காசியிலிருந்து வந்திருந்த ஒரு வேதப் பண்டிதர், பெரியவரை தரிசிப்பதற்காக தேங்காய், பழங்களுடன் வரிசையில் காத்திருந்தார். அவருக்கு முன்னால், சித்து லீலைகளில் கைதேர்ந்த ஒரு சித்தர் நின்றிருந்தார். அவரிடம், பெரியவருக்கு சமர்ப்பிக்க அவர் ஏதும் கொண்டு வரவில்லையா... என்று கேட்ட போது, பொறுத்திருந்து பாருங்கள்... என்ற பதில் வந்தது.
பெரியவரை தரிசனம் செய்ய அவரின் வாய்ப்பு வந்த போது, அந்த சித்தர் தனது கைகளை காற்றில் அசைக்க ஒரு கூடை நிறையப் பழங்கள் வந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் இதைப் பார்த்தார்கள். புன்னகைத்தபடி இருந்த பெரியவர், 'இதைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு எவ்வளவு காலம் பிடித்தது?' என்று கேடக, அவர், 'பல காலம் ஆயிற்று...' என்று கூறியபடியே, மீண்டும் தனது கைகளை காற்றில் அசைக்க, அழகிய பூக்கள் வந்தன. மீண்டும் மகா பெரியவர் புன்னகைக்த்தபடியே, அந்த பழங்களையும்... பூக்களையும்... தனது விழிகளால் நோக்கினார்.
அனைவரின் ஆச்சரியங்கு ஏற்ப, அந்தபழங்கள், பூக்கள் என அனைத்தும், மண்துகள்களாக மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த அந்த சித்தர், தாம் எவ்வளவுவு முறை முயன்றும், அந்த மண் துகள்களிலிருந்து அவர் உருவாக்கிய பழங்களையும், பூக்களையும் மீண்டும் மீட்க முடியாது தோற்றுப் போனார். இப்போது பெரியவர் சொன்னார், 'மக்களுக்கு மிகவும் உபயோகும்படியான ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்!' என்று.
( நன்றி : Prof. S. Kalyanaraman, Neurosurgeon, Chennai. Jagadguru Sri Maha Periyava - Kanji Paramacharya F/B லிருந்து தொகுக்கப்பட்டது...)
தமிழாக்கம்... அடியேன்

No comments:
Post a Comment