'நான் பிறந்திருக்கிறேன்... என்ற நினைவு இருக்கும் வரை மரண பயத்திலிருந்து விடுதலை பெற முடியாது. நான் என்ற உடல் பிறந்திருக்கிறதா ? அல்லது 'தான்' என்ற உணர்வு பிறந்திருக்கிறதா ? என்று, அவன் ஆய்ந்தறியும் போது, தான் என்ற உணர்வு எப்போதும், நிலைபெற்று இருப்பதை கண்டறிவான்.'
'மேலும், உடல்தான் பிறந்திருக்கிறது என்பதையும், அது எண்ணங்களை உற்பத்தி செய்வதையும், அந்த எண்ணங்களே இவ்வாறான ஜனன - மரண விளையாட்டுகளுக்கு ஆதாரமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறான். தொடர்ந்து, அந்த எண்ணங்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறது... என்று ஆய்ந்து கொண்டே போனால், அது எப்போதும், நிலைத்திருக்கிற 'தான்' என்ற உள் உணர்வில் கொண்டு போய் சேர்க்கும். அந்த உணர்வில் நிலைத்து இருக்கும் போது, பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய பயம் நீங்கி விடுவதை உணர்கிறான்.'
ஓம் பகவதே ரமணாய நமஹ.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment