Saturday, September 10, 2022

சிவசக்தி அம்மையார். திருவண்ணாமலை.


 

ஆழ்கடல் மிக அமைதியாக இருந்தாலும்... அதன் மேற்பரப்பு கொந்தளிக்கும் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆழ்கடல் என்ற அமைதியில் முழ்க வேண்டுமெனில், இந்தக் கொந்தளிக்கும் அலைகளைக் கடந்துதான் தீர வேண்டும். அந்த அலைகளோ நாம்மைப் புறந்தள்ளவே பார்க்கின்றன. அதையும் மீறி முழ்குபவனுக்கே, அந்த ஆழ்கடலின் அமைதி கிட்டுகிறது. அது போலத்தான், நமக்குள் ஆழ்ந்து... அமைதியாக... அருள் செய்கிற அந்த 'பரமானந்தப் பேருணர்வை', நமது மனதில் தோன்றும் 'பூர்வ வாசனைகள்' என்ற 'கர்ம வினைகளின்' அலைகள்... சென்றடைந்து விடாமல் தடுக்கின்றன. இந்த 'பூர்வ வாசனைகளைத்தான்' அம்மா, 'எவ்வளவு கொடியது ?' என்று சுட்டிக் காட்டுகிறார். இந்தக் கருணை மிகு ';சத்குரு'... நமது நிலையை உணர்ந்து... அதைக் கடக்கவும் வைத்து... அந்தப் 'பேரானந்த உணர்வுடன்' கலந்துவிடவும்... செய்கிறார்.

இதுவே குருவருள் செய்யும் அற்புதம்! 

சரணம் தாயே... சகலமும் நீயே...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...