'தூரம்தூரம் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்தூணர்ந்து கொள்ளுமே.'
பிறப்பு... இறப்பு... என்ற இந்த சுழற்சிக்குள், எத்தனையோ பிறப்புகளை பிறந்து இளத்த பின்னரும், இந்த சுழற்சியில் இருந்து விடுபட முடியாது தவிக்கும் ஜீவர்களுக்கான பாதையைத்தான், சித்த புருஷர்கள் திறந்து விட்டார்கள்.
வீட்டு பூஜை அறைக்குள் ஆரம்பித்த தேடல்... அருகாமையிலிருந்த ஆலயம் தொடங்கி... என்றாவது ஒரு நாள் 'திருக்கைலாயம்' சென்று தரிசித்து விட வேண்டும்... என்ற ஆவல் வரை செல்லும் என்றால்... எங்குதான் இந்தப் பயணம் முடியப் போகிறது... ?
இந்த நெடியத் தேடலுக்கான காரணம்... இந்தப் பயணத்தின் ஏதாவது ஒரு கணத்தில்... நமது தேடலின் முடிவான 'பரம்பொருள்' நமக்குள்ளேயே இருந்து அருள் செய்து கொண்டிருக்கிறார்... என்ற உண்மையை உணர்ந்து கொள்வதற்காகவே.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment