எண்ணற்ற சூட்சுமங்களுடன்தான் 'இராசிக் கட்டம்' அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பாவங்களுக்கும் நேர் எதிர் பாவங்களாக 7 ஆம் பாவகம் அமைந்து விடுகிறது. உதாரணமாக 'லக்னம்' என்ற 1 ஆம் பாவத்திற்கு நேரெதிர் பாவமாக 7 ஆம் பாவமான (களத்திரம் - தொடர்பு - நட்பு) என்ற பாவம் அமைகிறது.
இவ்வாறு அமையும் அனைத்து பாவகங்களிலும், மூன்று பாவங்கள் மிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. 1 ஆம் பாவம் (லக்னம்), 4 ஆம் பாவம் (கல்வி-சுகம்-தாய்), மற்றும் 5 ஆம் பாவம் (.பூர்வம்).
ஏனெனில், லக்னம் என்ற பாவம் (1 ஆம் பாவம்), ஜீவனைக் குறிக்கிறது. இவ்வுலகில் இந்த ஜீவன்வாழும் நெறிமுறையான வாழ்விற்கு ஏற்றபவே, அதற்கான உலகத் தொடர்புகளும் அமைகின்றன. ஆதலால்தான், லக்னத்திற்கு நேரெதிரான 7 ஆம் பாவம் (களத்திரம் - தொடர்பு - நட்பு) 'கேந்திரங்களில்' ஒன்றான, சுபமான பாவமாக அமைந்து விடுகிறது.
அடுத்ததாக, 4 ஆம் பாவம், ஜீவன் இந்த உலகில் பெறும் 'அறிவு' என்ற கல்வி - கேள்விகளைக் குறிக்கிறது. ஜீவன் பெறும் அறிவையும், அனுபவத்தையும் கொண்டுதான், அதற்கு விதிக்கப்பட்டிருக்கிற 'கடமைகளைக்' கடந்து போக முடிகிறது. ஆதலால்தான், 4 ஆம் பாவத்திற்கு நேரெதிரான 10 ஆம் பாவம் (ஜீவனம் - கர்மம்) கேந்திரங்களில் ஒன்றான, சுபமான பாவமாக அமைந்து விடுகிறது.
இறுதியாக, 5 ஆம் பாவம், ஜீவன் சுமந்து வந்திருக்கிற 'கர்ம வினைகளை' குறிக்கிறது. அந்த வினைகளின் 'பாப - புண்ணிய வினைகளின் விளைவுகளை' (இன்ப - துன்பங்களை...) ஜீவன் எவ்வாறு சமமாக... விருப்பு - வெறுப்பின்றி... பற்றற்று... எதிர்கொள்கிறதோ, அதற்கேட்பவே, அந்த ஜீவன் இவ்வுலகில் தனது ஆனந்தத்தை பெருக்கிக் கொள்கிறது. ஆதலால்தான், 5 அம் பாவத்திற்கு நேரெதிரான 11 ஆம் பாவம் (லாபம்) 'பண பர ஸ்தானங்களில்' (2 மற்றும் 11 ஆம் பாவங்கள்) ஒன்றாக அமைந்து விடுகிறது.
இந்த ஜீவ அனுபவத்தைத்தான், 'அறத்தில்' ஒன்றாக, 'வள்ளுவப் பெருந்தகை', 'கற்க கசடற கற்பவை கற்ற பின்... நிறக அதற்குத் தக', என்ற குறளில் வலியுருத்துகிறார்.
மாறாக, ஏனைய பாவங்கள் அனைத்திற்கும் நேரெதிரான 7 ஆம் பாவமாக, ஒரு 'மறைவு ஸ்தானம்' (3 ஆம், 6 ஆம், 8 ஆம் மற்றும் 12 ஆம் பாவங்கள்) அமைவதிலிருந்தே, இதனை உறுதி செய்து கொள்ளலாம்.
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment