Saturday, September 3, 2022

ஐரோப்பியரின் தேடலுக்கு வழிகாட்டிய; நடமாடும் தெய்வம்'


    

 'பால் பிராண்டன்', என்ற ஐரோப்பியரின் ஆன்மீகத் தேடல், அவரை பாரதத்திற்கு இழுத்துவந்தது. அவரின் தேடல், 'உயர் நிலையை அடைந்திருத்த ஒரு உண்மையான' யோகியை பேட்டி காணுவதில்தான் இருந்தது.

வட இந்தியாவில் ஆரம்பித்தத் தேடல், காசியில் இருக்கும் ஒரு யோகி ஒருவரால், அவரை தென் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. பால் பிராண்டனிடம் இருந்த எண்ணற்ற அறிமுகக் கடிதங்களில் ஒன்று, அவரை 'காஞ்சி மகா முனிவரின்'; பக்தரான 'வேங்கடரமணி' யிடம் இணைத்து வைத்தது.

வேங்கடரமணியின் துணையுடன், அவர் செங்கல்பட்டில் அப்போது முகாமிட்டிருந்த 'மகா பெரியவரை' பேட்டி காணச் சென்றார். மகா பெரியவர் தங்கியிருந்த இடத்தில், எண்ணற்ற பகதர்கள் நாட்கணக்காக அவரது தரிசனத்திற்குக் காத்திருப்பதையும்,,, இருநூறுக்கும் மேற்பட்ட பத்திரிக்கயாளர்கள் அவரது பேட்டிக்காகக் காத்திருப்பதையும்... கண்டு ஆச்சிரியப்பட்டும் போனார். பெரியவரின் காரியதரிசி, 'பெரியவர், தற்போது யாருக்கும் பேட்டி கொடுக்கும் நிலையில் இல்லை எனவும், அதுவும் குறிப்பாக ஐரோப்பியர்களுக்கு அவர் பேட்டி அளித்ததில்லை, என்றும் கூறி தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்'.

ஆனாலும், வேங்கடரமணியில் முயற்சியினால், பிராண்டனுக்கு பெரியவரை தரிசித்து, பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாகத் தான் காணும், தென்னாட்டு 'நடமாடும் தெய்வத்தை', மிகப் பணிவுடன் வணங்கி, தான் வாங்கியிருந்த மலர்கள் மற்றும் பழங்களை அவர்முன் சமர்ப்பித்து நின்றார் பிராண்டன்.

காஞ்சி முனிவரைப் பார்த்து பரவசம் அடைந்த பிராண்டன், அவரது நேரத்தை தமக்காக அளித்ததற்கு நன்றி கூறினார். வேங்கடரமணியின் மூலம் அவரிடம் பேசிய பெரியவர், தமக்கு அவர் பேசும் மொழி புரிகிறது என்றும், தாம் அந்த மொழியில் பேசுவது ஒருவேளை அவருக்கு புரியாமல் போகும் என்ற அச்சத்தினால்தான் இவ்வாறு பேச வேண்டியிருக்கிறது... என்று கூறியதை மென்மையாக உள் வாங்கிக் கொண்டார்... பிராண்டன்.

பிராண்டனது கேள்விகள் உலக அமைதியின்மையில் ஆரம்பித்து, அது அமைதியடைய வேண்டியவற்கான வழிகளின் வழியே பயணித்து, இறுதியாகத் தனது தேடலுக்கான நோக்கத்தை பெரியவரிடம் முன் வைத்தார். 

பிராண்டன் : 'நான் உயர் நிலையில் இருக்கும் ஒரு உண்மையான யோகி ஒருவரைத்தான் தேடி வந்திருக்கிறேன். அவரிடமிருந்து அந்த யோகத்தைப் பற்றிய நிரூபணங்களை அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்'

பெரியவர் : 'உண்மையான யோகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களது உண்மைத் தன்மையை வலிமைப்படுத்த. அந்த உள்ளொளியே, உங்களை அதை நோக்கி வழி நடத்தும்'.

பிராண்டன் : 'உங்களது முன்னோர்களான ரிஷிகள், அவரவர்களுக்குள் இருக்கும் கடவுளைத் தவிர வெளியே ஒரு கடவுள் தனியாக இருப்பதில்லை என்று கூறினாலும், நான் என் உள்ளுணர்வின் படியே அந்தத் தேடுதலைத் தொடர்கிறேன்'

பெரியவர் : 'கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்த பிரபஞ்சம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கிற கடவுளை, ஒருவருக்குள் மட்டும் அடக்கி வைத்து விட முடியுமா என்ன ?'

பிராண்டன் : 'அதற்காக நான் எந்த நடைமுறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ?'

பெரியவர் : 'உங்களது பயணத்தைத் தொடருங்கள். அதை பூர்த்தி செயத பின், நீங்கள் சந்தித்த யோகியர்களை நினைவு கூறுங்கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு யோகியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் திரும்பிச் செல்லுங்கள்  அவர் நிச்சயமாக உங்களுக்கு வழிகாட்டுவார்.'

பிராண்டன் : 'அவர்களில் எவரொருவரும் எனது எண்ணங்களுக்குள் வராமல் போனால், அடுத்த நான் என்ன செய்ய வேண்டும் ?'

பெரியவர் : 'அப்படியானால், இறைவன் உங்களுக்கு வழி காட்டும் வரை நீங்கள் தனியாகத்தான் பயணிக்க வேண்டும். தியானத்தை தொடர்ந்து பழகி வாருங்கள். நீங்கள் தியானிக்கும் அந்த 'மேலான உள்ளுணர்வு' உங்களுக்கு வழிகாட்டும். உலகம் உங்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கும் காலை வேளைகளிலும்... மாலை வேளைகளிலும்... இந்தத் தியானத்தைத் தொடர்ந்து வாருங்கள்.

பிராண்டன்  'ஒருவேளை இந்த முயற்சியில் நான் தோற்றுவிட்டால், உங்களுடைய வழிகாட்டுதல்களுக்கு நான் வரலாமா ?'

பெரியவர் : 'உங்களுக்காக காலத்தை ஒதுக்கக் கூடிய ஒருவரிடம்தான் நீஙகள் செல்ல வேண்டும். நான் ஒரு மடத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். பொதுமக்களுக்கு சேவையாற்றும் இந்த மடத்தின் கடமைகள் என்னை மூன்று மணி நேரங்கள் மட்டுமே உறங்க வைக்கிறது. என்னால் சிஷ்யர்கள வைத்துக் கொள்வது முடியாத காரியமாகிறது.'

பிராண்டன் : 'ஆனால், உண்மையான யோகிகளைக் காண்பது அரிது என்று சொல்லப்படுகிறதே. அதுவும் ஒரு ஐரோப்பியானால் அது ஆகாது என்றும் வலியுருத்தப்படுகிறதே.'

பெரியவர் : 'உண்மை இருக்கிறது. அதைக் கண்டறிய வேண்டியது அவசியம்.'

பிராண்டன் : 'நீங்கள் அறிந்த அவ்வாறான ஒரு யோகியை அடைய, எனக்கு வழி காட்டமுடியுமா ? அவரிடமிருந்து நான் அந்த உயர் நிலை யோகத்தை அறிந்து கொள்வேனே.'

பெரியவர் : 'அவ்வாறான இரு யோகிகளை அறிவேன். ஒருவர் பனாரஸில் இருக்கிறார். அவரிடம் உங்களை அனுப்ப முடியும், ஆனால் அவரைக் காண்பது அரிது. அதுவும் ஒரு ஐரோப்பியருக்கு அவர் பேட்டி அளிப்பது என்பது மிகவும் சிரமம்'.

பிரான்டன் : 'அவ்வாறானால், இன்னொருவர்....?

பெரியவர் : 'அவர் உள்ளே, தெற்குப் பகுதியில் இருக்கிறார். அவரிடம் நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். அவர் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் யோகி என்பதை அறிவேன்.அவரை நான் உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.'

பிராண்டன் : 'அவர் யார் ?'

பெரியவர் : 'அவரை 'மஹிரிஷி' என அழைப்பார்கள். அவரை நான் பேட்டி கண்டதில்லை. ஆனால், அவர் மிக சிறந்த யோகி என்பதை அறிவேன். அவரை அடைவதற்கான வழிமுறையை உங்களுக்குக் காட்டட்டுமா ?'

(... என்று பெரியவார் கூறியதுமே சட்டென்று, பிராண்டனின் மனக் கண் முன்னால், ஒரு மஞ்சள் ஆடை அணிந்த ஒருவர் தன்னை வலியுருத்தி, அவரது குருவிடம் அழைத்துச் செல்வதையும்... அவர், 'புனிதத்தை நோக்கி அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்கம்தான் இந்த மலை' என்று முணு முணுப்பதும்... கேட்டது. ஆச்சரியத்தில் மூழ்கிப் போன பிராண்டன், )

பிராண்டன் : 'மிக மிக நன்றி, ஆனால், நீங்கள் குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து வந்திருக்கிற ஒரு வழிகாட்டி என்னுடன் இருக்கிறார்.'

பெரியவர் : அப்படியானால் நீங்கள் அங்கு போகலாம்.'

பிராண்டன்  (தயங்கியபடியே...) 'நான், நாளை இங்கிருந்து கிளம்புவதற்கான ஆயுத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டனவே...'

பெரியவர் : 'அப்படியானால், நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்றிருக்கிறேன்'

பிராண்டன் : 'தாராளமாக...'

பெரியவர் : 'மகிரிஷியை சந்திக்காமல், இங்கிருந்து செல்வதில்லை, என்று நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும்.'

பிராண்டன் : (எனக்காக இவ்வளவு பிரயத்தனம் மேற்கொள்ளும் அவருக்கு எனது சத்தியத்தை காணிக்கையாக்கினேன்...)

பெரியவர் : (புன்னைகைத்தபடியே...) 'கவலைப்படாதீர்கள்... நீங்கள் தேடி வந்தை அடைவீர்கள்.'

பிராண்டன் : 'நான் உங்களுடைய புனிதமான நேரத்தை மிக அதிகமாக எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னியுங்கள்.' 

(என்னுடன் வெளியறை வரை வந்த சுவாமிகள், என்னை வழியனுப்பி வைத்தபின், சற்று தூரத்திலிருந்து என்னை அழைத்து....)

பெரியவர் : 'என்னை எப்போதும் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நானும் அவ்வாறே உங்களை எப்போதும் என் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.'

(மிகச் சுருக்கமான, ஆச்சரியமான அந்த வார்த்தைகளைக் கேட்டபடியே, நான் அந்த புனிதமானவரை விட்டு நீங்கினேன்...)

அன்றிரவு எனது அறைக்குத் திரும்பியதும், எனது வழிகாட்டி இரவில் வந்து என்னை எழுப்பினார், அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, 'உனது குருவின் பெயர் மகிரிஷியா ?' என்பதுதான். ஆச்சரியத்துடன் அவர், 'எப்படி அது உங்களுக்குத் தெரியும் ?' என்று கேட்க, நானோ, 'முதல் வேளையாக நாமிருவரும் உனது குருவைப் பார்க்க நாளைக் காலையே கிளம்புகிறோம். ஆனால், ஓரிரண்டு நாட்கள்தான் என்னால் அதற்காக ஒதுக்க முடியும்' என்று கூறி விட்டுப் படுக்கைக்குப் போனேன்..

நான் படுத்திருக்கும் போது, எனது நரம்புகள் முறுக்கேறுவதையும்... என்னைச் சுற்றி ஒரு மின்சாரம் பாய்ந்திருப்பது போலவும்... உணர்ந்தேன். சட்டென்று எனது தலையணைக்குள்ளிருக்கும் கடிகாரத்தை எடுத்து அதில் ஒளிரும் நேரத்தைப் பார்த்தேன். அது விடியற்காலை 3 மணி 15 நிமிடங்களைக் காட்டியது. எனது படுக்கைக்கு எதிரே, ஏதொ ஒன்று ஒளிர்வதைப் பார்த்தேன். நான் உடனே எழுந்து அமர்ந்து, அதை உற்று நோக்கினேன். எனக்கு முன்னால் 'மகா பெரியவர்' நின்று கொண்டிருந்தார். சந்த்தேகத்திற்கு இடமில்லாமல் அவர் இருப்பதை உணர்ந்தேன். சூழ்ந்திருக்கும் இருளிலிருந்து தனிப்பட்டு அவர் இருப்பதைப் பார்த்தேன். இவரை நான் செங்கல்ப்பட்டில் அல்லவா விட்டு விட்டு வந்தேன். இவர் எப்படி இங்கு வந்தார்...என வியந்த படியே, எனது கண்களைக் கசக்கி விட்டு, மீண்டும் விழித்துப் பார்த்தேன். அதே இடத்தில் அவர் புன்னகைத்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் உதடுகள் முணு முணுத்தன, 'அமைதியாக இரு...நீ தேடி வந்ததை அடைவாய் !'.

மெதுவாக... இந்த ஆச்சரியம் மிகுந்த காட்சி, கண்களை விட்டு நீங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதமான லீலையையும்... அவர் இன்று காலை அளித்த பேட்டியையும்... நினைவு கூர்ந்தபடியே விழித்திருந்தேன்...

பால் பிராண்டன்.

(தமிழாக்கம்... அடியேன்.. )

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...