Tuesday, November 2, 2021

ஞானக் களஞ்சியம் : 'சுமப்பது யார்...?'


அழகிய பட்டு உடைகளை உடுத்தியிருந்த ஒரு இளம்பெண், சேறும் சகதியுமாக இருந்த சாலையைக் கடப்பதற்கு தயங்கியபடி நின்றிருந்தாள். 

அவ்வழியே வந்த இரு துறவிகளில் ஒருவரான இளம் துறவி, 'ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்... ஏதேனும் உதவி தேவையா... ?' என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், 'எனது தோழியின் திருமணத்திற்குச் செல்கிறேன். இந்த சகதி நிறைந்த சாலை, எனது உடைகளை அசுத்தப் படுத்தி விடும் என்ற அச்சத்தில், இதை கடப்பதற்கு பயந்து கொண்டு, இங்கேயே நின்று கொண்டிருக்கின்றேன்.' என்றாள்.

'கவலைப்படாதே... நான் உன்னை சுமநதபடியே, இந்தச் சாலையை கடக்க வைத்து விடுகிறேன்' என்று கூறி, அந்தப் பெண்ணை இரு கைகளிலும் சுமந்த படியே, சாலையைக் கடந்து, அடுத்தப் பகுதியில் இறக்கிவிட்டார். மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி விட்டு, ஒடி மறைந்தாள் அந்த இளம் பெண்.

தங்களது பயணத்தைத் தொடரும் போது, தன்னுடன் வந்த, தனது சகோதரத் துறவியின் முகத்தில் கோபத்தீ சுடர் விடுவதைக் கண்ட இளம் துறவி, 'உங்கள் முகத்தில் சிறு மாறுதல் தென்படுகிறதைப் போல இருக்கிறதே... காரணத்தை அறிந்து கொள்ளலாமா ?' என்று கேட்டார்.

' உங்களது செயல்தான் அதற்குக் காரணம்.' என்ற சகோதரத் துறவி, 'நமது பாதையில் குறுக்கிட்ட அந்த இளம் பெண்ணை, துறவியாகிய நீங்கள், தூக்கிச் சுமப்பது துறவுக்கு அடையாளமானதா ? என்று கேட்டார்.

புன்னகைத்த இளம் துறவி, 'அதை நான் அங்கேயே இறக்கி வைத்து விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறிர்கள் !' என்றபடியே, மௌனமாக பயணத்தைத் தொடர்ந்தார்.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...