Friday, November 5, 2021

ஞானக் களஞ்சியம் : 'எது பக்தி...?'


 பகவான் ரமணர், பழைய ஹாலில் அமைதியாக, ஆழ்ந்த மோன நிலையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னதாக பக்தர்கள் சிலரும் அதே மௌனத்தில் கலந்திருந்தார்கள்

அப்போது, ஹாலுக்கு வெளியே 'டக்... டக்' என்ற ஒரு சப்தம் கேட்டது. யாரோ ஒரு பார்வையற்றவரின் கைத்தடியின் சப்தமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், ஒரு பக்தர் வெளியே சென்று பார்த்த போது, பார்வையற்ற ஒரு இஸ்லாமிய பெரியவர் நிறபதைக் கண்டு அவரை உள்ளே அழைத்து வந்தார்.

உள்ளே நுழைந்த பெரியவர், 'பகவான் எங்கே இருக்கிறார்...?' என்று கேட்டார். அழைத்து வந்த பக்தர், 'பகவான் இங்கே உங்களின் முன்னால்தான் அமர்ந்திருக்கிறார். நமஸ்காரம் செய்து விட்டு அமர்ந்து கொள்ளலாம்.' என்றார். 

பகவானின் முன்னால அமர்ந்து, தன்னை அழைத்து வந்தவரிடம், தான் பெஷாவாரிலிருந்து வருவதாகவும், அங்கிருக்கும் மதரஸாவின் மௌளவி என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டார். ஒரு முறை பகவானைப் பற்றி யாரோ ஒருவர் படிக்கக் கேட்டதாகவும், அதிலிருந்து பகவானையே தனது தந்தையாக பாவிப்பதாகவும் கூறினார். அவரை தரிசனம் செய்வதற்காகவே, ரயிலகள் மாறி, மாறி இந்த ஆயிரக்கனக்கான மைல்களை கடந்து வந்திருப்பதாகவும் கூறினார்.

மோன தவத்திலிருந்து வெளிப்பட்ட பகவான், அந்தப் பெரியவர் பேசுவதை மௌனமாக கேட்டபடி அமர்ந்திருந்தார். 

பெரியவருக்கு உதவியத் தொண்டர், 'பகவானிடம் ஏதேனும் கேட்க வேண்டுமா...?' என்றார். அதற்கு அந்த பெரியவர், 'ஒண்ணும் இல்லை... பகவானைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை... பார்த்துட்டேன். பகவான் என்ன செய்யனும்னு சொல்றாரோ... அதை செய்யப் போறேன்... அவ்வளவுதான்.' என்றார்.

அவரின் பதிலைக் கேட்ட பகவானின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...