பகவான் : நினைத்துப் பாருங்கள்...! எந்த அளவு கவனத்துடன் அர்ஜுனன்,கீதையைக் கேட்டிருக்க வேண்டும் ? அர்ஜுனனது கவனம், பிருந்தாவனத்து கோபியர்கள், கண்ணனின் குழலிசைக்கு இசைந்திருப்பதைப் போன்றதாகும். தனக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் எதிரிகள்... அவர்களின் மீது இருந்த வெறுப்பு... போரின் மீது இருந்த ஆர்வம்... என்பவை அனைத்தையும் மறந்து, பகவானின் உபதேசத்திலேயே மூழ்கியிருந்தான் அர்ஜுனன்.
நாமும் அதே போன்ற ஒருமுகப்பட்ட கவனத்தை வளர்த்துக் கொள்ளும் போது, நமது போராட்டமான வாழ்க்கைக்கு மத்தியிலும், நம்மால் கீதையைக் கவனித்துக் கேட்க முடியும். கீதை, அர்ஜுனனின் அறியாமைய நீக்கி அவனது மயக்கத்தைத் தெளிவித்தது. ஆனால், கீதையைக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சயனுக்கோ... திருதிருஷ்டரனுக்கோ... அவர்களது அறியாமையினால், கீதையிலிருந்து பயன்களைப் பெறமுடியாது போனது.
எண்ணற்றவர்கள் கீதையைப் படிக்கிறார்கள். வெகு சிலரே அதன் பயனை அடைகிறார்கள். அர்ஜுனனுக்கு இருந்த பற்றற்ற மனப்பான்மையும்... ஒருமுகப்பட்ட கவனமும்...நமக்கு இருந்தால், நம்மாலும் கிதையின் பயனைப் பெறமுடியும். இதற்குத் தூய்மையான மனமும்... வலிமையான எண்ணங்களும் அவசியமாகின்றன.'
பகவான் சத்ய சாயி பாபா.
(Divine Discourse, Sep 27, 1960. தமிழாக்கம்... அடியேன்)
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment