'எனது வாழ்வில் திருப்தி இல்லை... சுவாமி !' என்று கேட்டு வந்த கல் உடைக்கும் தொழிலாளியிடம், 'இனி, நீ நினைக்கும் வாழ்வைப் பெறுவாய் !' என்ற வரத்தை அருளினார் ஞானி.
நகரில் நுழைந்தவுடன், அவர் கண்களில் பட்டவர் ஒரு வியாபாரி. அந்த வியாபாரியின் செல்வச் செழிப்பைப் பார்த்து, அவராக மாற வேண்டும் என்று நினைத்தவுடனேயே, ஞானியின் அருளால் ஒரு வியாபாரியாக மாறி விட்டார்.
வியாபாரியானபின், கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்கச் சென்ற போது, அரசாங்க அதிகாரி ஒருவரின் முன் கை கட்டி நிறக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த கணத்தில், தான் ஒரு அரசாங்க அதிகாரியாக மாற வேண்டும் என்று நினைத்தார், உடனே அதிகாரியாக மாறிவிட்டார்.
வெளியே கிளம்பி வீதியில் நடக்கும் நேரம், தலையைச் சுடும் அக்னியாக தகிக்கும் சூரியனைப் பார்த்து, அதன் வலிமையை நினைத்து, தான அந்த சூரியனாக மாறினால் என்ன... என்று நினைத்தவுடனேயே, தான் சூரிய பகனாகவே மாறி விட்டார்.
சற்று நேரத்தில், தன்னை ஒரு மேகம் மறைக்கவே, மேகத்தின் வலிமையில் ஆசைப்பட்டு, அந்த மேகமாக மாறினார். அந்த மேகத்தை ஒரு ,மலை தடுக்கவே, மலைதான் வலிமையானது என்று அந்த மலையாக மாறினார்.
திருப்தியாக அமர்ந்திருவருக்கு, தன்னிலிருந்து ஒரு பகுதி சரிந்து விழுவது தெரிந்தது. அந்தப் பகுதியை ஒரு கல் உடைக்கும் தொழிலாளி சுக்கு நூறாக உடைப்பதைக் கண்டதும்... மீண்டும் தனது இயல்பான கல் உடைக்கும் தொழிலே பலமானது என்ற உண்மை புரிந்தது.
தனக்குக் கிடைத்திருக்கும் பிறப்பே, உயர்வானது என்ற ஞானம் பிறந்ததும், பிறவியின் பயனுணர்ந்த மலர்ச்சியில், ஞானியின் திருவடிகளை நன்றியுடன் பணிந்தார்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment