சமர்ப்பணம்...
தன்னை ஈர்த்துத் தன்மயமாக்கிய
தவமுனி, தானாய் தனக்குள் எழுந்திட,
தன்னையே ஈந்த தவமுனிப் புதல்வன்.
இயமம் என்ற பக்தி ஒரு புறம்...
நியமம் என்ற நேர்த்தி மறுபுறம்...
அன்பு, பண்பு, கருணை, நல்வாக்கென
நலிந்தோர் நலனைப் பேணிய சீலன்.
நிலையற்ற வாழ்வின் நிலையை உணர்த்தி,
நித்ய வாழ்வின் நிறைவை உணர்த்திட,
நீற்றை நிறைவாய் அளித்திட்ட சேயோன் !
நல்லோரைக் கைவிடும் காலச் சல்லடை,
இன்று இவரையும் கை விட்டதுவோ - இல்லை
தன் புகழ் சேர்த்த தவமுனிவர் தம்
திருவடிக் கமலங்கள் சேர்த்ததுவோ !!
... என்றும் உங்கள் நினைவில்...
(நிலைபெற்ற நாளின் (20.12.2022) நினைவாக...)
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment