'திருமூலர்' அரூளிய எண்ணிக்கையில் அடங்காத பாடல்களில், கைகளில் கிடைத்த 'மூவாயிரம் பாடல்கள்' மட்டுமே, 'திருமந்திரம்' என்கிற தலைப்பில், 'பன்னிரு திருமுறைகளில்', '10 ஆவது திருமுறையாக' தொகுக்கப்பட்டிருக்கிறது.
தான் பெற்ற 'ஆன்ம அனுபவத்தினை', ஒவ்வொரு படிநிலைகளாக, 'ஒன்பது 'தந்திரங்களாக' (இரகசியங்கள்) தான் ஒளி ரூபமாக வாழ்ந்திருந்த மூவாயிரம் வருடங்களில், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அனுபவமாக பாடல்களில் வடித்திருக்கிறார்... திருமூலத் தேவர்.
அதில் இந்தக் குறிப்பிட்ட பாடல்...
....7 ஆம் தந்திரத்தில், 4 ஆவதாக அமையும் 'சதா சிவலிங்கம்' என்ற 'சகஸ்ரத்தை' (ஆறாவது ஆதாரம்), சிரசின் உச்சி ஸ்தானத்தை, 'சதாசிவ ரூபமாக' வடித்து, அதிலிருந்து...'ருத்ரம்' என்ற அக்னியாகவும்'... 'ஈஸ்வரன்' என்ற 'ஜீவ சக்தி வாயுவாகவும்' (ஜீவனின் - சத்துவ குணம்)... வாயுவிலிருந்து 'வியர்வையாக', 'விஷ்ணு' என்ற 'ஜல ரூபமாகவும்' (ஜீவனின் - ரஜோ குணம்)... 'கெட்டிப்படுத்தப்பட்ட ஜடமாக', 'பிரம்மாவாகவும்' (ஜீவனின் - தாமஸ குணம்)... மாற்றமடைந்து விரிவடைகிறது. இந்த விரிவடைந்த 'ஜீவனின் ஐம்புலன்களின்' (பஞ்சேந்திரியங்கள்) வழியாகத்தான், ஜீவனது 'சக்தி' (கர்மேந்திரியங்கள்), 'முக்குணங்களாக' வெளியில் வந்து பிரகாசிக்கிறது... என்பதை, மிகவும் சூட்சுமமாக விளக்குகிறது.
'அஞ்சு முகமுள ஐமூன்று கண்ணுள
அஞ்சுனொடு அஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.'
பொருள் : சதாசிவனாக எங்கும் நிறைந்திருக்கிற பிரபஞ்ச நாயகன், ஒரு உருவைத் தாங்கும் போது, 'கிழக்கு - தெற்கு - மேற்கு - வடக்கு - உச்சி' என ஐந்து திசைகளில் ஐந்து முகங்களாகின்றான். ஒவ்வொரு திசையிலும் அவனது திருமுகத்தில், மூன்று கண்களும் (பதினைந்து...), இரண்டு கரங்களும் (பத்து...) அமைகின்றன. இந்த உடலில் ஐந்து கர்மேந்திரியங்களின் வழியாக, 'முக்குணங்களாக' (சத்துவம் - ராஜ்ஜஸம் - தாமஸம்) வெளிச்செல்லும், அந்த 'ஈஸ்வர சக்தியைக்' (ஜீவனின் கர்மம்) கட்டுப்படுத்தும், 'பஞ்சேந்திர்யங்களை' ஆளும் ஆயுதத்தைத் தரித்திருக்கிற... நம்பியான (சதாசிவன்) எம்பெருமான்தான் என்னுள்ளிலிருந்து அருள்கிறான்'.
திருமூலத் தேவரின் திருவடிகள் சரணம்.
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment