திருச்சியின் மையப் பகுதியில் அமைந்த ஒரு புரதானமான, 'சிவாலயத்திற்கு' அருகில் வசித்து வரும் ஒரு நண்பர், ஜாதக ரீதியான தனது சந்தேகங்களைத் திர்த்துக் கொள்ள ,எம்மை அணுகினார்.
தான், தனது குடுமம், சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகள் என, அனைத்து ஜாதகங்களையும் உள்ளடக்கிய சந்தேகங்களை, கேள்விகளாகத் தொகுத்து வைத்திருந்தார். அந்தக் கேள்விகள் அனைத்தும் அவரது குடும்பத்து அங்கத்தினர்களின் முழுமையற்ற வாழ்க்கையைப் பற்றியதாக இருந்தன.
தொழில் அமையாமை... குழந்தையின்மை... திருமணம் அமையாமை... உடல் உபாதைகள்...எதிர்ப்புகள்... கோர்ட் வழக்குகள்... என, குடும்பத்து அங்கத்தினர்கள் ஒவ்வொருக்கும், ஒவ்வொரு பிரச்சனையாக இருந்தது.
மிகவும் பக்தி சிரத்தையுள்ள குடும்பமாக இருந்தும், காரியங்கள் யாவிலும் தடைகள் ஏற்படுவதற்குக் காரணம் தெரியாமல் தவித்து வந்தார். ஒவ்வொரு செயலும் பெரிய முயற்சிக்குப் பின், கைகூடி வரும் வேளையில், கை விட்டுப் போவதை நினைத்து மனம் கலங்கி இருந்தார்.
நாம், மேலோட்டமாக ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஜாதகத்தை எடுத்து பார்த்த போது, அந்தந்த ஜாதகங்களில், 'குரு பகவானின்' நிலை மிகவும் பலவீனமாக இருந்தது. குடும்பத்தின் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும், ஒன்று இராசியில் அல்லது நவாம்ஸாத்தில், 'குரு பகவான்' மறைந்தோ... நீச நிலையிலோ... பாதக, மாரக ஸ்தானங்களிலோ... அமைந்திருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவரது பூர்வத்தைப் பற்றி விசாரித்த போது, இரண்டு தலைமுறைகளாக தற்போது வசிக்கும் வீட்டில் இருப்பதும்... அந்த வீட்டை இவரது தந்தையார் காலத்தில் புதுப்பித்ததும் தெரிந்தது. வீடட்டின் பூர்வத்தைப் பற்றி விசாரித்த போது, அது, சிவாலயத்தின் சொத்து என்பதும்... அந்த வீட்டைப் புதுப்பிக்கும் போதும், அதற்கான வாடகை நிர்ணயத்தின் போதும், அந்த சொத்தின் ஒரு பகுதியை ஆலய நிர்வாகம் திருப்பிக் கேட்ட போதும், சர்ச்சைகள் உருவாகி, இவ்ர்கள் நீதி மன்றம் சென்று தடையுத்தரவு பெற்றதும்... ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை மட்டும், தந்தையாரின் காலத்தில் இருந்து, நீதிமன்றத்தில் செலுத்தி வருவதும் தெரிய வந்தது.
வழக்கு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பதாகக் கூறியவரிடம்... நாம், ஆலய நிர்வாகத்திடம் சென்று சமாதான முறையில் பேசி, இந்த சச்சரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதுதான், இந்த சூழல்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, என்பதை உணர்த்தினோம். அவரும் அது போலவே, ஆலய நிர்வாகத்திடம் சமரசம் பேசி, தொடரும் காலங்களில் வாடகையை உயர்த்துவதற்கும்... காலியான ஒரு பகுதியை ஆலயத்திடம் ஒப்படைப்படப்பதற்கும்... சம்மதம் தெரிவித்தார்.
காலங்கள் கடந்தன... அவரின் கடமைகள் யாவும் தடங்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நீங்கப் பெற்று, முழுமையாக நிறைவேறின. அதே சிவாலயத்தில், அவரது குடும்பத்தினரின் தொண்டுகளும், இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment