பகவான் : இறைவனை நோக்கிய புனித பயணம்தான் வாழ்க்கை. அந்த புனித இடம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால், அதன் துவக்கப் பாதை உன் எதிரில்தான் இருக்கிறது. அதில் நீ பயணிக்க ஆரம்பிக்காமல் எவ்வாறு அதன் இலக்கை சென்று அடைய முடியும் ? தைர்யமாகவும், நம்பிக்கையோடும், நிதானத்தோடும், மகிழ்வோடும், உன் பயணத்தை துவக்கினால் வெற்றி நிச்சயம்.
நமது உள்ளிருக்கும் ஜீவாத்மாவுக்கு, மனமும் - அறிவும், வண்டியில் பூட்டப்பட்டுள்ள இரண்டு எருதுகள் போன்றவைகள். இந்த எருதுகளுக்கு உண்மை... அன்பு... அமைதி என்ற பாதை மிகவும் புதிதானது. அதனால்தான் அதன் வழக்கமான பொய்மை... அநீதி... கவலை... வெறுப்பு என்ற, அதன் வழக்கமான பாதைக்கே, வண்டியை இழுத்துச் செல்கிறது. நாம்தான் அதற்கு சரியான பயிற்சியைக் கொடுத்து, நல்ல பாதையில் பயணிக்க வைக்க வேண்டும். அந்த பாதையில் செல்லும் போதுதான் தங்களுக்கும்... வண்டிக்கும்... அதை செலுத்தும் ஜீவாத்மாவுக்கும்... அழிவு ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
உங்களது குழந்தை உங்களொடு விளையாடும் போது, அது உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அதே குழந்தை, உங்களது வேலைகளுக்கு இடையூராக வரும் போது, அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கிறாது. எங்கு இன்பம் இருக்கிறதோ, அங்கேதான் துயரமும் இருக்கிறது.
இந்த உலக வாழ்வில் எதுவுமே உங்களுக்கு இடைவிடாத மகிழ்ச்சியை கொடுத்து விட முடியாது. அவ்வாறு ஏதேனும் இருப்பினும் முடிவில் அது உங்களுக்குத் துயரத்தைத்தான் அளிக்கும். எப்போதெல்லாம் மனதைக் கட்டுப் படுத்தவும், பயிற்றுவிக்கவும் செய்கிறோமோ... அப்போதெல்லாம் மனம் அதற்கு எதிராக போராட ஆரம்பிக்கிறது. இதை அறிந்து கொள்வதுதான் உண்மையான அறிவாக இருக்கமுடியும்..
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment