Monday, May 9, 2022

'நான் யார் ?'... பகவான் ஆதிசங்கரர்.


'மனமல்ல, அறிவல்ல, அகங்காரமும் உணர்வுமல்ல,

வானல்ல, வையமல்ல, நான் உலோகக் கனியுமல்ல,

நானே அவன், நானே அவன், நன்னருள்

பெற்ற ஆத்மாவே நான் !


பிறப்புமில்லை, இறப்புமில்லை, சாதி குலமேதுமில்லை ;

அம்மையுமில்லை, அப்பனுமெனக்கில்லை,

நானே அவன், நானே அவன், நன்னருள்

பெற்ற ஆத்மாவே நான் !

சிறகடிக்கும் சிந்தனையும் கடந்தே,

சீருருவம் பெற்ற அருவமேயான்,

அனைத்துயிரின் அங்கமெலாம் ஊடுருவி யான் நிற்பேன்

பந்தமெனும் பயமேதும் எனக்க்கிங்கில்லை ;

நான் சுதந்திரன் ; என்றுமே நான் சுதந்திரன்,

நானே அவன், நானே அவன், நன்னருள்

பெற்ற ஆத்மாவே நான். '


ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...