வானல்ல, வையமல்ல, நான் உலோகக் கனியுமல்ல,
நானே அவன், நானே அவன், நன்னருள்
பெற்ற ஆத்மாவே நான் !
பிறப்புமில்லை, இறப்புமில்லை, சாதி குலமேதுமில்லை ;
அம்மையுமில்லை, அப்பனுமெனக்கில்லை,
நானே அவன், நானே அவன், நன்னருள்
பெற்ற ஆத்மாவே நான் !
சிறகடிக்கும் சிந்தனையும் கடந்தே,
சீருருவம் பெற்ற அருவமேயான்,
அனைத்துயிரின் அங்கமெலாம் ஊடுருவி யான் நிற்பேன்
பந்தமெனும் பயமேதும் எனக்க்கிங்கில்லை ;
நான் சுதந்திரன் ; என்றுமே நான் சுதந்திரன்,
நானே அவன், நானே அவன், நன்னருள்
பெற்ற ஆத்மாவே நான். '
ஸாய்ராம்.

No comments:
Post a Comment