேராசையால் உழன்று, களைத்துப் போன ஒருவருக்கு, இந்த மன நிறைவு என்ற குளியல் புத்துணர்ச்சியைத் தந்து விடுகிறது. 

ஒருவருக்கு வாழ்வின் நிலையான உண்மை எது...? என்று தேடும் பாதையில்தான், ஆசை இருக்க வேண்டும். நிலையற்ற உலக வாழ்வின் மீது ஆசை இருக்கக் கூடாது. இறைவனிடம் அனைத்தையும் சமர்ப்பித்து விடுவதே மன நிறைவான வாழ்வாகும். இதிலிருந்து விளைவதுதான் நிரந்தரமான அமைதியும்... ஆனந்தமும். அப்போதுதான், இறைவனின் தரிசனமும் கிடைக்கிறது.. 

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 227. 'ராகு கேது பகவான்களை அணுகும்போது...'

                    

'ராகு - கேது பகவான்களை' அணுகும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் :

- தான் இருக்கும் வீட்டை தன்வசம் ஆக்கிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆதலால், அவர்களுக்கு இடமளித்த 'கிரகத்தின்' பலம் மற்றும் பலவீனங்களை ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும்.

- அவை அமர்ந்திருக்கும் 'நட்சத்திர சாரத்தையும்', அந்த 'சாராதிபதியான கிரகத்தின்' பலம் மற்றும் பலவீனங்களையும், ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

- லக்ன 'திரிகோணாதிபதிகளின்' (லக்னம் (1)... பூர்வம் (5)... பாக்யம் (9)) தொடர்பு இருக்கிறதா...? என்பதையும், அவர்களின் பார்வைகளோ... சேர்க்கைகளோ... இருக்கிறதா...? என்பதையும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- அது போல, 'கேந்திர' (லக்னம் (1)... சுகம் (4)... களத்திரம் (7)... ஜீவனம் (10)), உப - ஜெய ஸ்தானங்கள் (2 மற்றும் 11 ஆம் பாவங்கள்), மற்றும் மறைவு ஸ்தானங்கள் (தைர்ய (3)... ருண, ரோக, சத்ரு (6)... ஆயுள் (08)... விரயம் (12)) ஆகியவற்றின் தொடர்புகளோ... சேர்க்கைகளோ... பார்வைகளோ... இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- இறுதியாக இவற்றின் 'தசா - புத்தி - அந்தரங்களை', (ராகு - கேது பகவான்களின்...) வாழ்க்கையின் எந்தப் படி நிலைகளில்... ஜாதகர் கடந்து செல்கிறார்...? என்ற விபரங்களையும் ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுகளுக்குப் பின் கணிக்கப்படும் கணிப்பு, பூரணமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஸாய்ராம்.


Tuesday, June 28, 2022

Talks with Ramana Mahirishi T. 355. (தமிழாக்கம் அடியேன்...)


கேள்வி : கல்வி அறிவு பெற்ற ஒரு ஞானி, உலகுக்கு மிகவும் பயனுள்ளவராக இருப்பார் அல்லவா ?

பகவான் :     கல்வி அறிவு பெற்ற பண்டிதர்களும், ஞானிகளிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்களே !

கல்லாமை ஒரு அறியாமைதான். அதைவிட கற்று அறிதலும் ஒரு அறியாமைதான். ஏனெனில், இரண்டும், 'எது உண்மையான இலக்கு' என்பதை அறியாமலேயே, இருக்கின்றன.  

ஆனால், ஞானியர்கள் அறியாமையில் இருப்பவர்களல்ல. அவர்கள், எது இலக்கு என்பதை அறிந்தவர்கள்..

- பகவான் ரமண மகிரிஷிகள்.

ஸாய்ராம்.


Monday, June 27, 2022

Maharishi's Gospel B 1. Ch VII (தமிழாக்கம்... அடியேன்)


'சில வேளைகளில், வாழ்வில் திருப்தி அடையாத நிலையில், தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே, இறைவனை நாடி, தனது ஆசைகளுக்கான பிரார்த்தனைகளை ைறைவன் முன் வைக்கின்றான்.

இறைவனிடம் சென்ற இவனது மனம், படிப்படியாக தூய்மையடைந்து, தனது ஆசைகளை விட, இறைவனது அருளைப் பெற்றுக் கொள்வதிலேயே திருப்தியடைவதை உணருகிறான்.

அந்த நிலையில்தான், இறைவனது அருள் கருணை மலர ஆரம்பிக்கிறது.

அந்த கருணை ஒரு 'சத்குருவின்' வடிவத்தை எடுத்து, அவனுக்கு முன் தோன்றி, அவனது மனதை தூய்மைப் படுத்தி,  உண்மையை உணர்த்துகிறது.

இப்போதுதான், பகதனின் மனம் வலிமை பெறுகிறது. அதற்குப் பின்தான் உள் திரும்ப ஆரம்பிக்கிறது. படிப்படியாக உள் திரும்பிய மனம், தியானத்தால் ஆடாத, அசையாத நிலையைப் பெறுகிறது.'

- பகவான் ரமண மகிரிஷி.

ஸாய்ராம்.


Wednesday, June 8, 2022

சித்த மஹா புருஷர்


 பாபா, ஒரு 'சித்த மஹா புருஷர்'. எப்போதும் தனக்குள்ளேயே மூழ்கியிருந்த 'பரம்பொருளான சொரூபம்'.

'தன்னையறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார்...' என்ற வேதாந்த வாக்கியத்திற்கு ஏற்ப, 'கால - தேச - வர்த்தமானங்களை கடந்த 'அந்தர் ஞானி' (உள்ளொளி பெற்றவர்).

தன்னை நாடி வரும் பக்தர்களின் 'ஆன்மீகத் தகுதிகளுக்கு' ஏற்ப, அவர்களுக்கு 'உபதேசம்' அளித்தார். சிலருக்கு நாம ஸ்மரணத்தையும் (ராம நாமம்)... சிலருக்கு இதிகாச - புராண பாராயணங்களையும் (ராம விஜயம், அத்யந்த ராமாயணம், பகவத் கீதை, பாகவதம்)... சிலருக்கு தப, யோக நுட்பங்களையும்... அளித்தவர், பெரும்பான்மையான பக்தர்களுக்கு, பக்தி என்ற யோகத்தையே பிரதானமான உபதேசமாக அளித்தருளினார்.

அன்றைய காலத்தில் 'சப் - கலெக்டர்' (மம்லத்தார்) அந்தஸ்த்தில் பணியாற்றிக் கொண்டிருந்த, பாபாவின் அத்யந்த பக்தரான 'நானா சாஹேப் சந்தோர்க்கார்', ஒருமுறை, 'பகவத் கீதையின்' சுலோகங்களை ஸ்மரித்துக் (சப்தமின்றி  பாராயணம் செய்தல்) கொண்டே, பாபாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தார்.

கீதை' பகவானால் அருளப்பட்ட 'ஞானப் பொக்கிஷம்' அந்தப் பொக்கிஷத்தை, தனது பக்தருக்கு அருளிட நினைத்த பாபா, 'நானா ! நீங்கள் ஸ்மரிப்பதை சற்று உரக்கச் சோல்லுங்கள் !' என்று கூறினார். நானாவோ, 'பாபா !... நான் கீதையின் சுலோகங்களை ஸ்மரித்துக் கொண்டிருக்கிறேன் !' என்றார். நானாவின் மனதில், பாபாவுக்கு 'சமஸ்கிருதம் பற்றிய ஞானம் இருப்பதில் சந்தேகம் இருந்தது. பாபா,'பரவாயில்லை... நீங்கள் அதை சப்தமாக பாராயணம் செய்யலாம்' என்ற போது, நானா... கீதையின், 4 ஆவது அதியாயத்தின் 34 வது சுலோகத்தை ;

'தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்பிரச்னேன ஸேவயா

உபதேஷ்யந்திதே ஜ்ஞானம் ஜ்ஞானினஸ் தத்வதர்ஸன'

என்று நானா, சப்தமாக பாராயணம் செய்தார். கேட்டுக் கொண்டிருந்த பாபா, 'நானா... இதற்கான அர்த்தத்தை பதம் பதமாக பிரித்துக் கூறு ' என்று பணித்தபோது, நானா, 'ஞானிகளை அணுகி, அவர்களின் பாதம் பணிந்து, அவர்களுக்குச் சேவை செய்து, கேள்விகளைக் கேட்டு, ஞானத்தை அறிந்துகொள், ஏனெனில் ஞானிகள்தான் தத்துவத்தை உணர்ந்தவர்கள்' என்று பதம் பிரித்துக் கூரினார்.

அவரின் விளக்கத்தைக் கேட்ட பாபா, மூன்று கேள்விகளை நானாவின் முன் வைத்தார், 

1. ஞானத்தின் சுரங்கமான பகவான், ஏன் அர்ஜுனனை ஞானிகளின் பாதத்திற்கு அனுப்ப வேண்டும் ? அவரே ஞானத்தை உபதேசித்திருக்கலாம் அல்லவா ?. 

எதிர்பாராத இந்தக் கேள்விக்கு, பதில் தோன்றாமல் நானா மௌனமாக இருந்தார். பின்னார் பாபா,

2. 'பரி' என்றால் என்ன ?' என்று கேட்டார், அதற்கு நானா'கேள்வி கேட்டல்' என்று பதிலளித்தார். மீண்டும் பாபா, 'பிரச்னா" என்றால் என்ன ?' என்று கேட்டார். சற்று தயங்கிய நானா, 'அதற்கும் அதே பொருள்தான் பாபா...' என்றார். உடனே, பாபா, 'ஒரே அர்த்தத்தை குறிக்கும் இரண்டு சொற்களை ஏன் வியாஸர் பயன் படுத்தியிருக்கிறார் ? என்று கேட்டார்.

இந்தக் கேள்விகள், நானாவை, திக்கு முக்காடச் செய்தன.

3. 'உபதேசிக்கப்பட வேண்டியது 'ஞானத்தையா ?' அல்லது 'அஞ்ஞானத்தையா ?' என்று பாபா, கேட்டபோது, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்ற நானா... பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்தார். நானாவின் சிந்தனையைத் தூண்டிவிட்ட பாபா, அவருக்குத் தனது 'ஞானப் பெட்டகத்தைத்' திறந்து ;

'நானா ! ஞானிகளை தனது ஆத்மா என்று பகவான் கூறியதை உறுதி செய்யுமாறே, அர்ஜுனனை ஞானிகளின் திருவடிகளுக்கு வழிகாட்டினார்.' 

மேலும் 'சேவை' என்பது எதிர்பார்ப்புடன் செய்வதல்ல... அன்பினால் செய்வது. அந்த சேவையை மனப்பூர்வமாகவும்... பணிந்தும்... செய்ய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். கேள்விகள் கேட்பது என்பது, நமது அறியாமையை நீக்கிக் கொள்வதற்காகத்தானே தவிர, நமது அகங்காரத்தை வளர்த்துக் கொள்ள அல்ல...என்பதால், மிகவும் பணிந்து, தனது சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்கான கேள்விகளைக் கேடக வேண்டும் என்று அறிவுருத்துகிறார்.

இறுதியாக 'ஞானம்' என்பது ஏதோ தேடி அலைய வேண்டிய வஸ்து இல்லை. அது ஏற்கனவே இருப்பது. அதை 'அஞ்ஞானம்' மூடி மறைந்த்திருக்கிறது. அந்த அஞ்ஞானத் திரையை விலக்கினால், ஞானம் பளிச்சிடுகிறது. எவ்வாறு அழுக்குகள் நீங்கிய வஸ்திரம் தூய்மையாகிறதோ... அது போல. ஆகவே, எதை நீக்க வேண்டும் என்பதைத்தான் உபதேசிக்க வேண்டியிருக்கிறது. அதை நீக்கி விட்டால் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விடலாம்'.

பாபாவின் இந்த 'ஞானோபதேசத்தை', பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த நானா, தெளிவடைந்து... தனது அறியாமை நீங்கி... ஞானம் பெற்றவராக... பாபாவின் திருவடிகளில் நன்றியுடன், 'ஆனந்தக் கண்ணீர்' சொரிய, சிரம் தாழ்த்தி வணங்கினார்.

ஸாய்ராம். 


Monday, June 6, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 226. 'ஜோதிடம் ஒரு மெய்ஞானக் கலை'


ஜோதிடக் கலையைப் பற்றி எனது குருநாதர், 'இது கடலைப் போன்றது... கடலின் கரையோரம், அப்பாவின் காலளவு நிற்கும் தண்ணீர்... மகன் நிற்கும் போது, கழுத்தளவு வந்துவிடும்...' என்பார்.

அவ்வளவு ஆழ்ந்த, செறிவு மிக்க கலையை, கற்றுக் கொள்வதும்... நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதும்... விவாதிப்பதும்... விவரிப்பதும்... கூட எளிதானதுதான்.

ஆனால், இந்தக் கலையை ஆதாரமாகக் கொண்டு, ஒருவரின் 'வாழ்க்கை இரகசியங்களை'... அவரின் 'கர்மா' வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளை'... அவற்றால் விளையும் இன்ப - துன்பங்களை... வெளிப்படுத்தும் போதுதான், தயக்கமும்... குழப்பமும்... சந்தேகங்களும்... வந்து கூடி விடுகின்றன. ஏனெனில், 'மறைந்திருந்து செயல்படும்' இந்தக் 'கர்ம வினைகளின்' செயல்பாடுகளை, 'அவன்' ஒருவனே அறிவானாதலால்.

ஆதலால்தான், 'அவனன்றி ஓரணுவும் அசையாது...' என்ற நியதியை உணர்ந்து, 'கோள்களை' அணுகும் போது, 'அவனருளாலே அவன் தாள் வணங்கி...' தன்னை 'ஒரு கருவியாக்கி', அந்த ஜீவனுக்கு ஒரு வழியைக் காட்டி அருள... அந்தப் 'பரம்பொருளின் திருவடிகளை' சரணடைகிறோம்.

'ஜோதிடக் கலையை', ஒரு முழுமையான 'விஞ்ஞானமாக' கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம், ஒரு ஜீவனின் 'வாழ்க்கை இரகசியங்களை' அறிந்து கொள்ள முற்படும் போது மட்டும், இந்தக் கலையை ஒரு 'மெய்ஞான' கலையாக கையாள்வது அவசியமாகிறது.

ஸாய்ராம்.


 

Wednesday, June 1, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 225. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 4.


இறைவன் படைப்பின் அதிசயமே... அவன் ஒவ்வொரு படைப்பிலும் நிகழ்த்தும் தனி கவனம்தான். ஒன்றுக்கு ஒன்று மாறுபாடாக அமையுமாறே... அவனது படைப்புகள் அனைத்தும் இருக்கும்.

மனிதம் மட்டும் விதி விலக்கா... என்ன ? ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின்  வாழ்க்கைப் பாதைகளைக் கவனித்தாலே, இந்த நுட்பமான மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம்.

நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஒத்த கருத்துடையவர்களாக இருப்பதில்லை. சூழல்களுக்கு ஏற்ப, மாறுபட்ட கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இருவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் கருத்தக்களோடு மட்டும் பயணிக்க ஆரம்பிக்கின்றோம்.

இதைத்தான், 'இராசிக் கட்டம்' வெளிப்படுத்துகிறது. இராசிக் கட்டத்தில், ஒவ்வொரு ராசிக்கும் (1 ஆம் பாவம்)  நேரெதிரில் இருக்கும் இராசி, (7 ஆம் பாவம்) ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் பாவமாக அமைகிறது. இதை, ஜோதிட ரீதியாக, 'களத்திரம் (கணவன் அல்லது மனைவி)... நட்பு... பங்குதாரர்கள்... என பல்வெறுபட்ட தொடர்புகளைக் குறிக்கும் பாவமாகக் கொள்கிறோம்.

இதன் அமைவை சற்று உற்று நோக்கினால்,

# 'மேஷ இராசிக்கு' (செவ்வாய் பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'துலா இராசி' (சுக்கிர பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'ரிஷப இராசிக்கு' (சுக்கிர பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'விருச்சிக இராசி' (செவ்வாய் பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'மிதுன இராசிக்கு' (புத பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'தனுசு இராசி' (குரு பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'கடக இராசிக்கு' (சந்திர பகவான்) 7 ஆம் பாவமாக அமையும் 'மகர இராசி' (சனி பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'சிம்ம இராசிக்கு' (சூரிய பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'கும்ப இராசி' (சனி பகவான்), நட்பாக இருப்பதில்லை.

இவ்வாறு ஒன்றுக்கொன்று... நட்பாக இல்லாத அமைவுகளுடன் கூடியவர்களுடன்தான், நாம் இணைந்து பயணிக்க வேண்டும்... என்பதைத்தான், இந்த இராசி அமைவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

இதன் மூலம், விட்டுக் கொடுத்தல்... ஏற்புடைய கருத்துகளில் ஒன்றிணைதல்... முரண்பட்ட கருத்துகளிலிருந்து விலகியிருத்தல்... என்பதைத்தான், 'பொருத்தங்கள்' என்ற முறையில் இணைத்து வைக்கிறது... ஜோதிடக் கலை.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...