Tuesday, November 22, 2022

ஒவ்வொரு நொடியிலும்...


 

ஒவ்வொரு நொடியிலும் நான் துடிக்கின்றேன் - என் 

வினையென்ன செய்திடுமோ தவிக்கின்றேன்.


வருமுன்னர் காப்பதற்கு வழியுமில்லை - வினை

வந்தபின் எதிர்கொள்ளத் துணிவுமில்லை.


விதைத்ததை அறுக்கின்றேன் விளைச்சலில்லை - முன்

விதைத்தது பதரானால் என்ன செய்வேன்.


தனிவழி செல்கின்றேன் துணையுமில்லை - அந்த 

வழிசென்று சேருமிடம் தெரியவில்லை.


மடியின்றித் தவித்திட்ட மழலையின் குரல் கேட்டு

மடிநிறை பாலோடு பரிவுடன் பசுவைப் போல்

இடர்மிகு பயணத்தின் இடை வந்தாய் - என்

துயருக்குத் தொள் கொடுக்கும் துணையானாய்.


துயர் இனி எனக்கில்லை பயமெதற்கு - உன்

பத மலர் தொடர்கின்றேன் ஜெயமெனக்கு !


ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...