'திரிகோணங்கள்' என்ற லக்னம் ( 1 ஆம் பாவம் ), பூர்வம் ( 5 ஆம் பாவம் ), பாக்கியம் ( 9 ஆம் பாவம் ) என்பவைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 'விதி' என்ற 'பூர்வ பூண்ணியங்களை' வெளிப்படுத்தும் பாவங்களாக அமைந்திருக்கின்றன.
இந்தத் 'திரிகோண பாவங்களின்' தன்மைகளுக்கு ஏற்பவே , உலக வாழ்வை சுட்டிக் காட்டுகின்ற 'கேந்திரங்களின்', அதாவது லக்னம் ( 1 ஆம் பாவம் ), சுகம் ( 4 ஆம் பாவம் ), களத்திரம் ( 7 ஆம் பாவம் ), ஜீவனம் ( 10 ஆம் பாவம் ) ஆகியவற்றின் பாவங்களும் அமைந்து விடுகின்றன.
உதாரணமாக, 'விதியின்' வசம் சார்ந்த திரிகோண அமைவின் 'பூர்வ புண்ணிய பாவத்திற்கு' ( 5 அம் பாவம் ) 6 ஆம் இடத்தில் 'உலக வாழ்வின்' கேந்திரமான 'ஜீவன' பாவம் ( 10 ஆம் பாவம் ) அமைந்து விடுகிறது.
இது எதைக் குறிக்கிறது என்றால், அந்த ஜீவனின் 'பூர்வ புண்ணிய பலத்திற்கு' ஏற்பவே, உலக வாழ்வில் அது எதிர்கொள்ளப் போகும் 'ஜீவித' ( எதிர் கொள்ளும் அல்லது மேற்கொள்ளும் செயல்களுக்கான...) பாதையும் அமைந்து விடும் என்பதைத்தான்.
இதைத்தான், 'ஜோதிட சாஸ்திரம்' , 'பதவி பூர்வ புண்யானாம்...' என்ற சுலோகத்தின் வாயிலாக ஜீவனுக்கு முன் கூட்டியே அறிவித்து விடுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment