ஐப்பசி மாதப் பௌர்ணமி நாளை, அன்னாபிஷேக நாளாகக் கொண்டாடி மகிழ்கொறோம்.
'அன்னமே பிரதானம்... அன்னமின்றி ஒரு க்ஷணமும் வாழ முடியாது... அன்னமே பிரம்மம்...!' என்ற வாக்கியங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அன்னம் என்பது உணவாக மட்டும் இருந்தால், அது இல்லாமல் உயிர் வாழ முடியாத நிலைதான் ஏற்படும்.
ஆனால், அவ்வாறு நிகழ்வதில்லை. அன்னமின்றி ஒரு நாள், இரண்டு நாள் என உயிர் வாழும் ஜீவர்களை நம்மால் காண முடிகிறது. ஆனால், 'உயிர் வாழ அன்னம் தேவை...' என்றும், 'அன்னமே பிரம்மம்...' என்றும், 'அன்னமின்றி ஒரு க்ஷணமும் வாழ முடியாது...' என்ற வாக்கியங்களும் எதைக் குறிப்பிடுகின்றன...? என்று ஆய்ந்தால், ஒரு சூட்சும உண்மை வெளிப்படும்.
அது, அன்னம் என்ற சொல், 'பிராணன்' என்ற 'மூச்சுக் காற்றை' குறிப்பிடுகிறது. நமது வாயின் உட்புற மேல் பாகத்தை, 'அன்னாக்கு' என்றழைப்பதிலிருந்தே வெளிப்படுகிறது. அந்த உள் பகுதியின் மேலும், கீழும்தான் 'பிராணன்' என்ற சுவாசம் நிகழ்கிறது.
இந்த சுவாசம், ஒரு கணம் நின்று விட்டால், உயிர் இந்த உடலில் தங்குவதில்லை. ஆதலால், அன்னம் என்பது பிராணனாகிய சுவாசம்தான். அந்த பிராணனாகிய சுவாசம் இருக்கும் வரையில்தான், உயிர் வாழ முடியும். அந்த பிராணனாகிய சுவாசத்தை, பிரணாயமம் என்ற யுக்தியைக் கொண்டு, 'சதா பிரணயாமியாக' இருந்து... பரப்பிரம்மமான, பரமேஸ்வரனை தியானிப்பதுதான்... அன்னாபிஷேகம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment