Friday, January 6, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 238. 'சனியைப் போல ராகு பகவானும்... செவ்வாயைப் போல கேது பகவானும்...'


 'சனி பகவானைப்' போல 'ராகு பகவான்' பலனளிப்பார் என்றும்... 'செவ்வாய் பகவானைப்' போல 'கேது பகவான்' பலனளிபார் என்றும்... வழங்கப்படுவதை அறிந்திருப்போம்.

ப்ரத்யக்ஷமாக காணப்படும் ஒற்றுமைகளாக, சனி பகவானும், ராகு பகவானும் தங்களது 'தசாக் காலங்களை' ஏறத்தாள (சனி பகவான் - 19 வருடங்கள், ராகு பகவான் - 18 வருடங்கள்)  ஒரே மாதிரியாகக் கடக்கிறார்கள். தங்களை அடையாளப்படுத்தும் வண்ணங்களாக 'கரிய நிறத்தை' (குறிப்பாக நீல வண்ணத்தையும், கரு நீல வண்ணத்தையும் கொண்டாலும்...)  பொதுவாகக் கொள்கிறார்கள்.

அது போல, செவ்வாய் பகவானும், கேது பகவானும் தங்களது 'தசாக் காலங்களை' ஒரே மாதிரியாகக் (7 வருடங்கள்) கடக்கிறார்கள், தங்களின் வண்ணங்களாக 'சிவப்பு வண்ணத்தை' (குறிப்பாக சிவப்பு வண்ணத்தையும், கலப்பு வண்ணங்களையும் கொண்டாலும்) பொதுவாகக் கொள்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டவைகள் பொதுவானவைகள்தானெ தவிர, அதன் உள்ளார்ந்த சூட்சுமம் என்னவெனில் ;

'ராகு பகவான்', ஜீவனின் இந்தப் பிறப்புக்கான 'கர்மாவை' (பிராரர்த்தக் கர்மா) குறிப்பிடுகிறார், அதன் அனுபவங்களை காலப் பரிமாணமாகக் கொள்கிறார் 'சனி பகவான்'. அது போல, இந்தக் கர்மாவிலிருந்து விடுபட்டு, தொடர்ந்து கொண்டிருக்கும் பிறப்புச் சூழலைக் கட்டவிழ்க்கிறார் 'கேது பகவான்'. அதன்கான ஆற்றலைத் தந்திருள்கிறார் 'செவ்வாய் பகவான்'.

உதாரணமாக, 'துலா லக்னத்தில்' பிறக்கும் ஒரு ஜாதகருக்கு, 'சனி பகவான்' முதல் யோகக்காரராகிறார். ஜாதகரின் ஆரம்பகால தசைகள் 'சுக்கிர, சூரியன், சந்திரன் செவ்வாய்' எனக் கடக்கும் பட்சத்தில், சரியான காலக் கட்டத்தில் அவரால் 'சனி பகவானின்' யோக நிலை தசாவை அனுபவிக்க முடியாது போகும். அவரது ஜாதகத்தில் 'ராகு பகவான்' சுபமான ஆதிபத்தியம் (திரிகோணம், கேந்திரம் அல்லது பணபரம்) பெற்று... திரிகோணாதிபதிகளான 'சனி - சுக்கிரன் - புத பகவான்களின்' தொடர்பை (சேர்க்கை, பார்வை, சாரம்) பெற்று, அவரது 'தசா நடக்கும்' பக்ஷத்தில், 'சனி பகவான்' அளிக்கக் கூடிய அனைத்து சுப பலன்களையும், 'ராகு பகவான்' அளித்து விடுவார்.

அது போலவே, 'கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில்' பிறப்பவர்களுக்கு 'செவ்வாய் பகவான்' முதல் தர யோகக்காரராகிறார். அவரது 'தசாவை'ஜாதகர்கள் தக்க சமயத்தில் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அந்தக் காலக் கட்டத்தில் 'கேது பகவானின்' தசா நடக்கும் பக்ஷத்தில், மேலே குறிப்பிட்டவாறு 'கேது பகவான்' அமையும் பக்ஷத்தில், 'செவ்வாய் பகவான்' அளிக்கக் கூடிய அனைத்து சுப பலன்களையும் 'கேது பகவான்' அளித்தருள்வார்.

என்ணற்ற ஜாதகங்களில், இந்த அமைவு அளித்த அனுபவங்களைக் கண்டதற்குப் பின்னால்தான், இதை பதிவுடுகிறோம்.

ஸாய்ராம்.





No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...