'பிரசன்னம்' என்பதை, 'ஒரு சந்தேகத்திற்கான தெளிவு...' என்பதாக எடுத்துக் கொள்ளாலாம்.
ஒரு 'தெளிவான பதில்' உருவாக வேண்டுமெனில், முதலில் 'தெளிவான கேள்வி' அமைய வேண்டும். கேட்பதில் தெளிவு இருந்தால், அதற்கான பதிலும் தெளிவாக இருக்கும்.
நாம் 'மேற்கொள்ளப் போகும்'... அல்லது, 'எதிர் கொள்ளப் போகும்,,,' ஒவ்வொரு செயலுக்குமான வழி வகைகளை, ஜாதகத்தில் அறிந்து கொள்வது... என்பது, மிகக் கடினமான கணிதமுறைகளுடன் கூடியதாக இருப்பதால், அதற்கான பொறுமையும்... கால அவகாசமும்... நமக்குக் கிடைப்பதில்லை/
ஆகவே, ஒரு செயலை மேற்கொள்ள திட்டமிடும் போது,
- அதில் நாம் ஈடுபடலாமா ?.
- அதில் ஈடுபடக் கூடிய சக்தி நம்மிடம் உள்ளதா ?
- அந்த செயலுக்கான விளைவுகள் எவ்வாறு இருக்கும் ?
- அதில் ஈடுபட வேண்டும் எனும் போது, அதை எவ்வாறு கையாள்வது ?
என்ற கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால், அந்த செயலில் நாம் தைரியமாக இறங்கிவிடலாம்.
இந்தக் கேள்விகளுக்கான பதிலை, நமது ஜாதகத்தில் ஆய்ந்து தேடுவதை விட, நமது 'கர்ம வினைகளை' பூரணமாக அறிந்திருக்கிற, அந்தப் 'பரம்பொருளிடம்' கேட்டறிவது மிகவும் இதமானதாக இருக்கும். இவ்வாறு கேட்டறிவதே, 'பிரசன்னம்' என்பதாகும்.
இந்த முறையில் அறியப்படும் விஷயங்கள் யாவும், இந்தக் குறிப்பிட்ட செயலுக்குண்டான, 'கேள்விக்கான பதில்களே' அன்றி 'ஏனைய நடை முறை செயல்ககளுக்கானது அல்ல...' என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சோழி... வெற்றிலை... சகுனங்கள்... திருஉளச் சீட்டு... என எண்ணற்ற பிரசன்ன முறைகள் இருந்தாலும், எந்த முறையில் கேட்கும் போதும், கேட்கும் 'பரம் பொருள் சக்தியிடம்' பக்தியும்...நமது கேள்வியில் தெளிவும்...இருத்தல் அவசியம். அது போலவே, கிடைக்கும் பதிலின் படி மாறாமல், நடந்து கொள்வதும் அவசியம்.
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment