'மகாகவி' யென போற்றப்படும், 'பாரதியார்', உள்ளொளி பெற்ற 'ஞானி' என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நமக்கு உள்ளிருந்து அருள் செய்யும், அந்தப் 'பரம்பொருளை', அணுவணுவாய் ரசித்த ஒருவரால்தான், இவ்வாறு பாட முடியும்...
'சத்து-சித்து-ஆனந்தம்' என்று விளங்கிக் கொண்டிருக்கிற இந்த ஜீவாத்மா, 'சத்து' என்ற 'சத்தியப் பொருளாகவும்... 'ஆனந்தம்' என்ற எல்லையில்லா ஆனந்தத்தில் திழைப்பதாக, இருந்தாலும்... 'சித்து' என்ற ஒரு 'பெருவெளி' இந்த ஜீவாத்மாவை இரண்டு நிலைகளில் நிலைக்க வைக்கிறது.
'பக்தி' என்பதன் மூலமாக 'பேரானந்தம்' அனுபவிக்கும் 'இறையுணர்வுடனும்'... 'ஐம்புலன்களின்' வழியாக 'பிரமிப்புடன்' திகழும் இந்த 'உலக வாழ்வுடனும்'... இணைக்கும் ஆற்றலை, சித்தம்' பெற்றிருக்கிறது.
ஆதலால்தான், பாரதி பாடுகிறார், இறைவனை நோக்கி, 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்... இறைவா!' என்று...
'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சிய
மாகப் பலப்பல நல் அழகுகள் சமைத்தாய்
ஓ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா!
முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய்
பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா!
ஓ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா!
ஸாய்ராம்.

No comments:
Post a Comment