ஏழரை... அர்த்தாஸ்டமம்... கண்டம்... அஷ்டமம்... என, 'சனி பகவானின்' நிலையையும்,
நான்கு... ஏழு... எட்டு... என, 'செவ்வாய் பகவானின்' நிலையையும்,
1/7... 2/8... 5/11... என, 'ராகு - கேது' பகவான்களின் நிலையையும்,
மூலம்... பூராடம்... ஆயில்யம்... என, நட்சத்திரங்களை முன்னிருந்தியும்,
பித்ரு... புத்ர... களத்திர... என, தோஷங்களையும்,
சஷ்டாங்கம்... கால சர்ப்பம்... என, யோகங்களையும் சுட்டிக் காட்டி,
ஜாதகர்களை 'மிரள' வைப்பதை தவிர்த்து விடுதல் நன்று.
மாறாக,
கிரக அமைவுகளின், ஸ்தான பலம்... ஆதிபத்திய பலம்... பார்வை பலம்... என்றும்,
ஆட்சி... உச்சம்...நீசம்... நட்பு... திக் பலம்... வர்க்கோத்துமம்... என, கிரக நிலைகளையும்,
திரிகோண... கேந்திர... உப-ஜெய... மறைவு... என்ற அமைவுகளையும்,
கிரகங்கள் நட்சத்திர சாரங்கள்... சாராதிபதிகளை ஆளும் கிரகங்கள்... நவாம்ஸத்தில் அவற்றின் பலம் மற்றும் பலவீன... நிலைகளையும்,
ஜாதகரின் வயது... ஜனன கால தசா இருப்பு... அதிலிருந்து ஜாதகர் கடந்து வந்திருக்கும் தசாக்கள்... தற்போதைய தசா... புத்தி... அந்தரம்... என்ற கணக்கீடுகளையும்,
ஆய்ந்து, அவற்றை அடிப்படையாக வைத்து, பலன்களை அளிக்கும் போது... அது ஒரு 'முழுமையான அனுபவமாக' மலர்ந்து விடுகிறது.
இதற்குத் தேவை, 'பொறுமையும் - நிதானமும்' தான்... இது இருவருக்கும் (ஜோதிடர்க்கும் - ஜாதகருக்கும்) பொருந்தும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment