எண்ணங்களை, வண்ணங்களை மூலமாகக் கொண்டு வெளிப்படுத்தும் 'ஓவியக் கலையில்'...
- சிவப்பு வண்ணம் : விடியல்...புரட்சி... ஆளுமை... அதிகாரம்... நிர்வாகம்... ஒழுங்கு... நேர்மை...என்பனவற்றையும் ;
- வெண்மை வண்ணம் : அமைதி... ஒழுங்கு... சமாதானம்... தூய்மை... ஆனந்தம்... சுகம்... என்பவனவற்றையும் ;
- பச்சை வண்ணம் : பரந்து விரிதல்... பசுமை... மலர்ச்சி... அறிவு...புத்துணர்ச்சி... என்பனவற்றையும் ;
- நீல வண்ணம் : தூரம்... தொலைவு... எல்லையற்ற... உள்ளார்ந்த விருப்பங்கள்... என்பனவற்றையும் ;
- மஞ்சள் வண்ணம் : அமைதி... சாந்தம்... புனிதம்...ஆரம்பம்... என்பனவற்றையும் ;
- கருப்பு வண்ணம் : இருள்... துக்கம்... துயரம்... அறியாமை... என்பனவற்றையும்;
... வெளிப்படுத்துவதாக அமையும்.
இந்த வன்ணங்களின், எண்ணங்களுக்கு அடிப்படையாக இருப்பது, 'ஜோதிடக் கலைதான்'. ஜோதிடக் கலையில், கிரகங்களுக்குறிய வண்ணங்கள் என, ஒன்பது கிரகங்களுக்கும், தனித் தனியே, வண்ணங்கள் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
சூரியன் - செவ்வாய் : சிவப்பு வண்ணம்.
சந்திரன் - சுக்கிரன் : வெண்மை வண்ணம்.
புதன் " பச்சை வண்ணம்.
குரு : மஞ்சள் வண்ணன்.
சனி : கருப்பு வண்ணம்.
ராகு : கரு நீல வண்ணம்.
கேது : மஞ்சள் மற்றும் கலவைகள் கலந்த வண்ணம்.
ஒரு ஜீவனின் வாழ்வில்... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப, இந்த வண்ணங்களும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கும். இதை அனுபவத்தில் கண்டு உணரலாம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment