ஐரோப்பியர் : 'சுவாமி ! உங்கள் மதத்தின் பெரும்பான்மையான கோட்பாடுகளை, நான் புரிந்து கொண்டு, அவற்றை மதிக்கிறேன். ஆனால், உங்களது 'கர்மா' வைப் பற்றிய கோட்பாட்டை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது, ஒரே 'ஜீவாத்மா' மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது... அதன் 'பாப - புண்ணியங்களை' அடுத்தடுத்த பிறவிகளுக்குக் கொண்டு செல்வது... என்பது போன்றவை. தயவு செய்து, இதைப் பற்றி எனக்கு தெளிவு ஏற்படுத்த முடியுமா ?'
'ஏனெனில், பெரும்பாலான மதங்கள், இந்தப் பிறவியில் என்ன செய்கிறோமோ... அதற்கேற்ற பலன்களை, இந்தப் பிறவியிலேயே அனுபவித்து விடுகிறோம்... என்றுதான் சொல்கின்றன. நாம் நேர்மையாக இருப்பின், இறைவன் மகிழ்ந்து, நமக்கு எல்லா நலன்களையும் அருள்வான் என்றும்... நாம் நேர்மையாக இல்லாத பட்சத்தில், அவரால் தண்டிக்கப்படுகிறோம் என்றும்தான் கூறுகின்றன.
(அவரின் கேள்விக்கு பதிலளிக்குமுன்... பெரியவர், அவரிடம் தனக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர் சம்மதத்தைத் தெரிவித்ததும், பெரியவர்...)
பெரியவர் : 'காஞ்சீபுரத்திலும், அதைச் சுற்றியுள்ள ஒரு பத்து 'குழந்தைப் பேறு மருத்துவமனைகளுக்குச்' சென்று, கடந்த இரண்டு நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின், பாலினம்... உடல் நலம்... பெற்றோர்களின் பெயர்கள்... அவர்களின் நிலை... கல்வித் தகுதிகள், இவற்றோடு... அந்தக் குழந்தைகள் பிறந்த?நேரம்... இவற்றை சேகரித்துக் கொண்டு வாருங்கள்'
(ஒரே நாளில், அந்த ஐரோப்பியர், அந்தப் புள்ளி விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வந்து, பெரியவரிடம் சமர்ப்பித்தார். பத்து 'குழந்தைப் பேறு மருத்துவமனைகளில்', அவர் சேகரித்த பதினைந்து குழந்தைகளில், எட்டு, பெண் குழந்தைகளாகவும், ஏழு, ஆண் குழந்தைகளாகவும் இருந்தன. அவற்றில், மூன்று குழந்தைகள், ஊட்டச் சத்து குறைபாடுடனும்... இரண்டு முதலில் பிறந்த வசதியான வீட்டுக் குழந்தகளாக, தனியார் மருத்துவமனைகளிலும்... நான்கு குழந்தைகள், ஏற்கனவே குழந்தைகள் இருக்கும் வறியவர்களின் வீட்டிலும் பிறந்திருந்தன. புள்ளி விபரங்களைப் பார்த்த பெரியவர்...)
பெரியவர் : 'இரண்டே நாட்களான இந்தக் குழந்தைகள், நேர்மை ஆனவர்களாகவோ அல்லது நேர்மை அற்றவர்களாகவோ... இருக்க வாய்ப்புகள் உண்டா ? இந்தக் குழந்தைகளால், அவர்களது தாயைக் கூட அடையாளம் கண்டறிய முடியாது. ஆதலால், அவர்கள் பாபத்தையோ... புண்ணியத்தையோ... சம்பாரித்திருக்கவும் முடியாது.'
'உங்களுடைய கோட்பாட்டின் படி, இந்த அனைத்துக் குழந்தைகளும், ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தானே வாழ வேண்டும்? ஆனால், அவ்வாறு இல்லாமல், சில குழந்தைகள் நோய்வாய் பட்டிருக்கின்றன... சில குழந்தைகள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கின்றன... சில குழந்தைகள் வசதியானவர்களின் வீட்டில் பிறந்திருக்கின்றன... சில குழந்தைகள் வறியவர்களின் வீடுகளில் பிறந்திருக்கின்றன.'
'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த குழந்தைகள் அனைத்தும் ஒரே நாளில்... புவியின் ஒரே தீர்க்க மற்றும் அட்சய ரேககளில்... ஒரே இடத்திலும்தான்... பிறந்திருக்கின்றன. அவர்களின் 'ஜோதிடச் சித்திரங்கள்' பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆதலால், அவர்களின் வாழ்க்கை வித்தியாசங்களுக்கு 'ஜாதகங்களை' குறை கூற முடியாது அல்லவா!'
(இந்த விளக்கங்களைக் கேட்ட ஐரொப்பியர், வாயடைத்துப் போய் இருந்தார்... அவரது மௌனத்தைக் கலைத்த பெரியவர்...)
பெரியவர் : 'இங்குதான், 'முந்தைய பிறவிகள்' பற்றிய 'கோட்பாடு' வருகிறது. அனைத்துக் குழந்தைகளும், அவரவர்களின் 'கர்ம வினைகளை' சுமந்த படியே, இந்தப் பிறவிகளை எடுத்திருக்கின்றன. அவர்களின் முந்தய பிறவிகளின் ''பாப - புண்ணியங்களுக்கு' ஏற்பவே, இந்தப் பிறவிகளும் அமைந்திருக்கின்றன்.'
(மகா பெரியவர் வழியாக 'சனாதன தர்மம்'... அந்த ஐரோப்பியரைப் பார்த்து புன்னகைத்தது...)
நன்றி : (Jagadguru Sri Maha Periyava - Kanji Paramacharya / Fb. யிலிருந்து தொகுக்கப்பட்டது...)
தமிழாக்கம்... அடியேன்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment